UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

மருதன் பெருவிருந்து

மரப்பட்டையின் சுகந்தம் தலைமுடியின் வேர்கள் வழியே அவளுக்கு மணந்தது. கண்விழித்துத் தலையை நிமிர்த்தினாள். கதவிடுக்கின் வழியே வீட்டின் உள்ளிருந்து மருதன் கசிந்திருந்தான்.

ஜொலிக்கும் முகங்கள் - ஜோ, திரிஷா

லைம்லைட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு திருமணமானதும் துறைரீதியாக வாய்ப்புகள் இல்லை, காதல் கிசுகிசுக்களில் சிக்கினால் வாய்ப்புகள் குறையும் எனவும் நம்பக்கூடிய பொய்களாக மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட பெண்கள்!

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க புதிய பயிர்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. நமது மூதாதையர்கள் காட்டுச் செடிகளிலிருந்து பயிர்களாக மாற்றிய உணவுகளைத்தாம் நாம் இன்னமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நமது தற்கால உணவு ஒருவகையில் பண்டைய விவசாயிகளால் வடிவமைக்கப்பட்டது” என்கிறார் மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி. இவர் குறிப்பிடும் பண்டைய விவசாயிகள் பெண்கள்தாம் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.

நைட்டியும் கைலியும் - ஃபேஸ்புக் வன்மகுடோன்கள்

‘நைட்டி போட்டா உள்ள இருக்கறது எல்லாம் தெரியுது’ன்னு சமுத்திரக்கனி ரேஞ்சுக்கு பீல் பண்ணுதுங்க. எப்படி பெண்கள் பாவாடைக்குள்ள உங்களோட கட்டுப்பாடு வந்துச்சு?

குடும்பக் கட்டுப்பாடு

மாத்திரை, ஊசி, சாதனம், அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான சிகிச்சை முறைகளும் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளன. மாத்திரை, ஊசி, சாதனம் போன்றவை தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் எனவும், அறுவை சிகிச்சை என்பது நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

எங்க ஆத்தா மாரியாத்தா - ஜெஜெ சில குறிப்புகள்

எங்க ஆத்தா மாரியாத்தாஅந்த அம்மா என்ன பண்ணாலும் ‘வாவ்’ அப்டின்னு செருப்படி வாங்கறவனைக்கூட நம்ப வைக்கற அதோட சக்தி சக்திமான்க்கு கூட இல்ல…

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!” -2

“அதாம்மா பெரிய பொண்ணாயிட்டா அவங்க வீட்ல இப்படித்தான் கீழ உட்காரணுமாம். அங்க சேலத்துல வீட்ல விஷேசத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் பாய் போட்டாங்க. ஆண்களுக்கெல்லாம் சேர் போட்டாங்கன்னு மொறைச்சனே… இங்கயும் அப்படித்தான் பொண்ணுங்களுக்கு ஒரே கெடுபிடி. அதுதான் பெரியவங்களுக்குக் கொடுக்கற மரியாதையாம். அதான் குழி வெட்டி வைங்க உயரம் கொறைஞ்சா மரியாதை இன்னும் அதிகமா தந்தா மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன்.”

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பெண்களின் வேலையா?

‘Feminisation of care’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார் எழுத்தாளர் சரண்யா பட்டாச்சார்யா. அதாவது, அக்கறைக்குப் பெண் தன்மையைக் கொடுப்பது. இதன்மூலம் பெண்கள் மீதான உணர்வு மற்றும் உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “அக்கறை என்பது ஒரு சிக்கலான அரசியலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் செயல்பாடு” என்கிறார் ஆராய்ச்சியாளர் அரின் மார்டின். ஆகவே இந்த அரசியலைப் பேசுவது முக்கியம். பெண்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்காமலேயே தனிநபர் சூழல் செயல்பாடுகளில் மட்டும் அவர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதை நடத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக, “பெண்ணுக்கு இயற்கையிலேயே சூழல் மீது அக்கறை உண்டு” என்பது போன்ற சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. சூழல்சார்ந்த தனிநபர் செயல்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பையும் சூழல்சார்ந்த கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பையும் இது பாதிக்கிறது. இந்த நிலை ஆபத்தானது.

கண்ணுக்குத் தெரியாமல் போன அறிவியலாளர்

1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.

எல்லாரும் கொண்டாடுவோம்!

ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?