UNLEASH THE UNTOLD

உறவுகளில் மகிழ்ச்சியைப் பெற...

தனக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்ற தெளிவு இருப்பதால், தங்களுக்காகத் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

செவிலித்தாய்கள்

செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?           

தேவியின் மூர்த்தி

“அடேய் காலிப்பயலே… அந்த சின்னப்புள்ளய என்னடா பண்ண??”
“அம்மாடி.. அழாத… சொல்லு. உன்னை என்ன செஞ்சான் இவன்? பயப்படாம சொல்லுடா…”, என்றார் தலைமை ஆசிரியர்.

கோபத்தை வெல்வது எப்படி?

இயல்பில் மனிதர்கள் எல்லாருமே அன்பிற்கு ஏங்குபவர்கள்; அன்பானவர்கள். ஆனால், அவர்களுக்குத் தமது வாழ்வில் கிடைத்த மற்றும் கிடைக்காததன் ஏக்கம் கோபம் தன்னிரக்கம் ஏமாற்றம் வெறுப்பு எல்லாமே எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தனது வாழ்வை மற்றவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்.

நேர் என்பதுதான் நேரா?

“அவர்களே சொல்லாமல் இவர் இன்ன பாலின ஈர்ப்பு உடையவரா என்று அனுமானித்துக்கொள்வதுதான் நாம் அவர் மீது நிகழ்த்த முடிகிற உச்சபட்ச வன்முறை. அதை ஒரு நாளும் யார் மீதும் நாம் நிகழ்த்திவிடக்கூடாது.”

பாலின பேதம் உண்டா?

”ஆல்மோஸ்ட் எல்லாரும் அப்பிடித்தான் நெனப்பாங்க. மார்க்லாம் பிரச்னை இல்லை. பொதுவாவே அம்மா வந்தா நெறய கேள்வி கேக்க மாட்டாங்க, இதெல்லாம் உனக்குப் புரியாதுன்னு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. எனக்கும் அதைக் கேக்கும்போதே கஷ்டமா இருக்கும். ஏன்னு கேளுங்க?”

சமத்துவம் எப்படிச் சாத்தியம்?

கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் சமமாகப் பகிந்து வாழும் சமூகம் பொதுவுடைமை சமூகமாக இருக்கும். எனவே, பெரும்பான்மையான கனடிய பழங்குடி மக்கள் பொதுவுடைமை சமூகமாக இருந்ததால் அவர்கள் சமூகங்களில் சமத்துவம் இருந்தது; குறிப்பாகப் பாலின சமத்துவம். இன்றைய நிலையில், நம் சமூகத்தில் எண்ணற்ற வகைகளில் வேறுபாடுகளும் மேல் கீழ் என்ற படிநிலைகளும் உள்ள சிக்கலான சமூகமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து எண்ணற்ற அடக்குமுறைகளும் நடக்கின்றன. சமத்துவமான சமூகம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த கேள்வி. இந்தக் கேள்வியைச் சில நண்பர்களிடம் எழுப்பிய போது தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பதிலாகக் கிடைத்தது.

வாழ்தல் இனிது; உறவுகளோடு வாழ்தல் இனிதினும் இனிது!

உணர்வுகளைப் பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு. உணர்வுகள் மொத்தமும் உங்களுடையவையே. உங்களால் உணரபட்டவை. உங்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பவை. இது உறவுகளால் ஏற்படும் உணர்வுகளுக்கும் பொருந்தும்.

துலங்காத மர்மங்கள்...

புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இலங்கையை ஆள்வார்கள்’ என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. அதனால் மகாவம்ச கால சந்திரபானுவும் சரித்திரக் கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஐந்து வெவ்வேறு இடங்களில் அந்தப் பல் பாதுகாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஒவ்வோர் அரசரும் ஒவ்வொரு பேழையில் வைத்துப் பாதுகாக்க, இப்போது பல் ஏழு பேழைகளுக்குள் பத்திரமாக பொதியப்பட்டுள்ளது. “மூன்று அங்குல அளவில் இருக்கும் அந்தப்பல், செம்பருத்தி பூக்களின் நடுவிலிருக்கும் காம்பு போல, வேருடன் காணப்படும்” என்று அந்தப் பிக்கு சொல்ல, “மூன்று அங்குல நீளத்தில் பல்லா?” என்று தலை சுற்றியது.

கோபம் பிறரை மட்டுமல்ல, தன்னையும் அழிக்கும்...

கோபம் என்பது சிறு தீப்பொறி போல், தான் பற்றித் தொடங்கியவற்றிலிருந்து யாவருக்கும் தொற்றி எல்லோரையும் அழிக்க வல்லது மட்டுமல்ல, தன்னையே எரிக்கும் பெரும் தீ. அதைச் சுடராக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட நமது கைகளில்தாம் உள்ளது.