UNLEASH THE UNTOLD

மனோன்மணி

மனோன்மணிக்குப் பொருத்தமானவன் புருஷோத்தமனே என்பதை முனிவரும் சீவகனிடம் தெரிவித்தார். குடிலன், தன் மகன் பலதேவனுக்கே மனோன்மணியை மணம் முடித்தால் பாண்டிய நாடே தன் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என நினைத்தான்.

புருஷோத்தமனின் மனநிலையை அறிந்து கொள்ள, நடராசனை அனுப்ப குரு நினைத்தார். குடிலன், தன் மகன் பலதேவனைத் தூது அனுப்பலாம் எனச் சொன்னார். மன்னரும் அவ்வாறே பலதேவனை அனுப்பினார். பலதேவனின் சூழ்ச்சி சொற்களால், பாண்டிய மன்னன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு புருஷோத்தமன் எண்ணம் வந்து விட்டது.

முதல் மூன்று மாத கர்ப்ப காலம்

8வது வாரம்

கண் இமைகள் திறந்து மூடும். விரல்கள் வளரத் தொடங்கும்.

வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் வாரம் இது. ஒரு பீன்ஸ் பருப்பின் அளவிற்குக் கரு வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

"குழந்தைகள் நிறைய வாசிக்கணும்!” - எழுத்தாளர் தேவி நாச்சியப்பன்

1983இல் ‘கோகுலம்’ சிறுவர் மாத இதழில் என் முதல் மொழிபெயர்ப்புக் கதை வெளியானது. தொடர்ந்து எனது மொழிபெயர்ப்புக் கதைகள் சிறுவர் இதழ்களில் வெளிவந்தன; மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரிக் காலங்களில், புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், தந்தையின் சொற்படி மரபுக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தந்தையாரின் வழிகாட்டுதலின்படி குழந்தை எழுத்தாளரானேன்.

பொறுப்பாக எப்போது நடந்துகொள்ளப் போகிறோம்?

ஒருவரை விமர்சிக்க, தூற்ற தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியை அளவீடாகப் பயன்படுத்துகின்றனர். அதில் வெளிப்படுவது நான் அப்படியானவர் இல்லை, ரொம்ப பர்பெக்ட் என்பதைத்தான் வெவ்வேறு வகையில் கூற முயல்கின்றனர்.

இலக்கணம் மாறுதே... 10

“எல்லார் பிறப்புக்கும் ஆதாரமாக இருக்கிற ஒரு விஷயத்தை, எப்படிக் கேவலமாகப் பேசுவதற்கு மனசு வருதுனு தெரியல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒன்றை, தன் வாழ்வுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை, ஏன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை ஏன் இவ்வளவு கேவலமாகப் பேச வேண்டும்? இழிவாக இளக்காரமாக நினைக்க வேண்டும்? காரணம் என்னவாக இருக்க முடியும் நித்யா?”

ஹாய், சாப்பிட்டாச்சா?

“நீங்க இருங்க மாமா, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வருணே எல்லாம் செய்தான். ஆனாலும் சமையலறையில் ஓர் ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்தபடி மாமனார் உத்தரவுகளைப் பிறப்பிக்க, வருண்தான் ஓடியாடி எல்லாம் செய்தான். சின்ன மருமகளுக்கு மீனை இப்படிச் செய்தால் பிடிக்காது. பெரிய மருமகள் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டார் என்கிற நிபந்தனைகளுக்கேற்ப ஆளுக்கு ஒன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான் வருண்.

அறியாத மனசு... புரியாத வயசு...

காயத்திரி அத்தைக்குப் பக்கத்து வீடு. காயத்திரியும் செல்வனும் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவர்கள். செல்வனுக்குக் காதல் அரும்பி தன் காதலை முதலில் சொல்லியிருக்கிறான். ஒரு சில வருடங்கள் கழித்து காயத்திரி சம்மதம் சொல்ல, தற்போது வீட்டிலும் சொல்லியிருக்கிறான் செல்வன்.

உடை... அதைக் கொஞ்சம் உடை...

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

என் மனைவி

மனைவி செல்லம் வெளியில் சென்று வரும்போது நல்லபடி அலங்காரம் செய்து கொண்டு செல்வதில் இவருக்குச் சந்தேகம். செல்லம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போன நேரத்தில் அவரது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் தோழி சுவாதி வருகிறார். சுவாதியின் முதலாளி அம்மா, ஒரு மாதம் உடுத்திய சேலையை மறுமாதம் இவரிடம் கொடுத்துவிடுகிறார். பதினைந்து ரூபாய் விலையில் மூக்குத்தி வாங்கிக் கொடுத்து இருக்கிறார். இப்பெண்ணும் விலை மலிவான நகைகள் வாங்கிப் போட்டு சினிமா நடிகை போல வந்திருக்கிறார். கோயிலில் இருந்து வந்து பார்த்த செல்லத்திற்கு, இவற்றை எல்லாம் கணவர்தான் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம். சுவாதியின் முதலாளி மதுரம் செல்லத்திற்கு ஏற்கெனவே தெரிந்தவர் என்பதால், சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவருக்குக் கடிதம் எழுதுகிறார்.

பண்டிகைகள்... திருவிழாக்கள்... பெண்கள்...

பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் என்பது விடுமுறை நாட்கள் என்றாலும் ஒய்வுக்கான நாள்கள் அல்ல. சாதாரண நாட்களைவிட பன்மடங்கு உழைப்பைக் கோரி நிற்கும் நாட்கள். வீடும் அடுப்படியும் மட்டுமே பெண்களின் உலகமாக இருந்த காலம் இப்போது இல்லை. பல வீடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதால் அவர்களின் வீட்டு வேலைகள் குறைந்துவிட்டதா என்றால் இல்லை. என்ன வேலைக்குச் சென்றாலும், சடங்குகள், மத நம்பிக்கைகளில் விருப்பம் இல்லாவிட்டாலும், வீட்டில் விஷேசங்கள், பண்டிகைகளைக் கொண்டாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் பல பெண்கள் இருக்கின்றனர்.