UNLEASH THE UNTOLD

சித்ரா ரங்கராஜன்

பெண்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம்!

மோசுவோ கலாச்சாரத்தில் உறவுகள் அனைத்தும் பரஸ்பர பாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அது மங்கும்போது, அவரவர் பாதையில் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் மொழியில் கணவன் அல்லது தந்தை என்கிற வார்த்தையே இல்லை. மோசோ பெண்களால் குழந்தைகளைப் பெற முடியாவிட்டால், அல்லது ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. முறைப்படி அவர்களின் தாய்வழி உறவினர் ஒருவரிடமிருந்தோ தொடர்பில்லாத மோசோ குடும்பத்திலிருந்தோ ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பார்கள். சீனர்கள் மோசோ பழங்குடியை ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

வாழ்வதின் அர்த்தம் நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதில்தானே இருக்கிறது?

“நீங்கள் மனிதகுலத்தின் ஒரு சதவீத அதிர்ஷ்டசாலி பட்டியலில் இருந்தால், மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தைச் சேர்ந்த மனிதகுலத்தைப் பற்றிச் சிந்திக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார் உலகின் ஐந்தாவது பணக்காரரான வாரன் பஃபெட்.

மகிழ்ச்சி என்பது என்ன?

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன சொல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது இணக்கமாக இருந்தால் அதுவே மகிழ்ச்சி.’

தீராத தொற்று நோய்

என் மகன் என் அருகில் வந்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அம்மா, எழுந்திரு. எனக்குப் பசியாக இருக்கு. பாஸ்தா செஞ்சு கொடு” என்று எனக்கு உத்தரவிட்டுவிட்டு ஒரு பந்தை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட ஓடிவிட்டான்.

நான் செய்வதறியாது நின்றேன்.

‘லைக்’ செய்துதான் பாருங்களேன்!

என்னைப் பரவசப்படுத்தும் வகையில் எனது நெருங்கிய தோழியிடமிருந்து, ‘சூப்பர் டா, நச்சுன்னு இருக்கு கட்டுரை, தொடர்ந்து எழுது’ என்கிற கமெண்டுடன் என் பதிவிற்கு ஒரு லைக் இருந்தது!

ப்ராண்டுகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!

சுயம்வரப் பெண்ணரசிகள்!

சஹாராவின் வறண்ட பகுதிக்கு மழை கொண்டு வரும் வளத்தைக் கொண்டாடும் நோக்கத்துடன் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜெர்வோல் திருவிழாவில், வோடாபே ஆண் நாடோடிகள் ஒரு துணையை ஈர்க்கும் முயற்சியில் திணறும் வெயிலில் மணிக்கணக்கில் ஆடுகிறார்கள். இதற்காகத் தங்களை அழகு படுத்திக்கொள்ள பல மணி நேரம் செலவிடுகிறார்கள்.

துருவக் கலைமான் மேய்ப்பர்கள்

சாமி பழங்குடியினர் ‘அரை நாடோடிகள்’, அதாவது அவர்கள் ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. சாமி மேய்ப்பர்கள் பருவக் காலங்களில் தங்கள் துருவக் கலைமான்களுடன் இடம்பெயர்ந்து, குளிர்காலத்திற்காக மலைகளுக்குச் சென்று, கோடையில் சமூகத்துடன் திரும்பி வருகிறார்கள். பயணத்தில், சாமி மேய்ப்பர்கள் லாவ்வோ எனப்படும் பாரம்பரியக் கூடாரத்தில் முகாமிடுவார்கள்.

முர்சி பெண்களுக்கு வாய் ரொம்பவே நீளம்!

முர்சி பழங்குடியினப் பெண்கள், கீழ் உதட்டில் வைக்கப்படும் களிமண் தட்டுகளுக்குப் பிரபலமானவர்கள். ஒரு பெண் 14 வயதாக இருக்கும்போது, அவளுடைய நான்கு கீழ் பற்கள் அகற்றப்படுகின்றன. மேலும் அவள் 15 வயதை அடையும் போது, அவள் கீழ் உதடு கீறப்படுகிறது. உதட்டில் வைக்கப்படும் தட்டு என்பது ஒரு பெண் பருவத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது.

பிஷ்னாய் சுற்றுச்சூழல் போராளிகள்!

அமிர்தா தேவி மரத்தைக் காப்பாற்ற, அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கட்டுக்கடங்காத மனிதர்கள் மரத்தை வெட்டுவதற்காக அவரது உடலைத் துண்டித்தனர். அவரது மூன்று மகள்கள், தங்கள் தாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, மரங்களைக் கட்டிப்பிடித்து அதே முடிவைச் சந்தித்தனர்.