UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்நாட்டின் முதல் பெண்கள் பள்ளி, அதைத் தாங்கிப் பிடிக்கும் ஆசிரியர்கள்!

“இங்கு இளம் சிறாருக்கு அடிப்படை கல்வியறிவு தரப்படுகிறது. பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. கோயில்களில் ஆடும் தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது” – சீகன்பால்கு

சிரி... சிரி... சிரி...

சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது. 

ஓடி விளையாடுவோமா?

இந்தியர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படிப்பும் மதிப்பெண்களுமே முக்கியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது.

மாதவிடாய் எனும் மண்டையிடி நாள்கள்

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, பூக்களைப் பறிக்கக் கூடாது, பூஜைப் பொருள்களைத் தொடக் கூடாது, குரான் ஓதக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது, தொழுகக் கூடாது, வெளிப்படையாக (குறிப்பாக ஆண்கள்) பார்க்கும் வகையில் நாப்கின்களைக் கையாளக் கூடாது. உபயோகித்த துணியை ரகசியமாக அப்புறபடுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வடிவில் தீண்டாமை நம்மை விட்டுவைப்பதாக இல்லை. இஸ்லாத்தில் ஒதுக்கி வைக்கும் வழக்கம் இல்லை என்றாலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றே இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அப்பா பெயர் ஏன் விருப்பத் தேர்வில் இல்லை?

அப்பா இறந்துவிட்டார் என்றால் பாவ மடல் வாசிக்கிறவர்கள்கூட, அப்பா உயிரோடுதாம் இருக்கிறார், விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னதும் பார்த்தாலே ‘தீட்டு’ என்பதுபோல் பார்ப்பார்கள். நாம் எப்போதுமே அவர்களுக்கு suspected people தான்.

ஆஹா! 'மண்சட்டி' மீன் குழம்பு!

மாக்கல் சட்டியை அடுப்பில் வைத்து சமைக்க வேண்டுமென்றால், ஓரிரு நாட்கள் பாத்திரம் முழுவதும் எண்ணெய் தேய்த்து வெயிலில் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது, துளைகள் அடைபட்டு பாத்திரம் உறுதியாகிறது. சூட்டைத் தாங்கும் திறனைப் பெறுகிறது. இந்த முறையைப் பழக்குதல் என்கிறார்கள். அப்படிப் பழக்காத பாத்திரத்தைச் சூடாக்கினால், விரிசல் ஏற்பட்டுவிடும்.

ஒரு தேசம்... ஒரு மொழி... ஒத்து வருமா?

பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும்.

பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்து : சுழல் & கார்கி

குடும்பம் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்காமல், சீர்திருத்தம் செய்யாமல், சமூகத்திற்கெனப் பேசப்படும் பேச்சுகளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.

மனமே கோயில்

வாழ்வில் கஷ்டங்கள் நிறைந்தவர்கள் அல்லது கஷ்டங்கள் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டவர்கள் இத்தகைய மாய வலைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் இருப்பவர்களும் இந்தப் போலிச் சாமியார்களிடம் சிக்கிக்கொண்டு வாழ்வைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.    

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்...

முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.