UNLEASH THE UNTOLD

காதலுக்காக காபூலுக்குத் தப்பிச் சென்ற இந்தியப் பெண்

பெண்களைச் சித்திரவதைச் செய்வது என்பது இந்தச் சமூகத்தைப் பொருத்தவரை எந்த ஆணுக்கும் பெரும் வீரச் செயல். என் கணவர் வீட்டில் ஒரு கணம்கூட அமைதியான சிந்தனைக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தானில் எந்தப் பெண்ணுக்கும் சிந்திக்கவோ கூர்ந்து ஆராயவோ இடமில்லை. சாப்பிடுவீர்கள், அரட்டையடிப்பீர்கள், இருட்டியதும் விளக்குகளுடன் உங்கள் அறைகளுக்குச் சென்றுவிடுவீர்கள். மரபுகள், அடிப்படைவாதம், அறியாமை, கல்வியின்மை ஆகியவற்றின் உறையும் நிழலை எதிர்த்துப் போராடுங்கள். இது வறுமை மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டம். இங்கே எப்படிப் புதிய சிந்தனைகளின் விதைகள் முளைக்கும்? எப்படி ஒருவர் வித்தியாசமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ள முடியும்?

காதல் கொலைகள்...

பெண் சாதியைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால், அவள் வேறு சாதி ஆணைக் காதலிப்பதோ அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதோ பெரும் கெளரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சாதி ஆணவக்கொலையில் அதிகளவில் கொலையாவது பெண்கள்தாம்.

சபாபதி - 1941

மோட்டார் பஸ்களுக்கு பெட்ரோல் கிடைக்காததால் மக்களுக்குச் சிரமம் இருப்பதாகவும், கரி போட்டு ஓட்டும் வாகனத்தை ஓட்டச் சொல்லி, அரசு பரிந்துரைப்பதாகவும் செய்தித் தாளில் (தினமணி) வாசிக்கிறார். முதல் பக்கம் நமக்குக் காட்டும் பகுதி, தமிழில்தான் இருக்கிறது. ஆனால், அதே முதல் பக்கத்தில் மடித்து அவர் வாசிக்கும் கீழ்ப்பகுதியை சபாபதி ஆங்கிலத்தில் வாசிக்கிறார். நகைச்சுவைக்காக அவ்வாறு காட்டினார்களா அல்லது உண்மையில் செய்தித் தாள்கள் இரு மொழிகளில் வந்தனவா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப்போர் குறித்த தகவல்கள் ஆங்காங்கே உள்ளன.

'தேவதை' எப்படிச் 'சூனியக்காரி'யாக மாற்றப்பட்டார்?

பெண்கள் ஏன் தேவதைகளாக, சூனியக்காரிகளாக கலகக்காரர்களாக மாறியுள்ளார்கள் என்று விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது. சில கட்டுரைகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. சில கட்டுரைகள் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கலங்க வைத்தாலும் பெருமை கொள்ள வைத்தாலும் இதுவரை பார்த்திராத கண்ணோட்டத்தில் வாசிப்பவரை, ’ ‘பெண் உரிமை’ குறித்து சிந்திக்க வைத்துவிடுகின்றன. சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தால் சிங்கம் தாக்கிவிடும் என்று அச்சம் கொண்ட பெண்ணின் கதை சுவாரசியமாகவும் நிதர்சனத்தைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரிக்கிறது.

இலக்கணம் மாறுதே... 8

“நான் அருணைக் காதலித்தேன். அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அருணைக் காதலித்தாய் சரி, ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்?” என மீண்டும் கேட்டாள் நித்யா.

“காதலிச்சா கல்யாணம்தான் பண்ணுவாங்க. வேறு என்ன பண்ணுவாங்க?” என்று பதில் சொன்னாள் ஷாலினி.

“இல்லை ஷாலினி… நன்றாக யோசித்து பதில் சொல். காதலிச்சா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா என்ன? கல்யாணம் எதுக்காகப் பண்ணின?”

“சமூகத்துல ஒரு அங்கீகாரத்தோட வாழத்தான்…”

வெண்பாவுக்கு ஒரு நியாயம், வேந்தனுக்கு ஒரு நியாயமா?

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

முக்காடுகளை ஆண்களுக்கு அணிவித்த துவாரெக் பெண்கள்!

துவாரெக் பெண்களின் வளமான இலக்கியப் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கதைகளைக் கொண்டு செல்வதற்கு வாய்வழி பாரம்பரியத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பாரம்பரியம் கவிதைகள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புதிர்கள் உள்ளிட்ட வளமான ஆதாரங்களில் இருந்து வருகிறது. திருமணங்கள், பிறப்புகள், பருவங்களின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய சமூக நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கவிதைகள் இயற்றுகிறார்கள்.

தி கிரேட் இண்டியன் ஃபேமிலிகள்

இந்தக் குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே மட்டுமல்ல வயதானவர்கள், குழந்தைகள் இடையே, வீட்டில் உள்ள மற்ற பெண்கள் புதிதாக வந்த பெண் மீது காட்டுவது என்று நிறைய உறவுகளிடம் ஏற்படலாம். பிரிந்து வாழும் தம்பதியர் இடையே, விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் இடையேகூட ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அது குடும்ப வன்முறையில் சேர்ந்தது.

'அரேன்ஜ்டு மேரேஜ்' பரிதாபங்கள்... 2 

ஆறுமுகம் மாமாதான் ஆரம்பித்தார். “நான் பையனோட தாய் மாமா. இவரு பையனோட அப்பா, மேலாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவங்க பையனோட அம்மா. இல்லத்தரசி. பொண்ணு பொறியியல் முதல் வருசம் படிக்குது. பையன் மூத்தவன், பொண்ணு இரண்டாவது. இவங்க என் இரண்டாவது தங்கை. இவன் அவங்க மகன். பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்…” இப்படி எல்லா உறவுகளையும் கணீரென்ற உரத்த குரலில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆறுமுகம் மாமா.

காகிதப் பை முதல் டயாபர் வரை

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார்.