சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத்…
பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.
சில பெற்றோர் குண்டாக இருக்கும் பெண் குழந்தைக்குத் தேவையான அளவு உணவைக் கொடுக்காமல், குறைவாகக் கொடுப்பார்கள். ஆனால், எங்கே அதிகம் சாப்பிட்டால் இன்னும் குண்டாகி விடுவோமோ என நினைத்து அதையும் சரியாகச் சாப்பிடாமல், பாதிச் சாப்பாட்டை என் தட்டில் கொட்டிய பள்ளித் தோழியை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.
இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
சரியான திட்டமிடல் இல்லாதவர்கள் வெகு எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். செய்ய இயலாத வேலைகளுக்கு நோ சொல்லுபவர்கள் மனச் சிதைவு நோய்களுக்கு ஆளாவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதை நேர்மறை எண்ணங்களால் லகுவாக வைத்துக் கொள்ள வேண்டும்
என்ன தான் குற்றவுணர்வை உண்டாக்கச் சுற்றி இருப்பவர்கள் துடித்தாலும், இந்தப் புனிதப்படுத்துதலில் சிக்கிக்கொள்ளாமல், குடும்பம் என்பது நம் ஒருவரின் பொறுப்பு மட்டுமில்லை, அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் பொறுப்புமேதான் என்று தெளிந்து, பாலினச் சமத்துவம் தன் குடும்பத்தில் உருவாகப் போராடும் ஒவ்வோர் அம்மாவிற்கும் ’அன்னையர் தின வாழ்த்துகள்.’
ஒவ்வொரு நாளும் விழிக்கும் போதும், இந்த நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம், ஏன் செய்யப் போகிறோம் என்கிற தெளிவுடன் எழுபவருக்கு, எதைச் செய்யக் கூடாது என்கிற தெளிவும் இருக்கும்.
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்வதை இனிமேல் மாற்றி உத்தியோகம் மனுஷ லட்சணம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் வேலைக்குச் செல்வது என்பது புருஷர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அல்ல. அவர்களைவிட அதிகமாக உழைக்கும் பெண்களுக்கும் இதில் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இருபாலருக்கும் பொதுவாக மனுஷ லட்சணம் என்று மாற்றுவதில் தவறு ஒன்றும் இல்லைதானே? பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. பொது அறிவு விரிகிறது. பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை. அடுத்தவருக்குப் பாரமாக இருந்து சுய பச்சாதாபத்தில் மருகிக் கொண்டிருப்பதைவிடப் பணிபுரியச் செல்வது நல்லது.