UNLEASH THE UNTOLD

அவள் அவன் அவர்கள்

“ஐயோ, மாட்டேன் மாட்டேன். மூனு வேளையும் போன் பண்றேன். அம்மாட்ட தினமும் எலுமிச்சை சாதமே உனக்குக் கட்டித் தரச் சொல்றேன். சரியா? தயவுசெஞ்சு என்னைக் கிளம்ப விடுடி, நேரமாச்சு. வேலைய விட்டுட்டுப் போறேன்னு நான் நேரத்துக்கு வர்றதில்லைன்னு எல்லாரும் பேசுவாங்க” என்றாள் மாது. இதற்கு மேல் என் அழுகையைக் கேட்கவா வேண்டும்?

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் தம்புளா

கொழும்பில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் மாத்தளை மாவட்டத்தில் இருக்கிறது தம்புளா. 160 மீட்டர் உயரமுள்ள சிறு சிறு குன்றுகள் பரவலாகக் காணப்படுகிறன். அந்தக் குன்றுகளின் மீது தொடர்ச்சியான 5 குகைகள் கொண்ட ஒரு தொகுதியாக இருக்கிறது அந்தக் குடைவரைக் கோயில். உலகின் பெருமதிப்பை அக்குகைகள் பெற்றுள்ளதற்கு, அங்கு பெருந்தொகையாகக் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களுமே காரணமாக இருக்க முடியும். இவ்விடம் முன்பு ஜம்புகோள என அழைக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.

உண்மையா எனக் கண்டறிய ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்!

கூகுள் எப்படி வார்த்தைகளைத் தேடுகிறதோ அப்படிப் படங்களையும் தேடித்தரும். ஒரு படம் இதற்கு முன் வேறெந்த வலைத்தளத்தில் பதிவாகி இருக்கிறது எனப் பின்னோக்கித் தேடித்தருவதால்தான் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச் எனப்படுகிறது. இப்படிப் படங்களைத் தேடுவதற்கு கூகுள் தளத்தில் மைக் ஐகான் அருகில் கேமரா போல இருக்கும் ஐகானை அழுத்த வேண்டும். https://images.google.com/ தளத்திற்கும் செல்லலாம்.

மாமியார் மெச்சும் மருமகன்!

ஆதிக்குச் சுர்ரென்று கோபம் மூண்டது. “ஆரம்பிச்சிட்டியா? அதான் ஒண்ணா இருக்க முடியலன்னு என்னைப் பிரிச்சிக் கூட்டி வந்துட்டே. எங்கம்மா எப்பவோ வராங்க என்னைப் பார்க்க. அவங்களுக்காகச் சமைக்க நீ கஷ்டப்பட வேண்டாம். நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்.”

அறையில் யானை

ஒவ்வோர் இணையரினதும் நிதி இலக்குகளும் பார்வையும் நிச்சயமாக மாறுபடும். இருப்பினும், இணையர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதற்குக் கடமைப்பட்டவர்கள். நிதி நிலைமை அல்லது கடன் குவிப்பு என்று சங்கடமாக இருந்தாலும், துணையுடன் நேர்மையாக இருப்பது நிச்சயமாகச் சிறந்த கொள்கை என்பதில் சந்தேகமில்லை.

பெண்ணுடலை நேசிக்க விடுவோம்!

நம் உடல்வாகு மரபியல்படி நம்ம பாட்டி, அம்மாவுக்கு எப்படி இருக்கோ அப்படித்தான் நமக்கும் இருக்கும். அதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. இது நம் உடல், இயற்கை படைத்திருக்கு. சிறப்பா வைச்சுக்கணும்ன்னு நெனக்கணும். ஒருபோதும் நம் உடலை நாம் வெறுக்காம லவ் பண்ணணும்.

அவள்... அவன்... அவர்கள்...

அஃதர் அவளருகில் சென்று சில வார்த்தைகள் பேசிடத் தவித்தான். அவளின் மகிழ்ந்த முகம் அவனை ஆர்ப்பரிக்கச் செய்தது. ஆயினும் தன்னைக் கண்டதும் அவள் மகிழ்ச்சி தடம் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் கவ்வவே சில மணித்துளிகள் அவளின் அன்பு முகத்தைப் படம்பிடித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் இதயம் முழுதும் கனமாக, ஏக்கமாக, இன்று சற்று மகிழ்ச்சியாக மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.

எப்போதும் பாசிட்டிவாக இருக்கலாமே?

மருத்துவத்துறையில் பிளாஸிபோஎஃபெக்ட் (Placebo effect) எனச் சொல்வார்கள். நோயாளி ஒருவர்,மருத்துவரிடம் தன்னுடைய நோய்க்காக மருந்து வாங்கச் செல்கிறார். அவர் மருத்துவரின் மீதும், மருத்துவத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். டாக்டர் வெறும் விட்டமின் மாத்திரைகளைத்தான் தருகிறார், ஆனாலும் நோய்குணமாகிவிடுகிறது. இதுவே பிளாஸிபோ எஃபெக்ட்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் மாதோட்டம்!

அன்றொரு நாள், மாதோட்டத்தின் பொற்காலத்தில் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமின்றி தென்னிந்திய கடல் வணிகர்கள் தங்கள் சரக்குகளை சீனாவுக்குக் கொண்டு செல்லும்போதும் இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகத்தான் மாதோட்டம் விளங்கியது. மிகச் சிறந்த வர்த்தக நகரமாக உருவெடுத்தது. ஈழத்து உணவு வகைகள், முத்து பவளம், நவரத்தினங்கள், யானை, யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, கறுவாய், ஏலம் போன்ற பொருள்கள் மாதோட்ட துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட்டத்தில் வந்து குவிந்தன. செல்வம் பெருகியது, மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறார் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இண்டிக்கோ பிளஸ்தேஸ் தனது நூலில்.

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு…!

சட்டென்று எல்லா வேதனைகளும் மறந்து முகம் மலர்ந்தான் சிபி.
ஆயிரம் கஷ்டங்கள் திருமண வாழ்க்கையில் இருந்தாலும் மாமனார், மாமியார் கொடுமைகளைத் தினசரி சகித்தாலும் குடிகாரியாக இருந்தாலும் ஆதி ஏகபதிவிரதை; தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பதை ஐஸ்க்ரீமின் சுவையில் உணர்ந்தான் சிபி. பசித்தது, சாப்பிட வேறு இல்லை அல்லவா?