UNLEASH THE UNTOLD

Top Featured

எங்கிருந்து வந்தாலும் அன்பு அன்புதானே!

இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.

எது ஆரோக்கியமான உறவு?

ஒவ்வோர் உறவும் வாழ்வின் பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை தொடர்ந்து வருகிறது. சில உறவுகள் கடைசி வரை, சில பாதி தூரம் வரை, எப்படியாயினும் நமக்கு அது சுமுகமான உறவாக இருக்கும் போது, அது தொடராத போதிலும், மனதில் அந்த இனிமை மட்டுமே இருக்கும்.

நீண்ட ஆயுளுக்கு இடைவெளி அவசியம்

உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.

தாய்ச்சி கற்றுக்கொண்டேன்...

நான் பலவீனமாக இருந்ததால் எனக்குப் பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. பேசுவேன், வேலை செய்வேன். ஆனால், தொடர்ந்து ஓர் இடத்தில் நிற்க முடியாது. டாக்டரும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நிற்பதில் கஷ்டம் இருக்கும், கால் வலிக்கும், எனவே நிற்பதைத் தவிர்த்துவிடுங்கள் என்றார். எனவே முதலில் தாய்சி பயிற்சி செய்யும்போது ரவி மாஸ்டரும் சிவா மாஸ்டரும் என்னைக் கையைப் பிடித்து நடத்திச் சென்றே சொல்லிக் கொடுத்தனர்.

பறிபோகும் ஏழைகளின் உயிர்கள்

“பக்கத்து கம்பெனில பட்டாசு வெடிச்சிடுச்சு” என்று ஒருவர் கத்திக் கொண்டே வந்தார். வெடித்துச் சிதறிய உடலின் ஒரு பகுதிதான் தங்கள் முன் விழுந்தது என்று தெரிந்துகொண்டனர்.

வாழ்வதின் அர்த்தம் நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதில்தானே இருக்கிறது?

“நீங்கள் மனிதகுலத்தின் ஒரு சதவீத அதிர்ஷ்டசாலி பட்டியலில் இருந்தால், மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தைச் சேர்ந்த மனிதகுலத்தைப் பற்றிச் சிந்திக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார் உலகின் ஐந்தாவது பணக்காரரான வாரன் பஃபெட்.

ராஜகுமாரி

தமிழ் நாட்டிற்குள் வரும் மந்திரவாதி, பேய் பிடித்தவர் என வரும் பெண்ணுக்கு, “எருமை சாணியைக் கரைத்து ஊற்றிக் குடுமியில் (முடியில்) ஒரு சாண் வெட்டி இரண்டு நாட்கள் பட்டினி போட வேண்டும்” என மருத்துவம் செய்கிறார்.

உடல் மொழியும் உச்சக்கட்டமும்

வெட்கம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேகக் குணம். சில ஆண்களும் வெட்கப்படலாம், பல பெண்கள் வெட்கப்படாமலும் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அவர்களது தனிப்பட்ட உணர்திறனைச் சார்ந்தது

அவளுக்கு வழிகாட்டிய அந்த நான்கு பெண்கள்

இவர்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்கிற வட்டத்துக்குள் தன்னைச் சிறையிடாமல் இருப்பது. சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று கடந்து வருவதுதான். தான் அறியாமலே பிறருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதில்லை, அவர்களின் பயணம் எளிதில்லை. ஆனால், அது அவள் போல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க உதவுகிறது.

விசாவில் வந்த வில்லங்கம்

ஏர்போர்ட்டில் மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களுக்கும் செல்லுமிடமெங்கிலும் புன்னகை முகங்களைத் தரிசிக்க முடிந்தது. வியட்நாமில் இருந்தவரை ஒரு கோபமான முகத்தையோ ஏன் சோகமான முகத்தையோகூட எங்களால் பார்க்கவே முடியவில்லை. மற்றவர்களிடம் உரையாடும்போது அவர்கள் உடல் மொழியே பணிவாக இருக்கிறது. நம்மை நேருக்கு நேர் சந்திக்கும்போது தலை குனித்து புன்னகையுடன் வணக்கம் சொல்கிறார்கள்.