UNLEASH THE UNTOLD

Month: February 2024

வளைவுகளின் ராணி!

360 டிகிரி வரை கோணங்கள் இருக்கும்போது எதற்கு அந்த நேர்கோணலான 90 டிகிரியையே பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். நானும் என் கட்டடங்களும் ஒரு போதும் நீங்கள் கட்டமைத்த பெட்டிக்குள் அடங்க மாட்டோம்” என்று அவர் மேடையில் பேசியபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது.

பள்ளிகளில் பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது?      

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

மாதவிடாய் உதிர ஓவியத்தில் விழிப்புணர்வு

மாதவிடாய் காலங்களில் வரும் ரத்தத்தை  ஏதாவது கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைப்பேன். வீட்டில்  இருக்கும் பெயிண்ட் பிரஷ் கொண்டு போஸ்ட் கார்டில் அல்லது கடினமான தாளில் ஓவியம் வரைவேன். வரைந்த ஓவியங்களை வெயிலில் காயவைத்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பேன். இது கிருமிகளிடமிருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டுமென்று  மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நான்  விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்துப் புரிதல் குறைவாக இருந்தது. ஆண்களையும் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களில் உள்ளடக்கும் நோக்கத்தில் சமூக வலைதளம் மூலமாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு  மாதவிடாய் உதிர ஓவியங்கள் வேண்டுமா  என்று கேட்டு  வரைந்து தருவேன். பெரும்பாலானோர் வாங்கினார்கள். ஒரு சிலர் மட்டுமே பயந்து ஓடினர்.

ஏழை படும் பாடு

அம்பலவாணனிடம் பணம் பறிக்கும் நோக்கில் நாகியின் தம்பியின் கூட்டம், அவரைக் கட்டி வைக்கிறது. அஞ்சலை, காவல் துறைக்குத் தகவல் கொடுக்க, வருபவர், நமது ஜாவர்தான். இப்போது அம்பலவாணன் யார் என்பது அவருக்குத் தெரிகிறது. இதை அறிந்த அம்பலவாணன், லட்சுமியுடன் ஊரைவிட்டுப் போக நினைக்கிறார். அப்போது, உமாகாந்தன், தான் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் லட்சுமிக்கு எழுதி அனுப்பிய கடிதம், அம்பலவாணன் கையில் கிடைக்க, அவர் போராட்டக் களத்திற்குச் செல்கிறார். அங்கு, போராட்டக்காரர்களிடம், ஜாவர் சிக்கி இருப்பதைப் பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் ஜாவரை அவர்கள் கொலை செய்ய துப்பாக்கியை எடுக்கும் போது, அம்பலவாணர் சென்று காப்பாற்றிச் செல்கிறார்.

சேலை கட்டினால்தான் பாரம்பரியமா?

சேலையைக் கட்டினால் நம் கவனம் முழுவதும் சேலையில்தான் இருக்க வேண்டும். சேலை விலகாமல், சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். உடை என்பது ஒருவருக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்துதான், அது பிடித்த உடையாக இருக்க முடியும்.

சபிண்ட உறவுகள் பாவமா?

என்னதான் பழக்க வழக்கம் என்று சொன்னாலும் பண்டைய இந்தியாவில் குடும்பச் சொத்துகள் வெளியே செல்லக் கூடாது என்பதற்காகவே இத்தகைய திருமணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் இத்தகைய உறவுவழித் திருமணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. நெருங்கிய உறவுகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அங்கு திருமண உறவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அறிவில் பெருகிய சமூகம் ஆரோக்கியத்தில்?

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

எது அழகு?

இன்றைய குழந்தைகளிடம் அழகு குறித்த புரிதலையும், வியாபார நோக்கத்தில் அழகு குறித்த தவறான வதந்திகளை உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சமூகத்தையும்  குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

நகர்தல் என்றும் நன்று

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீரே என்னவர் என வாழ்ந்தவர்கள்தாம் இவர்கள் எல்லாரும். இவ்வளவு ஏன் காதலித்துத் திருமணம் செய்து, நல்லபடி வாழ்ந்து மணமுறிவு ஏற்பட்டு வாழ்பவர்கள் இல்லையா? வேறு திருமணமும் அவர்கள் செய்துகொள்வது இல்லையா? வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இணையர் இறந்து வேறு திருமணம் செய்து நிறைவாக வாழ்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? இவர்களால் எல்லாம், கடந்த காலத்தை மறந்து வாழ முடியும்போது, உங்களால் ஏன் முடியாது?

திகம்பர சாமியார்

‘மைசூர்ல மழை வருது, காவேரியில் தண்ணி வருது. அதுக்கு வரி. வித்தா வரி; வாங்கினா வரி; காபி குடிச்சா வரி; வெத்தலையைப் போட்டா போயிலைக்கு வரி; சுருட்ட குடிச்சா நெருப்பெட்டிக்கு வரி;. கொஞ்ச நேரம் தமாஷா பொழுதைப் போக்கிட்டு வரலாமுன்னா அதுக்கும் தமாஷா வரி’ என வரி குறித்து விமரிசனம் வருகிறது.