UNLEASH THE UNTOLD

'துப்பட்டா போடுங்கள் டோலி' என்று சொல்பவரா நீங்கள்?

‘துப்பட்டா போடுங்கள் டோலி’ ரகப் பதிவுகளையும், மீம்களையும், கிண்டல் செய்தும், சிரித்தும் கடந்துவிடுகிறோம். துப்பட்டாவுக்கு பின் இருக்கும் தன் உடல் மீது பெண்ணுக்கு இருக்கும் கோபமும், குற்றவுணர்வும் எத்தனை பேருக்கு தெரியும் தோழர்களே ?

முதல் பெண்கள்

43 பெண்கள் பற்றிய கட்டுரைகளில், சில பெண்களின் பெயர்கள் அதிகமாக தெரிந்திருக்கிறது. சில பெண்களின் பெயர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். பல பெண்களைப் பற்றி இப்பொழுது தான் முதல் முறையாக கேள்விப்படுகிறோம். ஆனால் இந்த பெண்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தாங்கள் தேர்வு செய்த பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கிறார்கள்.

இவள், சமூக மனுஷி

தன் தாயுடன் கிராமம் வந்து சேர்ந்த குப்பாத்தாள் அந்த ஊரின் பெரிய வீட்டுக்காரார் மகனான வெங்கடாசலத்துடன் எதர்த்தாமாகப் பேசியதைப் பார்த்து, வெங்கடாசலம் அவர் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டார். தான் உடுத்திய துணியுடன் குப்பாத்தாவின் வீட்டுக்கு வந்தார். இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரின் அனுபவங்களும் கனவுகளும் கீதாவை சாதாரண மனுஷியில் இருந்து சமூக மனுஷியாக வளர்த்தது.
ஆம் அந்த கிராமத்துக் குழந்தை கீதா எப்படி சமூக மனுஷியாக மாறினாள்?

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்

எனது இதயச்சிறைக்குள் உங்கள் காதல் அமர்ந்து விட்டால்,பின்பு என்னைப் பற்றிய நினைவுடனும், காதலுடனும் எனக்கு ஆறுதலாகவும் இருப்பீர்கள்.நீங்கள் எல்லா விசயங்களிலும் மிகவும் சரியாக இருப்பதாக நான் முழுவதும் நம்புகிறேன், ஆனால் எனது நிலையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்,நான் சோகமான நினைவுகளில் மூழ்குவதையும்,இவற்றையெல்லாம் பற்றி யதார்த்தமாக யோசித்தால் என்னிடம் அவ்வளவு கடினமாக நடந்துகொள்ளமாட்டீர்கள்.

நடமாடும் தெய்வம்

ஒருநாள் மாமா இறந்து போனார். உறவினரிடம் திருமலையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி சொன்னோம்.
இரண்டு புடைவைகளை எடுத்துக்கொண்டு, சலனமில்லாமல் மருத்துவமனை வந்தார். என்ன சொல்வது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது, ‘ரொம்ப நேரம் ஆச்சோ? எப்பப் போய்ச் சேர்ந்தான்?’ என்றார்!

கனடா எனும் கனவு தேசம்

2018அக்டோபர். முதன்முதலில் மேற்கத்திய நாட்டிற்கு நீண்ட தூர விமானப் பயணம். உயரம் என்றால் பயம் என்பதற்காக அதிகம் வெஸ்டர்ன் டாய்லெட் கூட உபயோகித்ததில்லை நாங்கள். விமானப் பயணம் புதிதில்லை என்றாலும் கண்ணை மூடிப் பார்த்தால் அப்பத்தாவும் நாரதரும் கைகோத்துச் செல்லும் காட்சி தோன்றவே, அருகே இருக்கிறது என்று இப்படியே உன்னிடம் அழைத்துவிடாதே கடவுளே என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டோம்.

உலகை மாற்றிய தோழிகள்

ஆண்கள் கோலோச்சிய அறிவுத்துறையில் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், சமூகத்துக்குப் பயன்படும் பல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். ”ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாருமே இல்லை” என்கிறார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

உலக அளவில் சமைப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில் இந்தியாவே முதலிடம் . அதுவும் இந்தியப் பெண்களுக்கு ஒரு வாரத்தில் 14 மணி நேரம் சமைப்பதிலேயே கழிகிறது . வெறும் சமையலுக்கே இவ்வளவு நேரமென்றால், வீட்டின் மற்ற வேலைகளை எல்லாம் கணக்கிலிட்டுப் பாருங்கள்.

முதல் பெண்கள்

பர்தா முறையைப் பின்பற்றாமல், ஆண்களுடன் அரசவையில் வாதம்செய்து, ஆணைகள் பிறப்பித்து, சிங்கம்போல வலம் வந்தாள். படைகளை வழிநடத்தினாள். நஸ்ரியா பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வானியல், கணிதம் என பல பிரிவுகளை நிறுவினாள். ‘வல்லமைமிக்க சுல்தான்’ என்று அச்சிடப்பட்ட செப்பு மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டாள்.