UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

வெத்தலைப் பெட்டி... வெற்றிலைச் செல்லம்...

முதலில் பாக்கைக் கடித்துக்கொண்டு, வெற்றிலை மேல் , சுண்ணாம்பைத் தடவி மடித்து வாயின் ஓரமாக ஒதுக்கி மெல்வார்கள். ‘விரைவில்’ என்று சொல்லுவதற்குப் ‘பாக்கு கடிக்கும் நேரத்தில்’ எனச் சொல்லுவதுண்டு. மெல்லமெல்ல, சிறிது சிறிதாக வாயின் நிறம் சிவப்பாக மாறத் தொடங்கும்.

ஒற்றை ரோஜாக்கள்

நிறைய உடன்பிறப்புகளோடு இருந்தாலும் ஒற்றையாக இருந்தாலும் பெற்றோரின் வளர்ப்பு முறையே அவர்களின் குணாதிசயங்களைத் தீர்மானிக்கும்.

மூன்றாம் உலகப் போர்

உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.

முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட...

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா...

ஆண் குழந்தைகள் ‘வாளி’ அணிந்திருக்கின்றனர். வாளி என்பது சிறு வளையம். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கோயிலில் வைத்து காது குத்தும் விழா ஆண்களுக்கும் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அந்தோணியார் கோயிலில் வைத்து அந்தோணியார் பட்டம் வைத்து வாளி போடுவார்கள். அந்தோணியார் பட்டம் என்பது தலையின் வெளிப்புறம் மட்டும் சிறிது முடி வைத்து, மற்ற இடங்களின் மொத்த முடியையும் அகற்றும் வகையிலான மொட்டை.

வாடி ராசாத்தி... புதுசா, ரவுசா போவோம் வாலாட்டி...

ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?

டாட்டூ போடுவது பெருங்குற்றமா?

ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட நம் அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும் உடலில் குத்தியிருந்தது தான். மான், மயில், கிளி, தேர், தேள், மரம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், மீன், விலங்குகள், தெய்வங்கள் போன்ற உருவங்களை அவர்கள் தங்கள் உடலில் குத்தியிருந்தார்கள். அவற்றின் நவீன வடிவமே டாட்டூ.

டிரெண்ட் செட்டர் நதியா

அதுவரை கிராமத்தில் பெண்களுக்கான சைக்கிளை வயதான ஆண்கள், காலைத் தூக்கி போட்டு ஏறுவதற்கு எளிதாக இருக்கும் என வாங்கினார்கள். வீட்டில் சைக்கிள் ஓட்டும் பெண்கள்கூட ஆண் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆண்களுக்கான சைக்கிளைத்தான் பயன்படுத்தினார்கள். நதியா சைக்கிள் பிரபலமான பின் தான் லேடிஸ் சைக்கிள் பிரபலமானது. ஊரில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

ஆண்கள் வேலை செய்வதை முதலில் பெண்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை ஆண்கள் தங்கள் வீட்டுக் கழிவறை, குளியலறைகளைச் சுத்தம் செய்கிறார்கள்? சமைத்தல், சுத்தம் செய்தல், துவைத்தல் போன்ற பொதுவான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் பாலினப் பாகுபாடு இன்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

கவிழ்த்து வைத்த கிண்ணம் போல் பாவாடையும் பஃப் கை சட்டையும்

தாவணி சேலைகளின் மேலாடையாக ரவிக்கை உள்ளது. ரவிக்கை போடும் வழக்கம் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் ஓர் ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ரவிக்கை போடாமல், புதிதாக வரும் ஒரு மருமகள் மட்டும் ரவிக்கை போடுவதாக எடுக்கப் பட்ட திரைப்படம்.