UNLEASH THE UNTOLD

Tag: Srilanka

இலங்கை அரசியலின் அணையாத வெம்மை

சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் உருவெடுத்தது. தொடர்ச்சியான போராட்டங்கள் 1983 க்குப் பின்னர் உள்நாட்டுப்போராக மாறியது. தமிழர்கள் கேட்ட, தமிழ் தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்ல, அடையாளத்துக்கான போராட்டம் என்பதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகநாடுகள்கூட புரிந்துகொள்ளவில்லை.

ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும்... டும்... டும்…

“மக்கள் நினைத்தால், ஆகாய விமானங்களைக் கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள், டாங்கிகளைக் கைகளால் புரட்டிப்போட்டுவார்கள்” என்ற ஃபிடல்காஸ்ட்ரேவின் வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருத்தமானவை என்பதை கண்முன் காண்கிறோம்.

புத்தம் சரணம் கச்சாமி

தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையைத் தவறான விதத்தில் முன்னெடுக்கும்போது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது.

நீண்ட காலம் உயிர் வாழும் பெருக்குமரம் எனும் அதிசயம்!

நெடுந்தீவிலுள்ள மற்றொரு பெருக்குமரம் ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக்கூடிய அளவுக்கு மரத்திற்குள் குகை போல, தாராள இடவசதியுடன், மிகுந்த குளிர்ச்சியுடன் காணப்படுமாம். போர்த்துகீசியம், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் பெருக்குமரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

ஈழமும் இலங்கையும் பொருளால் ஒன்றே…

ஈழக்காசு, ஈழக் கழஞ்சு, ஈழச்சேரி, ஈழத்துணவு, ஈழ மண்டலம் என்று பல்வேறு சொற்றொடர்கள் தமிழர்களின் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பயன்பட்டுத்தான் வந்துள்ளன. ஈழ கேசரி, ஈழ நாடு போன்ற பத்திரிகைகள் தோன்றிய காலத்தில்கூட, ஈழம் என்பது முழுத் தீவையுமே குறித்தன. அரசியலில் இன வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தபோது தான், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்க, ‘தமிழீழம்’ என்ற சொல் அறிமுகமானது.

பூகோள எல்லைகளைத் தகர்த்த ஈழமும் தமிழகமும்

சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.

ஆசியாவின் முதல் வானொலிச் சேவை!

பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூயத் தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்ததன் மூலம், அறிவிப்பாளர்கள் தங்களது தேமதுரக் குரலால், தமிழ் ரசிகர்களை இலங்கை வானொலிக்காகத் தவம் கிடக்கச் செய்தனர்.

உலகின் மிகச் சிறந்த தீவு!

செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக, விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறது ராமாயணம். “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” போன்ற, இந்தியா வல்லரசாவதற்குத் தேவையான அதி முக்கியப் பட்டிமன்றங்கள் நிகழக் காரணமாக இருந்த, ராமாயணக் (கட்டுக்)கதைகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட, இலங்கையும் தமிழகமும் இலக்கியத்தால், வரலாற்றால் பின்னிப் பிணைந்திருந்ததற்கான ஆதாரங்களைக் காலந்தோறும் பார்க்க முடிகிறது.

மண்ணும் பெண்ணும்

வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.