UNLEASH THE UNTOLD

Year: 2023

கலகப் புத்தகம்

மிலெவா மாரிட்ச், ஐன்ஸ்டீனைவிட அறிவாளி, ஐன்ஸ்டைனின் ஆராய்ச்சிகளில் அவருக்குப் பெரிதும் உதவியவர், ஆயினும் பெண் என்பதால் அவரது பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன. ஐன்ஸ்டைன் கல்லூரி வகுப்பு எடுக்க நோட்ஸ் எடுப்பது, அவரது கல்லூரி உரைக்கான குறிப்புகளைக் கைப்பட எழுதியது உள்ளிட்டவற்றைச் செய்தவர் மிலெவா.

கோடை விடுமுறைக்குத் தயாரா?

இந்தியாவில் ஹோம்ஸ்டே, ஹாஸ்டல்கள் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் கொண்ட தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றின் ரிவ்யூக்களை நிதானமாகப் படித்துப் பார்த்தாலே இதை நடத்துபவர் பற்றிய தகவல்களையும் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும். புதிய அனுபவங்களைத் தேடி ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சில ஆயிரங்கள் அதிகம் செலவானால் பரவாயில்லை என்போர் இத்தகைய தங்குமிடங்களைத் தவிர்த்து வழக்கமான ஹோட்டல்களைத் தேர்வு செய்வதே நல்லது.

<strong>மனிதநேயத்தை மறக்காத இயற்பியலாளர்</strong>

நியூட்ரான்களைக் கொண்டு இடித்தால், யுரேனியம் இரண்டு தனிமங்களாகப் பிரிவதாக ஹானின் குழு கண்டுபிடித்தது. வியந்துபோன ஹான், ‘இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான அட்டகாசமான விளக்கம் ஒன்றை நீங்கள் தருவீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று மெய்ட்னருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துத் தரவுகளை ஆராய்ந்து, ‘அணுக்கரு பிளவு’ (Nuclear fission) என்ற கருத்தாக்கத்தை மெய்ட்னர் முன்வைத்தார். அணுக்களின் காலகட்டம் பிறந்தது. வரலாறு அந்த நொடியிலிருந்து மாறியது.

பொறுத்தது போதும், பொங்கி எழு...

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

குழந்தைகளை அதைச் செய், இதைச் செய் என்றால் பிடிக்காது. அவர்களது ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று கூறுகிறார். இன்று பல குழந்தைகள் யூடியூப் வீடியோக்கள் பார்த்தே பொழுதைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வைக் கொண்டாடலாம் என்று பெற்றோர் மனதில் விதைக்கிறார்.

<strong>எக்காலும் ஏய்ப்பில் தொழில்</strong>

இன்னொருபுறம் இந்த ஆடை தொழிற்கூடங்களில் வேலை செய்வது யார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஆடை பணியாளர்களில் 60% பேர் பெண்கள்தாம். உலக அளவிலேயே 80% ஆடை பணியாளர்கள் பெண்கள்தாம், அதிலும் பெரும்பாலான மேலை நாட்டு ஆடை நிறுவனங்களின் உற்பத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிற்கூடங்களில்தாம் நடக்கின்றன. ஆகவே, உலகளாவிய ஆடை உற்பத்தியில் வளரும் நாடுகளின் பெண்கள்தாம் பெரும்பாலான தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

பெண்களைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ்

மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.

அச்சச்சோ, உடம்பு சரியில்லையா வருண்?

நிலா வீட்டுக்குள் நுழைந்ததும் வருணின் தம்பியும் ஒன்று விட்ட மச்சினர்களும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளறைக்கு ஓடிவிட்டார்கள். மீசை லேசாக அரும்பத் தொடங்கி இருந்த பையன் ஒருவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் நிலா.

இன்றைய தலைமுறைக்கு இன்னும் வலுவான தேவி தேவை...

இந்த நாவலின் ஆரம்பத்திலேயே தேவி படித்தவளாக, சுய சிந்தனை உடையவளாக, தப்பைத் தட்டிக் கேட்கிறவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஓர் ஏழைப் பெண்ணை ஒருவன் அவமானப்படுத்தியதற்கு ஓர் ஆண் என்று ஒதுங்கி விடாமல் அவனை எதிர் கேள்வி கேட்கிறாள்.

<strong>குரல்கள்</strong>

நானறிந்தவரை, கணவன் மனைவி உறவில், சிலருக்குத் தினம் பார்த்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும்; சிலருக்கு வாரமொருமுறை, சிலருக்கோ மாதம் ஒருமுறையே போதுமானது; சிலரோ வருடத்திற்கொருமுறை சந்திக்கிற கணவன் மனைவியாக இருந்தால்தான் அந்தத் தாம்பத்யம் நிலைத்திருக்கும்.