குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்...
என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.