UNLEASH THE UNTOLD

Tag: Tamil

போர்களுக்குப் பின்னால்... ஸ்திரீ பர்வம் நாடகம்

சர்வாதிகாரம் , பாசிசம், ஆணவம், வளங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்காக ஆட்சியாளர்களால் நடத்தப்படும் போர்கள் எந்தப் பாவமும் அறியாத சாமானியர்களின் உயிர்களைப் பறிக்கின்றன. எல்லாவற்றையும் அழித்துவிட்டு பிணங்களை ஆட்சி செய்யத் துடிக்கிறார்கள் சர்வாதிகாரிகள் என்பதை நாடகம் அழுத்தமாகக் கூறுகிறது.

டெம்ப்ளேட்களும் தாலி சென்டிமெண்ட்களும்

ஒருவேளை தாலி கட்டி, காப்பாற்றும் அந்த உத்தமவான் ஆபத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டுமென்றால் என்ன செய்வான்? அதுவே வயதான பெண்மணியைக் காப்பாற்றவோ அல்லது தங்கை முறையில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றவோ நேர்ந்தால் என்ன செய்வார்கள்? அது ஏன் நாயகியைக் காப்பாற்ற மட்டும் அவர்களுக்குத் தாலிதான் கிடைக்கிறதா?

7. எழுத்தை ஆயுதமாக்கிய பெண்கள்

சினிமா எப்போதும் பெண்களைக் கோழைத்தனத்துடன் அழுதுவடிந்த முகமாகவே சித்தரிக்கிறது. எப்போதும் பெண்கள் ஆணின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறது. நாயகி பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் நாயகன் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் சினிமாவில் எழுதப்படாத விதிகள்.

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

6. ஆன்ட்டி ஹீரோ அலப்பறைகள்

ஆன்ட்டி ஹீரோக்களின் அக்மார்க் பணக்காரத் திமிர் பிடித்த நாயகன் சுதாகர். கம்பீரமான, கவர்ச்சிகரமான தோற்றம் உடையவன். அவனைத் தற்செயலாகச் சினிமா அரங்கத்தில் பார்க்கிறாள் மாயா. பொதுவெளியில் அநாகரிகமாக ஒரு பெண்ணை அவன் அணைத்தபடி நின்றிருந்த விதம் மாயாவை எரிச்சல்படுத்துகிறது. ஆரம்பப் பார்வையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போகிறது.

செருப்பு

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’

மர்மயோகி (1951)

எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

திகம்பர சாமியார்

‘மைசூர்ல மழை வருது, காவேரியில் தண்ணி வருது. அதுக்கு வரி. வித்தா வரி; வாங்கினா வரி; காபி குடிச்சா வரி; வெத்தலையைப் போட்டா போயிலைக்கு வரி; சுருட்ட குடிச்சா நெருப்பெட்டிக்கு வரி;. கொஞ்ச நேரம் தமாஷா பொழுதைப் போக்கிட்டு வரலாமுன்னா அதுக்கும் தமாஷா வரி’ என வரி குறித்து விமரிசனம் வருகிறது.  

துயரத்திலிருந்து என்னை மீட்டது எழுத்து! - ஆர். பொன்னம்மாள்

எனக்கு 19 வயது இருக்கும் போது தமிழ்நாடு என்கிற பத்திரிகை நடத்திய ஒரு கதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்பினேன். இரட்டைப்பரிசு எனும் அந்தக் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அதைப் பார்த்ததும் வானில் இறக்கைக் கட்டிப் பறப்பது போல் இருந்தது. அந்தக் கதைக்குப் பத்து ரூபாய் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் அது பெரிய பணம். அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி கையால் எனக்கு அந்தப் பரிசு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக எனக்குமே இரட்டைப்பரிசுதான்.