UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

சோகை தவிர்ப்போம்; வாகை சூடுவோம்!

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?

வந்தியத்தேவன் வழித்தடத்தில் திரிகோணமலை

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி’,  ‘தட்சிண கைலாசம்’ என்றெல்லாம் புகழப்படும்  அதே திருகோணமலை நகரின் மற்றொரு மூலையில், தேசம் பிடிக்கும் பேராசையின் விளைவுகளைப் பறைசாற்றி மௌனமாக நிற்கின்றன… இரண்டாம் உலக யுத்தத்தில் தேசம்விட்டு தேசம்வந்து போரிட்ட பிரிட்டானியப் படைவீரர்களின் 303 கல்லறைகள்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் சிகிரியா

மிகவும் பாதுகாப்பான அந்தக் குன்றில் புதுத் தலைநகரை அமைத்தான் காசியப்பன். அரசனனின் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது, சுற்றி வர ஆழ்ந்த அகழி சூழ்ந்திருக்க குன்றின் மேலே குகைக்குள் கட்டிய கோட்டைக்குள் எந்த எதிரியால் நுழைய முடியும்? கி.பி. 495 வரை காமக்கிழத்தியர் புடைசூழ முகில்கள் தழுவிச் செல்லும் அந்தச் சொர்க்கபுரியில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டான் காசியப்பன்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் எசல பெரஹரா திருவிழா!

எசல பெரஹர அல்லது எசலா பேரணி என்பது இலங்கையின் கண்டி நகரத்தில் நிகழும் ஒரு பௌத்த திருவிழா. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நடைபெறுவதாகக் கூறப்படும் இவ்விழா, மழை வேண்டியும் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்ட நாளை கொண்டாடுவதற்காகவும் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றைக்கு இலங்கையின் தனித்துவமான விழாவாக மாறியுள்ளதால், அச்சமயத்தில் வெளிநாட்டாரின் வருகை அதிகமாக உள்ளது.

கருக்கலைதல்

கருவுற்ற காலத்தில் கருவானது உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்து போதல் அல்லது அழிக்கப்படுதல் கருக்கலைதல் எனப்படும். உலக சுகாதார அமைப்பானது 500கிராம் எடையோ அல்லது அதற்கு குறைவான எடையோ கொண்ட கருவின் இழப்பை, கருச்சிதைவு அல்லது கருக்கலைதல் என வகைப்படுத்துகிறது.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் அனுராதபுரத்தின் அதிசயங்கள்!

அனுராதபுரத்திற்குள் அருள்மொழிவர்மனும் ஆழ்வார்க்கடியானும் தானுமாக நுழையும்போது, இப்படித்தானே அதிசயித்துப் போனான் வந்தியத்தேவன்! இலங்கைத்தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்று தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் தம்புளா

கொழும்பில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் மாத்தளை மாவட்டத்தில் இருக்கிறது தம்புளா. 160 மீட்டர் உயரமுள்ள சிறு சிறு குன்றுகள் பரவலாகக் காணப்படுகிறன். அந்தக் குன்றுகளின் மீது தொடர்ச்சியான 5 குகைகள் கொண்ட ஒரு தொகுதியாக இருக்கிறது அந்தக் குடைவரைக் கோயில். உலகின் பெருமதிப்பை அக்குகைகள் பெற்றுள்ளதற்கு, அங்கு பெருந்தொகையாகக் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களுமே காரணமாக இருக்க முடியும். இவ்விடம் முன்பு ஜம்புகோள என அழைக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.

பெண்ணுடலை நேசிக்க விடுவோம்!

நம் உடல்வாகு மரபியல்படி நம்ம பாட்டி, அம்மாவுக்கு எப்படி இருக்கோ அப்படித்தான் நமக்கும் இருக்கும். அதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. இது நம் உடல், இயற்கை படைத்திருக்கு. சிறப்பா வைச்சுக்கணும்ன்னு நெனக்கணும். ஒருபோதும் நம் உடலை நாம் வெறுக்காம லவ் பண்ணணும்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் மாதோட்டம்!

அன்றொரு நாள், மாதோட்டத்தின் பொற்காலத்தில் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமின்றி தென்னிந்திய கடல் வணிகர்கள் தங்கள் சரக்குகளை சீனாவுக்குக் கொண்டு செல்லும்போதும் இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகத்தான் மாதோட்டம் விளங்கியது. மிகச் சிறந்த வர்த்தக நகரமாக உருவெடுத்தது. ஈழத்து உணவு வகைகள், முத்து பவளம், நவரத்தினங்கள், யானை, யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, கறுவாய், ஏலம் போன்ற பொருள்கள் மாதோட்ட துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட்டத்தில் வந்து குவிந்தன. செல்வம் பெருகியது, மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறார் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இண்டிக்கோ பிளஸ்தேஸ் தனது நூலில்.