UNLEASH THE UNTOLD

Year: 2024

நவீன் வீட்டில் ஷாலினி - இலக்கணம் மாறுதே...16

”நாம ஃபியூச்சர் பத்திப் பேசலாமே” என்றவாறே அவளின் கையை எடுத்துத் தன் இடக்கையில் வைத்துக் கொண்டு, தன் வலக் கையால் மெதுவாக அவளின் கை பெருவிரலின் அடியிலிருந்து மேலாக அழுத்தி நீவிவிட்டான். ஒவ்வொரு விரலுக்கும் அதே அழுத்தம் தந்தான். உள்ளங்கையில் சரியான அழுத்தத்தில் சிறு வட்டமாக அழுத்தி, அப்படியே பெரிய வட்டமாக வரைந்தான். அந்த மசாஜ் அவளுக்கு அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இதமாக இருந்தது.

வெறுப்பு விஷ விதைகளை ‘அன்பு’ எனும் ஆயுதத்தால் களைவோம்!

மனிதகுலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் அறிவார்ந்த சமூகமாக மனித இனம் அறியப்படுகிறது. ஆனால், நம் அறிவு அனைத்தையும் நமக்கெதிராகத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்தான் இந்த இனம் இருக்கிறது. நாம் என்றால் அது நம் மனித இனம் முழுவதையும்தான் குறிக்கும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அத்தனை உயிர்களையும் நமக்கு அளிக்கப்பட்ட ஒன்றாக, நம் பயன்பாட்டுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சுயநலம், இயற்கையைச் சீண்டுவதில் தொடங்கி சக மனிதனைச் சீண்டுவதில் முடிகிறது. அனைத்து மதங்களும் ஓயாமல் போதிப்பது அன்பைத்தான்.

வேண்டாமே கதாநாயக வழிபாடு

‘Self Love’ அதாவது சுய அன்பு / சுயப்பற்று இதுவே இத்தகைய மனப்பான்மையிலிருந்து விடுபடத் தீர்வாக அமையும். நாம் இங்கே யாரையும் விடத் தாழ்ந்தவர் இல்லை என்பதை முற்றிலுமாக உணரவேண்டும்.

பெண்களின் உலகைத் திரையில் காட்சிப்படுத்த விரும்பினேன் - கண்ணகி திரைப்பட இயக்குநர் நேர்காணல்

எல்லா ஆண்களும் தன் தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கடந்து செல்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிக்கதைகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று உணர்வுகளும் வலிகளும் கனவுகளும் உள்ளன. ஆனால், சினிமாக்களில் அவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பிரதிபலிப்பதாகப் பெரும்பாலான காட்சிகள் இல்லை. கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பதில்லை.

ஆடுவது சாமியா, மனிதனா?

அவருடைய அண்ணனும் சாமியாடுபவர். அவரும் தான் சாமியாடும் விஷயத்தை மறைத்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் முடிந்த முதல் வருட திருவிழாவின் போது, கணவன் சாமியாடுவதைக் கண்ட, அவரது மனைவிக்கு அதிர்ச்சி. பெரிய சண்டை போட்டார். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்? தாலி கட்டியாகிவிட்டது, வயிற்றிலோ பிள்ளை! சண்டையிட்டு ஓய்ந்தார், அவ்வளவுதான். இப்போது தமையன் வழியை தம்பியும் பின்பற்ற தயாராகிவிட்டார்.

“நாம மீட் பண்ணலாமா?” - இலக்கணம் மாறுதே...

“ஷாலினி, உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இன்னும் மூணே மாசத்துல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். இதுல கண்டிப்பா, நான் கிளியர் பண்ணிருவேன். ஆன்சர் கீ செக் பண்ணிப் பாத்ததுல ஸ்கோர் நெறையவே வந்திருக்கு. இன்னும் மூணு மாதம்தான். கொஞ்சம் பொறுத்துக்கோ. நீ சீக்கிரமே வேலைய விட்டுடலாம். அன்னைக்கு நான் பேசுனது தப்புதான். நான், அக்கா கிட்ட பேசிக்கிறேன். தயவு செய்து கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்.”

ஆப்பன்ஹைமரின் நிழலில்...

கேனரி பெண்களைத் தெரியுமா? கேனரி என்பது மைக்ரோனீசியத் தீவுகளைச் சேர்ந்த ஒரு மஞ்சள் நிறப்பறவை. முதலாம் உலகப் போர் காலத்தில் பல பிரிட்டிஷ் பெண்கள் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தத் தொழிற்சாலைகளில் சிலவற்றில் டி.என்.டி உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து டி.என்.டியை எதிர்கொண்டதால் இந்தப் பெண்களின் தோலே ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறிவிட்டதாம்! இது கேனரி பறவையின் நிறத்தை நினைவுபடுத்தியதால் இந்தப் பெண்களை கேனரி பெண்கள் என்று அழைத்தார்கள். தோல் நிறமாற்றம் மட்டுமல்லாமல் தலைவலி, குமட்டல் போன்ற பிற பிரச்னைகளும் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்டன. காலப்போக்கில் தொழிற்சாலை நிர்வாகங்கள் பெண்களுக்கு முகக்கவசங்கள் வழங்கத் தொடங்கியதும் இந்தப் பிரச்னை குறைந்தது.