UNLEASH THE UNTOLD

Tag: pregnancy

மூன்றாம் மும்மாதம்

ஆரோக்கியமான குழந்தை எனில் 3 கிலோவிற்கு மேல் இருக்கும் தற்போது 50 செமீ நீளம் இருக்கும். 40வது வாரத்தில் இயல்பாகப் பிரசவவலி ஏற்படும். வெளியே வரவும், வெளியே வந்தால் தனித்து சுவாசிக்கவும் தனித்துக் கழிவுகளை அகற்றவும் குழந்தையால் முடியும். அதனால் 100% தகுதி அடைந்து குழந்தை பிறக்கிறது இவ்வாரத்தில்.

இரண்டாம் மும்மாதம்

18வது வாரம்

குழந்தை விரல் சூப்புவது, கொட்டாவி விடுவது இதை எல்லாம் தெளிவாக ஸ்கேன் மூலம் காணமுடியும் இவ்வாரத்தில். தாயின் வயிற்றில் லேசான அசைவை கொடுத்தால்கூட கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கண் இமைகள், கண்மணிகள் அசையும். தாயின் தொப்புளுக்குச் சற்று கீழேவரை கர்ப்பப்பை வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

முதல் மூன்று மாத கர்ப்ப காலம்

8வது வாரம்

கண் இமைகள் திறந்து மூடும். விரல்கள் வளரத் தொடங்கும்.

வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் வாரம் இது. ஒரு பீன்ஸ் பருப்பின் அளவிற்குக் கரு வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு உடல்கோளாறுகளை உண்டாக்குகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அந்த நபருக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். கருவுற்ற தாய்மார்கள் 20% கர்ப்பகால நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். கரு உருவாவதற்கு முன்பு சர்க்கரை அளவு சரியாக இருந்து, கருவுற்ற பிறகு சர்க்கரை அளவு அதிகரித்தலே கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோயை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே கர்ப்பகாலத்தில் குறைந்தது மூன்று முறையாவது ரத்தத்தில் சர்க்கரை உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது மிகமிக அவசியம்.

பிரசவத்துடன் முடிந்துவிடுவதில்லை...

குழந்தை பெற்ற பெண்களுக்குப் போதிய ஓய்வு தேவை என்பதை குடும்பத்தினரும், உறவினர்களும் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையைப் பார்க்கச் செல்கிறேன் என நேரங்காலம் தெரியாமல் சென்று உறங்கும் தாயையும் குழந்தையையும் எழுப்பிவிடுவதைத் துளிக்கூட லஜ்ஜையின்றி செய்வதைத் தவிருங்கள். அதேபோல அவள் உடல் நிலை, மனநிலை பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், குழந்தைக்குப் பேர் வைக்கிறோம், தீட்டு கழிக்க ஹோமம் பண்ணுகிறோம் என டார்ச்சர் செய்யாமல் இருப்பது அந்தப் பெண்ணுக்கு நீங்கள் செய்யும் கூடுதல் உதவி.

உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?

முன்பு அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும்தாம் தங்களின் பேறுகால அனுபவத்தைக் கூறி குழப்பி அடித்து, பீதியை உருவாக்கினார்கள் என்றால், இன்று அதனை இணையம் எடுத்துக் கொண்டுள்ளது. தேவை இல்லாததை கூகுள் செய்து கண்டதையும் கற்பனை செய்துகொண்டு, சின்ன விஷயங்களுக்குப் பூதாகரமாக பயந்து, மன நலம் தொலைத்து, யூ டியூபில் அரைகுறை வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளை, டிப்ஸ்களைப் பின்பற்றுகிறேன் என உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு நான் கூற வருவது ஒன்றே தான், உங்கள் உடல்நிலை குறித்து கூகுளிலில் விடை தேட முயற்சிக்காதீர்கள். நல்ல கைனாகாலஜிஸ்டிடம் சரணடைந்து விடுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

<strong>கருப்பைக்குள் படியும் நச்சுப்புகை</strong>

காற்று மாசுபாடுகளிலேயே மிகவும் கவலையளிக்கும் ஒரு வகைமை என்பது உட்புறக் காற்று மாசு (Indoor Air Pollution). அதாவது ஒரு வீட்டுக்குள்ளோ கட்டிடத்துக்குள்ளோ இருக்கும் காற்று மாசு இது. காற்று மாசு என்றதுமே நமக்கு வானுயர தொழிற்சாலைக் கட்டிடங்களில் இருந்து வெளியாகும் புகைதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, வெளிப்புறக் காற்று மாசுக்கு ஈடான பாதிப்பு வீட்டுக்குள்ளும் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

<strong>திருமணமும் தாய்மையும்</strong>

ஓர் ஆண்/பெண் திருமணத்துக்குப் பெற்றோர் மட்டும்தான் காரணமா? இல்லை. நாகரிகமான சமூகம் என்று பீற்றிக்கொள்ளும் நம் சமூகத்தின் மறைமுக அழுத்தமும் காரணம். குறிப்பிடதக்க வயதில் வீட்டில் பெண் அல்லது ஆண் இருந்தாலே, ‘என்ன இன்னும் உங்க பிள்ளைக்குத் திருமணம் செய்யவில்லையா?’ எனப் பலர் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் அந்தப் பெற்றோரையும் பிள்ளைகளையும் கேட்டு சங்கடப்படுத்துவார்கள். இது அநாகரிகம் என்ற சுரணை இன்றுவரை நமது பொது சமூகத்துக்கு இல்லை.

மூடநம்பிக்கைகளும் மகப்பேறும்

‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது.

கடுஞ்சூல் மகளிர்!

பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!