UNLEASH THE UNTOLD

சிபி, ஒரு டீ...

அயர்ந்து உறங்கும் சிபியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதைவிட மென்மையான குரலில், “சிபி, டீ தாப்பா!” என்று எழுப்பிவிட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் பூதத்தீவு

கோடிக்கரையிலிருந்து இலங்கை செல்ல வந்தியத்தேவனை அழைத்துச் செல்லும் பூங்குழலி முதலில் இறங்கும் இடமாகச் சொல்லப்படுகிறது பூதத்தீவு. இந்த இடத்தில்தான் வந்தியத்தேவனை கரையிலேயே நிறுத்திவிட்டு, பூங்குழலி மட்டும் பூதத்தீவிற்குள் சென்று ஊமை ராணியைச் சந்தித்து அருள்மொழிவர்மன் இருப்பிடம் கேட்டறிந்து, அதன்பிறகு வந்தியத்தேவனை நாகத்தீவில் இறக்கிவிடுகிறாள். பூதத்தீவு இலங்கையில் புத்தர் முதல் முதலாகக் கால்பதித்த இடமாக நம்பப்படுகிறது. இலங்கையில் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க வந்த புத்தர் இங்குள்ள அரச மரத்தடியில் போதனை செய்ததாகவும், அதனால் முதலில் போதர் தீவு என்று அழைக்கப்பட்டு பின்னர் பூதத்தீவாக மருவியிருக்கிறது என்கிறார்கள்.

மொட்டையக்காவின் ஆண் குழந்தை

கறுப்பு,வெள்ளை, உயரம், குட்டை, பருமன், ஒல்லி என்று மனிதனுக்குள் எத்தனை எத்தனை உருவ வேறுபாடுகள்! ஐந்தறிவு இருப்பதால்தான் மிருகம் மனிதனாகவும் ஆறறிவு இருப்பதால் மனிதன் மிருகமாகவும் வாழ்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகளின் மனத்தில் பதியும் இந்த எண்ணங்களே வளரும்போது தாழ்வு மனப்பான்மையாக மாறுகிறது. வளர்ந்த பிறகு, திருமண பந்தத்தில் தனக்கான துணையைத் தேர்வு செய்வதில் தோற்றுவிடுகின்றனர். அழகு என்பது ஒரு மனிதனின் பண்பில் உள்ளது என்பதை எப்பொழுது இந்தச் சமூகம் உணரப் போகிறது?

பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறை விளைவுகள் தருமா?

ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

யோசித்து பாருங்கள், அன்பைப் பெற அல்லது அன்பைக் கொடுக்க தகுதி வேண்டுமா என்ன? உண்மையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களைத் துய்ப்பதற்கும், இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது. இங்கு நாம் வாழ்வது ஒன்றே போதுமானது. நாமாக இருப்பதே போதும்.

இனியும் தொடர்ந்து விளையாடுவீர்களா?

நெ: சிறப்பான முடிவு. தந்தைமையின் புனிதம் எவ்வளவு உயர்வானது என்று நிரூபித்துவிட்டீர்கள். புகழ் மிக்க விளையாட்டு வீரராக இருப்பது, பொறுப்பான அன்புத் தந்தையாக இருப்பது, ஓர் ஆணுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள்?

இந்தியாவுடன் பிணைந்துள்ள இலங்கைக் கலாச்சாரம்

பொது இடங்களில் புகைப்பிடிப்பதும் சிறுநீர் கழிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிகளையும் சட்டதிட்டங்களையும் மிகச் சரியாகப் பின்பற்றவும் செய்கின்றனர். சாலைவிதிகளும் அபராதங்களும் கடுமையாக இருக்கின்றன. கீழ்மட்டங்களில் லஞ்சம், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் நண்பர் மடுதீன். அரசு அலுவலகங்களில் எந்த வேலையை முடிக்கவும், எந்தக் கோப்பை எத்தனை மேசைகள் நகர்த்தவும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என அறிந்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

ஹிஜாப்: மத நம்பிக்கையா? தனிநபர் சுதந்திரமா?

நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வரை ஹிஜாப் அணிந்து சென்றிருக்கிறேன். பள்ளியில் என்னுடன் படித்த சக தோழிகள் புர்கா அணிந்தும் வந்திருக்கின்றனர். ஹிஜாபோ புர்காவோ சக மாணவர்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ எங்களது ஒற்றுமையிலோ எந்தவொரு குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை. சக தோழிகள் அதை அணிந்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். புர்காவை மற்ற மாணவர்கள் விரும்பியதைப் போல புர்காவிலிருந்து வெளிவர நான் விரும்பினேன். கால மாற்றம், சமூக சூழல், வாசிப்பு, புர்கா அணிய வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் என எல்லாம் அந்த மாற்றத்திற்குக் காரணங்களாகின.