முடிவெடுக்கும் கலை
இங்கு முதல் கேள்வி நம் முடிவுகளை நாம் எடுக்கிறோமா என்பது. நாம் எடுக்கும் முடிவிற்கே நாம் பொறுப்பேற்க முடியும். அது தவறாகும்பட்சத்தில் மாற்று வழியைச் சிந்திக்க முடியும். பெற்றவர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். இதைச் சின்னச் சின்ன முடிவுகளில் பழகும்போதுதான் வாழ்வை மாற்றக் கூடிய விஷயங்களில் நாம் தடுமாற்றமின்றி செயல்பட முடியும்.
