தனிமையில் நேரம் செலவிடுகிறீர்களா?
நாம் உணர்வின் பிடியில் இருக்கும் போது, பொதுவாகக் கடந்த காலப் பாதிப்புகளோ, எதிர்காலப் பயங்களோதான் அதிகம் மனதை ஆக்கிரமித்திருக்கும். இதனால் நிகழ்காலம் என்ற ஒன்றிருப்பது நினைவில் இருக்காது. அது போக நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்களால் எதிர்காலப் பயங்களை இல்லாமல் செய்யவோ, எதிர்கொள்ளவோ முடியும் என்றும் யோசிக்க முடியாது. இன்று செய்யும் தவறான செயல்கள் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்கக்கூடும் என்பதும் புரியாது.
