UNLEASH THE UNTOLD

Tag: Thalaimuraigalin kadhai

இடைவெளிகள்

மரபணு பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்வது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். காலம் காலமாக நம் குடும்பங்களில் பின்பற்றப்பட்ட வழக்கத்தைத் தவறென்று சொல்வதா என்கிற கேள்வி இன்றும் பலரிடம் விவாதத்திற்குரியதாக இருக்கிறது. இது தவறா, சரியா என்பதைப் பற்றி விவாதிப்பதைத் தாண்டி இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம்.

உணவுப் பொருள்களின் உருமாற்றம்!

தாவரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் வளங்களை அப்படியே உணவு உற்பத்திக்குத் திசை திருப்பியதுதான் அதிக விளைச்சலுக்கான காரணம். தாவரங்களில் சிலவற்றிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உண்டு. உதாரணமாக நெல் சாகுபடியில் அதிக உயரம் வளராத, ஆனால் அதிக விளைச்சலைத் தருகின்ற ஒரு ரகம் உண்டு என்றால் அந்த ஒரே ஒரு வகை நெல்லை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்வது, அந்த நெல்லின் மரபணுவைப் பரிசோதனை செய்து, அதை எடுத்து பிற நெல் வகைகளில் இணைத்து, பிற நெல் வகைகளையும் இந்த ஒரு குறிப்பிட்ட நெல் வகையைப் போல் மாற்றுவது போன்றவற்றால்தாம் உற்பத்தி அதிகரித்தது. இந்த முறையைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். உணவு முறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்தப் பசுமை புரட்சி தான்.

நீரிழிவு குறைபாடும் மனிதர்களும்

நீரிழிவு குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் இன்சுலின் என்கிற ஹார்மோன் தேவையைவிடக் குறைவாகச் சுரப்பதுதான். இன்சுலின் என்பது ஒருவகையான புரதம். இது உடலில் இருக்கும் ரத்தத் சர்க்கரையின் (blood glucose) அளவைச் சீராக வைத்திருக்கும். கணையத்தில் (pancreas) சுரக்கக்கூடிய இந்த இன்சுலின், தேவையைவிடக் குறைவாகவோ அல்லது முற்றிலும் சுரக்காமலோ இருக்கும் போதுதான் ரத்தச் சர்க்கரையின் அளவு கூடுகிறது. இதைத்தான் நீரிழிவு என்கிறோம். உலகில் பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கும் இந்த நீரிழிவு குறைபாடானது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதுவும் இதில் இருக்கும் இரண்டு முக்கியமான பிரிவுகளைப் பொறுத்துதான் இதன் விளைவுகளும் சிகிச்சைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

கறுப்பு வெள்ளைப் பூக்கள்

நிறக் குருடு உள்ள ஒருவர் சாலையில் செல்லும் போது அங்கே இருக்கும் போக்குவரத்து விளக்குகளில் பிரதானமாக இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை வேறுபடுத்திப் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்க வேண்டும். ஆனால், இது அவர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஒரு நிமிடம் தாமதித்தாலும்கூட அது அந்த நபருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

டைனோசர் உலகம்

மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற வித்தியாசங்கள் இருப்பதற்கு காரணம் இந்தச் சுற்றுச்சூழலும் அதற்கேற்ப தீர்மானிக்கப்பட்ட தாயனையும். இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் தாயனையும் தனித்துவமானது. அதுதான் தடயவியலின் (forensic) அடிப்படை. குற்றம் நடந்த ஓர் இடத்தில் கிடைக்கும் தலைமுடி, நகம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் தாயனையை வைத்து குற்றவாளியைக் கண்டறிவதுதான் தடயவியல். உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் தாயனை இருப்பதால் முடி, நகம், ரத்தம் முதலியவற்றில் இருந்து தாயனையைச் சேகரிக்க முடியும்.

வலி நல்லது

வலியைக் குணப்படுத்துவது பற்றி யோசிக்காமல் வலியின் காரணத்தைக் குணப்படுத்துவதுப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம். அதுதான் நிரந்தர தீர்வும்கூட.

அரச நோய்

இது தவிர குடும்பத்தில் யாருக்கேனும் ஹீமோஃபிலியா இருப்பின் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் கேரியர் டெஸ்டிங் செய்துகொள்வதும் கேரியராக இருப்பின் திருமணத்திற்கு முன்பும், குழந்தைக்காகத் திட்டமிடும் போதும் மகப்பேறு காலத்திலும் மரபணு ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்டு நடப்பது அவசியம்.

தடுப்பூசி ப்ளீஸ்

தடுப்பூசிகளால் இவ்வுலகின் ஜனத்தொகை மீது ஆதிக்கம் செலுத்திய சில நோய்கள் அறவே நீக்கப்பட்டன. மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சில பக்கவிளைவுகள் உள்ளன. அதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு, யார் அந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். கேன்சர், எச்ஐவி போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் மற்றும் ஒரு புரட்சி ஏற்படும்.

டவுன்சிண்ட்ரோம்

டவுன்சிண்ட்ரோம்கூட குரோமோசோம்களின் எண்ணிக்கை மாற்றத்தால் ஏற்படக் கூடியதுதான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டவுன்சிண்ட்ரோம் உடைய நபரின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் நாற்பத்தாறு குரோமோசோம்களில் இருபத்தோராவது குரோமோசோம் ஜோடியில் ஒன்று கூடுதலாக இருக்கும். அதாவது அந்த நபருக்கு இரண்டுக்குப் பதிலாக மூன்று இருபத்தியோராவது க்ரோமோசோம் இருக்கும். இதைத்தான் ‘21 ட்ரைசோமி’ என்று குறிப்பிடுவர். இதனால் அவரின் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை நாற்பத்தியேழாக உயர்ந்திருக்கும்.

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்வோம்

இந்தக் குறைபாடு நிறைய காரணங்களால் ஏற்படலாம், அதில் மரபணு மாற்றங்களும் அடங்கும். இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வேறு சில காரணங்கள் என்று சொல்லப்படுபவை சுற்றுச்சூழலும் உயிரியல் காரணிகளும். அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல் பிறரிடம் நட்பு பாராட்டவோ சகஜமாகப் பேசிப் பழகவோ முடியாது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட உலகில் வாழ்வர். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை ஒரு வயதிற்குள்ளாகவே கண்டறிய முடியும். சில குழந்தைகளுக்கு இரண்டு வயதிற்கு மேல்தான் இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அதுவரை மற்ற குழந்தைகளைப் போல் அவர்களும் சாதரணமாகவே அந்தந்த நேரத்திற்குரிய வளர்ச்சியோடு இருப்பர்.