UNLEASH THE UNTOLD

Month: April 2021

லூசியின் ஆயுதம்

ஐந்தில் ஒரு பகுதி பணிகளை மட்டுமே ஆண்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்மை ஆண்களுக்கும் தெரிந்திருந்தது. நம் குழுவில் உள்ள பெண்கள் நம்மைவிட மேலானவர்கள், நம்மைவிட அதிகம் உழைப்பவர்கள், நம்மைவிட அதிகத் திறமை கொண்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள அப்போதைய ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் லூசிக்களை அதிசயமானவர்களாக, அசாத்தியமானவர்களாகக் கண்டார்கள். ஆண்களைவிடவும், மனித குலத்தைவிடவும் மேலானவர்கள் லூசிக்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அதனாலேயே பெண்களைக் கடவுள்களாக அவர்கள் கண்டனர்.

நித்ய சுமங்கலிகள்

சைவக் கடவுள்களும், வைணவக் கடவுள்களும் நுண்கலைகளில் தேர்ந்தவர்கள். இசை வடிவானவர்கள். அவர்களுக்கு ஆடலும் பாடலும் இரு கண்கள். ஆன்மாவின் கீதங்கள். அவர்களே கதாநாயகர்களாகவும், கதை நாயகர்களாகவும் இருக்கும் விந்தை வேறெந்த மதத்திலும் இருந்ததில்லை.
கோயில்கள் செல்வ வளம் படைத்த மாபெரும் பண்பாட்டு கலைக் கூடங்களாக உருவாக்கப்பட்டன. ஆடலும் பாடலும், மனித உறவுகளுக்குள்ள கோபம், தாபம் உள்ள கடவுள்களின் இருப்பிடங்கள் நம் சமூகத்தின் தனித்த அடையாளங்கள். கோயில்களின் வாயிலாகத்தான் இசை, நாட்டியம், ஓவியம், கூத்து,சிற்பம் உள்ளிட்ட நம் கலைகள் வளர்ந்தன.

உலகின் முதல் பெண் கப்பல் உரிமையாளர் சங்கத் தலைவர்- சுமதி மொரார்ஜி

“மொத்தமாகவே உன் கணவரின் அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாயா என்ன?”
“பாபுஜி, ஒரு வேளை நான் அப்படி செய்து இருந்தால், அது நிச்சயமாக நீங்கள் சொல்லித் தந்த வழியே. பெண்கள் தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதில் முழுமனதுடன் பங்கு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது நீங்கள் தானே?”

நீலா

” பெரிம்மா அது கடன்தான்…என்னய விக்கல….இதுக்குதான் நா அப்பிடி சொன்னேன்…ஒங்க பணத்த அடுத்த ஆறு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவன்…ஒங்களுக்கு ஏதாச்சும் ஒதவி வேணும்னு கூப்டா வந்து செஞ்சி தாரேன். வேற ஒண்ணும் வேணாம்” ,எனச் சொல்லிவிட்டு தரதரவென இழுக்காத குறையாகத் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். தன்முன்னாலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு உட்படாத ஒன்று இந்த வீட்டில் நடக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள்.

சமத்துவமும் சுதந்திரமும் நிறைந்த வாழ்க்கை!

பூங்கோதை 1996-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் அறிவொளி திருவிழா நடந்துகொண்டிருந்தது. அங்குதான் கணித விஞ்ஞானி ராமானுஜம் பூங்கோதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பூங்கோதையின் சொந்த ஊர் துறையூருக்கு அருகில் உள்ள கீரம்பூர் கிராமம். அப்பாவும் அம்மாவும்…

டைட்டானிக்கின் ஹீரோயின் யார்?

கடைசியாக, “போட்டை திருப்புகிறாயா? அல்லது உன்னை கடலில் தூக்கி வீசட்டுமா?”, என்று தன் முழு 5 அடி 10 அங்குல உயரத்துக்கும் உடல் நிமிர்த்தி படகின் கேப்டன் ராபர்ட் ஹிட்சென்சை அவர் கேட்க, லைஃப் போட் டைட்டானிக்குக்கு திரும்பி இன்னும் பலரை மீட்டது! கார்பேத்தியா கப்பல் டைட்டானிக்கிலிருந்து மீண்டவர்களை அமெரிக்காவில் இறக்கிவிடும் வரை- தப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் யாராவது பொறுப்பானவர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, கார்பேத்தியாவிலேயே சில வாரங்கள் தங்கி உதவினார் மாலி!

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.

மாபெரும் தாஜ் கனவு

அதிசயம் என்பது தானாகவே உருவானது என்று எனக்கு நானே நிறைய கற்பனை செய்துவைத்திருந்தேன். நான் வளர வளர அதிசயங்கள் குறித்து சிறிது புரிதல் வந்தது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர் அடிக்கடி என்னை அழைத்து உலக அதிசயங்கள் என்ன என்று சொல்லச் சொல்வார். நானும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச் சென்று சொல்வேன். இப்படியாக தாஜ்மஹால் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர் ஊன்றத் தொடங்கியது.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!