வாங்க பழகலாம்!
மொழி வளர்ந்த பின்பும் ஒவ்வொருவரும் பல மொழி கற்ற பிறகும் நாம் மற்றவருடன் தகவல்களை, உணர்வுகளைச் சிறப்பாகப் பரிமாறிக்கொள்கிறோமா என்றால் இல்லை. எப்போது பேசுவது, எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, நாம் பேசும் போது கேட்பவர் ஆர்வமாக கேட்கிறாரா அல்லது காயப்படுகிறாரா, மற்றவர் பேசும் போது எப்படிக் கேட்பது என்பதைப் பலர் கற்றுக் கொள்வதே இல்லை. இதனால்தான் பலர் அழகான உறவுகளை இழக்கிறோம்.