UNLEASH THE UNTOLD

Month: April 2022

ஆசியாவின் முதல் வானொலிச் சேவை!

பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூயத் தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்ததன் மூலம், அறிவிப்பாளர்கள் தங்களது தேமதுரக் குரலால், தமிழ் ரசிகர்களை இலங்கை வானொலிக்காகத் தவம் கிடக்கச் செய்தனர்.

பயப்படாதே கண்மணியே...

பள்ளியில் சாதாரணமாக இரு குழந்தைகளிடையே சண்டை வருவதும் அது அடிதடி வரை போவதும் இயல்பான ஒன்று தான். பெண் குழந்தைகள் என்பதாலேயோ, அல்லது வயதில் சிறியவள் என்பதாலேயோ பொறுத்துப் போக வேண்டும் என்று செல்வராணியைக் கூறுவது சரியல்ல. முதலில் இந்தப் பிரச்னையைத் தலைமை ஆசிரியர் அணுகிய விதமே ஏற்புடையதல்ல.

குட்டி ஏன் அதிர்ச்சியடைந்தாள்?

ஒரே விஷயத்தைத் தொடர்ந்து யோசிக்கும்போது, அதில் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் யாவும் பூதாகரமாய் தெரிய ஆரம்பிக்கின்றன. ரதியாளுக்கு அது தான் நடந்துகொண்டிருந்தது.

தோப்புக்குப் போய்ப் பார்த்தபோது, நிஜமாகவே கழுகும் காக்காயும் ஒவ்வொரு பக்கம் கூட்டமாகத் தான் இருந்தன. சண்டையெல்லாம் இல்லை. அது அவன் கற்பனை.

பொருளாதாரச் சுதந்திரமும் பெண்விடுதலையும்

திருமணத்திற்குப் பிறகு எத்தனை பெண்களால் தன் பெற்றோர்களுக்குப் பிறந்த வீட்டிற்குப் பொருளாதார உதவியைத் தொடர்ந்து செய்துவிட முடிகிறது? பாலின சமத்துவத்தில் மிக முக்கியமானது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே.

இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீதப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நுட்பமாகச் சிந்தித்தால் பல பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

வள்ளியக்காவின் காதல்

இந்த வயதில் காதல் வர காரணங்கள் ஆயிரம் இருப்பினும் தனக்குப் பிடித்த நபர்கள் காதலிப்பதைப் பார்த்து தானும் காதலித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதுதான் ஆகச் சிறந்த வேதனை. தேவையா, அவசியமா இவற்றையெல்லாம் தாண்டி ஒரு காதல் நிச்சயமாக வேண்டியிருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த தீவு!

செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக, விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறது ராமாயணம். “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” போன்ற, இந்தியா வல்லரசாவதற்குத் தேவையான அதி முக்கியப் பட்டிமன்றங்கள் நிகழக் காரணமாக இருந்த, ராமாயணக் (கட்டுக்)கதைகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட, இலங்கையும் தமிழகமும் இலக்கியத்தால், வரலாற்றால் பின்னிப் பிணைந்திருந்ததற்கான ஆதாரங்களைக் காலந்தோறும் பார்க்க முடிகிறது.