UNLEASH THE UNTOLD

ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி என்று பொதுமைப்படுத்துதல் சரியா?

சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் பொதுமைப்படுத்தல்கள் பெண்களுக்கு எதிரான மனப்போக்கை விஷமாக மனத்தில் சேர்க்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெரிதாக வெளிப்படுகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்தில் அந்தப் பெண் வல்லுறவுக்கு ஆளாகியதன் காரணம் விதிவிலக்கான சில ஆண் வன்முறையாளர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உடன் சென்ற நண்பர் சிறு கீறலும் இல்லாமல் பிழைத்ததும், பெண் இரும்புப் பைப் உடலில் செலுத்தப்பட்டு உள் உறுப்புகள் சிதைந்து மரணம் எய்தியதும் எப்படி? கேவலம் ஒரு பெண் ஆணை எதிர்க்கலாமா என்ற எண்ணம்தான் அந்தச் சம்பவத்தின் அடிப்படை. பட்டர்ஃபிளை எஃபெக்டைப் போல இந்த ஸ்டீரியோடைப் எண்ணங்கள் எங்கோ, யார் வாழ்விலோ பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன.

புத்தகம் என்ன செய்யும்?

பெண்ணியம் பேசுவதற்குச் சுய சிந்தனை அவசியம். நம் உரிமைக்கான குரலுக்கு நம் அறிவே துணை. பெண்கள் உரிமைக்கு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான தேடல்களின் முழு வெற்றி கிடைக்கும் வரை போராடுவதும் அவசியம். அதற்குப் புத்தகங்கள் நமக்கு உதவி செய்யும். பல விஷயங்களைப் படித்து, தெளியும்போதுதான் தெளிவான முடிவை எடுக்க முடியும்.

மரணத்துக்கும் அஞ்சாத டஹோமி பெண்கள்

டஹோமி ராஜ்ஜியம் அடிமை வர்த்தகத்தின் மூலம் அதன் செல்வத்தின் பெரும் பகுதியைக் குவித்தது. அதன் அண்டை மாகாணங்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. டஹோமி அமேசான்களால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

அழகிய நான்...

எனதருமை தோழிகளே நன்றாகச் சாப்பிடுங்கள், நல்லதைச் சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். எண்ணங்கள் அழகாகட்டும், உங்களின் முடிவுகளைச் சுயமாக எடுங்கள், அதற்கேற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவுகளால் வரும் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளிருந்து மிளிர்வதை ஆனந்தமாக உணர்வீர்கள்.

நாற்பதுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது...

குழந்தைகள் படிப்பு அல்லது வேலை, திருமணம் காரணமாகப் பிரிந்து தூரமாகச் சென்றுவிட, அதுவரை குழந்தைகள் உலகம் என்று இருந்த சிலர் Empty nest Syndrome இல் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மெனோபாஸ் சிக்கலுடன் இதுவும் சேர்ந்து எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் எழும் மனப்போராட்டங்களைத் தெளிவாகப் பிரித்து உணர முடியாமல் மனச்சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

நச்சு உலோகங்களின் அச்சுறுத்தல்

ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நச்சு உலோகத்தின் அளவு, அவரது பால், வயது, பிற நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில வேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக நச்சு உலோகங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், அதிலும் பால்சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒரே அளவிலான நச்சு உலோகம் உடலுக்குள் சென்றாலும் ஆணுக்கு ஏற்படும் பாதிப்பை விடவும் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்களின் உடல் இயங்கியல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அரக்கீஸ் பார் (ஏசி)

“ம்ம் ஆமாம், வீட்டுக்கு வரப்போறவன் கிட்ட கை நீட்டிக் காசு வாங்குறது அசிங்கம்னு போட்டுருக்குற பாண்ட் ஷர்ட்டோட வந்தால் போதும்னு சொன்னோம். அவன் என்னடான்னா என்னையும் என்னைப் பெத்தவங்களையுமே பிரிக்கப் பாக்குறான்!”

பெண் எனும் போன்சாய்

ஆற்றின் வெள்ளம்போல்

வாழ்க்கைக் கடக்கும்

கையளவு நீர் மட்டுமே கிடைக்கும்

அதை அமிர்தமாக்குவதும்

அழுக்காக்குவதுமே வாழ்க்கை!

நமது காலத்தின் பின்னும்

ஆறு அதனோட்ட்டம் தொடரும்!

இன்பாக்ஸ் இம்சைகள்

தொல்லை கொடுக்கும் நபரைத் தவிர்க்க மிக எளிமையான தீர்வு என்றால் ப்ளாக் செய்வதுதான். ஹாய் அனுப்பியது யார் என்று அவர் பக்கத்துக்குச் சென்று ஆய்வெல்லாம் நடத்தத் தேவையில்லை. யோசிக்கத் தேவையில்லை. முன்பின் அறியாத நபரிடம் தனிப்பட்ட உரையாடலை ஆரம்பிக்க நேராக விஷயத்துக்கு வரவேண்டும். வெறுமனே ஹாய் என்பதற்கு நான் வெட்டியாக இருக்கிறேன், நீயும் வெட்டியாக இருக்கிறாயா என்பதைத் தவிர வேறென்ன பொருள் இருக்க முடியும்? இத்தகைய நபர்களைக் கையாள்வது நேரக்கேடு. ஒற்றைச் சொடுக்கில் நட்பு நீக்கம் செய்வதாலோ ப்ளாக் செய்வதாலோ இழக்கப் போவது ஒன்றுமில்லை.

புத்தம் புதிய வெளிச்சம்!

குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைப் பருவம்தான் நாம் குழந்தைகளுக்கு தரும் உண்மையான சொத்து.
ஏதோ ஒரு தலைமுறையில் யாரோ தொடங்கிய தவறுகளை தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. தீமைகளைத் தடுக்க சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். மலை தடுக்கிறது எனப் பயந்து நிற்க வேண்டாம், துணிந்து ஒவ்வோர் அடியாக எடுத்து நடக்க தொடங்கினால் போதும் மலையையும் எளிதாகக் கடந்துவிடலாம்.