UNLEASH THE UNTOLD

Top Featured

அவளுக்கு வழிகாட்டிய அந்த நான்கு பெண்கள்

இவர்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்கிற வட்டத்துக்குள் தன்னைச் சிறையிடாமல் இருப்பது. சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று கடந்து வருவதுதான். தான் அறியாமலே பிறருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதில்லை, அவர்களின் பயணம் எளிதில்லை. ஆனால், அது அவள் போல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க உதவுகிறது.

விசாவில் வந்த வில்லங்கம்

ஏர்போர்ட்டில் மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களுக்கும் செல்லுமிடமெங்கிலும் புன்னகை முகங்களைத் தரிசிக்க முடிந்தது. வியட்நாமில் இருந்தவரை ஒரு கோபமான முகத்தையோ ஏன் சோகமான முகத்தையோகூட எங்களால் பார்க்கவே முடியவில்லை. மற்றவர்களிடம் உரையாடும்போது அவர்கள் உடல் மொழியே பணிவாக இருக்கிறது. நம்மை நேருக்கு நேர் சந்திக்கும்போது தலை குனித்து புன்னகையுடன் வணக்கம் சொல்கிறார்கள்.

"பொண்ணுங்க எப்படி வேணா இருப்பாங்க; நாமதான் மனசைக் கட்டுப்படுத்திக்கணும்.”

“அவ உன்னை வேற ஏதாச்சும் பண்ணி இருந்தா? அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அழகான பொண்டாட்டி, குழந்தைங்கன்னு ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு இருக்கு. ஏன் இப்படிப் புத்தி போகுதுன்னு உன்னைத்தான் கேட்பாங்க.”

நிராகரித்தலின் கனவு

‘நிராகரித்தலின் கனவு.’ பெண், ஆண் உறவென்பது மிகச் சிக்கலானது, மிக நுட்பமானது, மிக சுவாரசியமானது. ஒரு பெண்ணின் பேருந்துப் பயணம் குறிப்பாக இரவு நேரப் பயணம் தரும் அச்சம், அதே நேரத்தில் மழை தரும் இதம் என்று ஒவ்வொன்றையும் மொழிவழி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். குழந்தையின்மை பெண்ணின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை உளவியல் சார்ந்து செறிவாகப் புலப்படுத்தியுள்ளார் .

மனிதனுக்குப் பால் ஒவ்வாமை ஏன்?

“ஆதி மனிதன் தோன்றின காலத்தில், மனிதர்களால் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பால் செரிமானம் பண்ண முடியாது. அதுக்குக் காரணம் அவன் உடம்பில் பால் செரிமானம் ஆவதற்குப் உற்பத்தி ஆகுற லாக்டோஸ்னு சொல்லக்கூடிய நொதியின் அளவு குறையுறதுதான். இந்த லாக்டோஸ் பாலூட்டும் வயது முடியும் வரை சுரக்கும். அதுக்கப்புறம் அதோட அளவு குறைஞ்சிரும். அதனால பால்ல இருக்க லாக்டோஸ் எனப்படும் மூலப்பொருள் மனிதர்களால் செரிமானம் பண்ண முடியாது.”

பரிவோடு இருப்பது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் உதவி!

நியாயமற்ற மனிதர்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எந்த நிர்பந்தத்திற்கும் நீங்கள் அடிபணியப் போவதில்லை எனும்போது அதைப் பற்றிக் கவலைப் பட என்ன இருக்கப் போகிறது? அவர்களையும் பரிவோடு அணுகும்போது நம்மிடம் கசப்புக்கு இடமே இல்லை.

சிகிச்சை முடிந்த பிறகு கண்காணிப்பு அவசியம்

1990களில் இருந்து இரு சக்கர வாகனம் பயன்படுத்துகிறேன். அதில்தான் கல்லூரிக்குப் போவேன். இருசக்கர வாகனத்தை எடுத்து சுமார் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டிப் பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்தபோது என்னால் ஒரு பேனாவைக்கூடப் பிடிக்க முடியவில்லை. இப்போது வாகனத்தையே ஓட்ட முடிந்தது.

சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி...

“பொண்ணுங்க ஆண்களைவிட இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருக்குன்னு நீயே சொல்ற இல்லையாப்பா. அதனாலதான் பொண்ணுங்க கட்டாயம் சைக்கிள் கத்துக்கங்கன்னு நான் சொன்னது சரிதானே?”

உச்சக்கட்டம் உடலுக்கா உணர்வுகளுக்கா?

‘கிளி போல் மனைவியிருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்திருக்கிறான்’ என்று அந்தக்காலப் பாட்டிகள்
சொல்வார்களில்லையா? (இது இருபாலருக்கும் பொருந்தும்) அப்படி ஒருவர் காலடியில் விழுந்து கிடப்பதற்குக் காரணம் உணர்வளவில் அவர்கள் அந்த நபரிடம் உச்சக்கட்டம் அடைந்திருப்பதால்தான்.

திவான் பகதூர்

திரைப்படம் அரங்கைவிட்டு வெளியே பல இடங்களில் எடுக்கப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்ட ஊரின், நகரின் அமைப்பை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக திரைப்படம் அமைகிறது. அதே போல, அன்றைய மேல்தட்டு மக்களின், உடை, வாழ்க்கை முறை போன்றவற்றை நமக்குச் சொல்லும் திரைப்படமாகவும் இது விளங்குகிறது.