UNLEASH THE UNTOLD

பிலிஸ் வீட்லி

இவரது கவிதைகளில் இவர் வாழ்க்கையின் பல தாக்கங்கள் பிரதிபலித்தன. மேலும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் பெருமையும் இவர் படித்த இலக்கியங்களின் மேற்கோள்களும் பைபிள் குறிப்புகளும் கவிதைகளில் தெரிந்தன. இவர் கவிதைகளில் இருந்த தனித்துவமும் இலக்கியச் செழுமையும், வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற அதே வேளையில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இத்தனை நேர்த்தியாக பல கவிதைகள் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்கர்களால் இவரது கவிதைகள் ஒரு குப்பை எனவும், வேறு சில சிறந்த கவிஞர்களிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டது. அத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் வெகுஜன மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது ஃபிலிஸ்ஸின் கவிதைகள்.

வாழ்க்கை வசப்பட…

‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி, ஆண்களைக் குறை சொல்லாதீங்க, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் அடக்கினார்கள் என்று பொங்குகிறீர்களே முதலில் மாமியார் மருமக பஞ்சாயத்தை முடிங்க பார்ப்போம்’ என வீரவசனம் பேசுபவர்கள் அதிகம். நிஜத்தில் மாமியார் மருமகள் பிரச்னை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது? மாமனார், மருமகன் பிரச்னை வரவே வராதா? இங்குதான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு பெண்களைத் தங்கள் வசதிக்கு சாதகமாக, பெண்களைக் கொண்டே பெண்ணை ஒடுக்கும் வெளியே தெரியாத மிக தந்திரமான வலை ஒன்றைப் பின்னி, பெண்களையே பொறிகளாக வைத்துள்ளது.

உன் பணம்... பணம்... என் பணம்... பணம்...

“இதிலென்ன டவுட். நான்தான் வெச்சிருக்கேன்.அக்கவுண்ட் பாஸ்வேர்ட் டீடெய்ல்ஸ் எல்லாமும் என் கிட்டதான். அவனுக்குப் பணத்தை எல்லாம் மேனேஜ் பண்ணத் தெரியாது. சமத்தா வேலைக்குப் போயிட்டு வருவான், வீட்டைப் பார்த்துப்பான். அதுக்கே அவனுக்குக் கூறு பத்தாதுப்பா. அதனால மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நான்தான்.”

ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி என்று பொதுமைப்படுத்துதல் சரியா?

சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் பொதுமைப்படுத்தல்கள் பெண்களுக்கு எதிரான மனப்போக்கை விஷமாக மனத்தில் சேர்க்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெரிதாக வெளிப்படுகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்தில் அந்தப் பெண் வல்லுறவுக்கு ஆளாகியதன் காரணம் விதிவிலக்கான சில ஆண் வன்முறையாளர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உடன் சென்ற நண்பர் சிறு கீறலும் இல்லாமல் பிழைத்ததும், பெண் இரும்புப் பைப் உடலில் செலுத்தப்பட்டு உள் உறுப்புகள் சிதைந்து மரணம் எய்தியதும் எப்படி? கேவலம் ஒரு பெண் ஆணை எதிர்க்கலாமா என்ற எண்ணம்தான் அந்தச் சம்பவத்தின் அடிப்படை. பட்டர்ஃபிளை எஃபெக்டைப் போல இந்த ஸ்டீரியோடைப் எண்ணங்கள் எங்கோ, யார் வாழ்விலோ பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன.

புத்தகம் என்ன செய்யும்?

பெண்ணியம் பேசுவதற்குச் சுய சிந்தனை அவசியம். நம் உரிமைக்கான குரலுக்கு நம் அறிவே துணை. பெண்கள் உரிமைக்கு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான தேடல்களின் முழு வெற்றி கிடைக்கும் வரை போராடுவதும் அவசியம். அதற்குப் புத்தகங்கள் நமக்கு உதவி செய்யும். பல விஷயங்களைப் படித்து, தெளியும்போதுதான் தெளிவான முடிவை எடுக்க முடியும்.

மரணத்துக்கும் அஞ்சாத டஹோமி பெண்கள்

டஹோமி ராஜ்ஜியம் அடிமை வர்த்தகத்தின் மூலம் அதன் செல்வத்தின் பெரும் பகுதியைக் குவித்தது. அதன் அண்டை மாகாணங்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. டஹோமி அமேசான்களால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

அழகிய நான்...

எனதருமை தோழிகளே நன்றாகச் சாப்பிடுங்கள், நல்லதைச் சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். எண்ணங்கள் அழகாகட்டும், உங்களின் முடிவுகளைச் சுயமாக எடுங்கள், அதற்கேற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவுகளால் வரும் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளிருந்து மிளிர்வதை ஆனந்தமாக உணர்வீர்கள்.

நாற்பதுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது...

குழந்தைகள் படிப்பு அல்லது வேலை, திருமணம் காரணமாகப் பிரிந்து தூரமாகச் சென்றுவிட, அதுவரை குழந்தைகள் உலகம் என்று இருந்த சிலர் Empty nest Syndrome இல் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மெனோபாஸ் சிக்கலுடன் இதுவும் சேர்ந்து எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் எழும் மனப்போராட்டங்களைத் தெளிவாகப் பிரித்து உணர முடியாமல் மனச்சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

நச்சு உலோகங்களின் அச்சுறுத்தல்

ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நச்சு உலோகத்தின் அளவு, அவரது பால், வயது, பிற நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில வேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக நச்சு உலோகங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், அதிலும் பால்சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒரே அளவிலான நச்சு உலோகம் உடலுக்குள் சென்றாலும் ஆணுக்கு ஏற்படும் பாதிப்பை விடவும் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்களின் உடல் இயங்கியல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அரக்கீஸ் பார் (ஏசி)

“ம்ம் ஆமாம், வீட்டுக்கு வரப்போறவன் கிட்ட கை நீட்டிக் காசு வாங்குறது அசிங்கம்னு போட்டுருக்குற பாண்ட் ஷர்ட்டோட வந்தால் போதும்னு சொன்னோம். அவன் என்னடான்னா என்னையும் என்னைப் பெத்தவங்களையுமே பிரிக்கப் பாக்குறான்!”