UNLEASH THE UNTOLD

Tag: M. Mabubee

மாட்டிறைச்சி பொது உணவு இல்லையா?

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

சனாதனத்தின் எதிர்ப்புக் குரல் மாலம்மா

“இதையடுத்து ஊர்கூடி இரு குழந்தைகளையும் பொட்டுகட்டி விடுவதாக  அவர்களின் பெற்றோர் அறிவித்தனர்இதற்குப் பதிலீடாக அக்கிராமத்தின் அரசியல் பஞ்சாயத்துத் தலைவர் இருவருக்கு  தலா  ஒரு  வீடு  தருவதாகவும்  கூறியிருக்கிறார்.  இப்படியாக  அங்கிருக்கும் தலித்  பெண்குழந்தைகள்  தேவதாசிகளாக மாற்றப்படுகிறார்கள்.” 
 
‘தேவதாசி விமோசன அமைப்பு’ என்னும் தங்களது அமைப்புக்கு இந்தச் செய்தி வர, விசாரணையில் இந்த  விஷயங்கள்  எல்லாம்  தெரியவருகிறது.  மேலும் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் போது தேவதாசி  ஒழிப்புச்  சட்டத்தில்  என்னென்ன  குளறுபடிகள்  இருக்கிறது  என்பதும்  தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட   தேவதாசி  பெண்களிடம்  இது  குறித்துப்   பேசும்போது  ஒருவர் கூடத் தான் விருப்பத்துடன் வந்தேன்  எனத்  தெரிவிக்கவில்லை.  எங்களை  வலுகட்டாயமாகவே தேவதாசிகளாக  ஆக்கினார்கள் என்கிற  உண்மையைப்  பெண்கள்  போட்டுடைக்கிறார்கள்.
 
இதற்குக் காரணம் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, அங்கு உள்ள பூசாரி,  கெளடர்கள் போன்ற  செல்வந்தர்கள்  அனைவருமே  குற்றவாளிகள்தாம்  என்பதைச் சட்டத்தில்  சேர்க்க வேண்டும்  என்கிற  தங்களின்  கோரிக்கையை  முன்வைத்துப்  போராடி வருகின்றனர்.
 
”46 ஆறாயிரம் தேவதாசிகள் மற்றும் அவர்களின் குடும்பம் என மொத்தம் 10 லட்சம் பேர்  உள்ளனர். இந்தப் பத்து லட்சத்தில்  உள்ள  குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும்  போது  தீரா அவமானத்திற்கும்  தாழ்வுமனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள்.  இப்படியான  இன்னலுக்கு  ஆளான  தேவதாசிகளிடமும்  அவர்களின்  குழந்தைகளிடம்,  “நீங்கள்  அவமானப்படுவதற்கோ, குற்றவுணர்ச்சிக்குள்ளாகவோ  தேவையில்லை.  உங்கள்  மீது எந்தத் தவறும் இல்லை. உங்களை இந்த  நிலைமைக்குத்  தள்ளிய  சமூகத்தின்  மீதும்,  சனாதனத்தின்  மீது  மட்டுமே  தவறே  தவிர  நீங்கள்  அல்ல” என்று  பேசிவருகிறோம்” என்றார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

கருவறைக்குள் நுழைய முடிந்த பெண்களால் ஏன் அரசியலில் நுழைய முடியவில்லை? சட்டமியற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கக் காரணம் என்ன, கட்சிகளில் அதிகாரமிக்க பொறுப்புகளில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது போன்ற கேள்விகள் அரசியலில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களை நோக்கியும் நம்மை நகர்த்துகிறது.

கட்டணமில்லா பேருந்து என் பார்வையில்...

பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன் என்று அம்பேத்கர் பேசினார். பெண்கள் சமூக, பொருளாதாரரீதியான மாற்றங்களுக்கு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குப் பொதுச்சமூகத்தின் சம்மதத்தைப் பெறா அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுச் சமூகத்தின் ஒப்புதலைப் பெறாத எந்தவொரு திட்டமும் முழுமையடையாது. சட்டரீதியான அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரம் மிகவும் வலிமையானது.

பெண்ணுக்குப் பெண் எதிரியா?

ஊடகங்கள் அறத்தை இழக்காமல் அதன் கடமை உணர்ந்து நடக்க வேண்டும். சமஅளவு எண்ணிக்கையிலுள்ள சக உயிரான பெண்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்துவிடுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோலாது. வியாபாரம் மட்டும் ஊடகத்தின் அறமாகாது. பொதுச் சமூகத்தின் கொண்டாட்டத்தை, சிந்தனையை மாற்றுவதில் ஊடகத்தின் பங்கு  அலப்பறியது. பண்பாட்டு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதில் பண்பாட்டின் முக்கியக் கூறாக இருக்கக்கூடிய ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்தைக் காட்டிலும் முக்கியமானது சமூக சீர்திருத்தம் என்பதை வலியுறுத்தவே  அம்பேத்கர் அரசியல் சீர்திருத்தவாதியைக் காட்டிலும் வலிமையானவர் சமூக சீர்திருத்தவாதி என்கிறார்.

திருமணங்களும் விவாகரத்துகளும்

காதலித்தால் பிரியக் கூடாது. திருமணம் செய்தால் விவாகரத்து வாங்கக் கூடாது. காதலிக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டாயம் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக விதியை ஆண் மேலாதிக்கச் சமூகம் கட்டமைக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் ஆண் மீறும்போது கண்டுகொள்ளாத சமூகம், பெண் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்று பொங்கி எழுகிறது.

ஆண்கள் பலவீனமானவர்கள்...

2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.

ஏழு மணிக்கு மேல நானும் 'இன்ப' லட்சுமி?

புருசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதைவிட அவங்களுக்கு வேற என்ன வேலை இருக்கப் போகிறது? இருக்காது, இருக்கவும் கூடாது என்பதுதானே சமூகத்தின் எழுதப்படாத விதி. ‘நல்ல மனைவி’ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல புராண இதிகாசங்கள் புரட்டியது போதாது என்று புலவர்கள் முதற்கொண்டு தற்போது கவிஞர்கள் வரை தங்களது பணியைச் செவ்வனே செய்துகொண்டு வருகிறார்கள்.

குடும்பங்கள் கொண்டாடும் படம்?

டிரைவர் ஜமுனா, ராங்கி, செம்பி போன்ற படங்கள் மாஸ் ஹீரோக்களின் படத்தை ஒப்பிடுகையில் நல்ல கதை அம்சத்தைக் கொண்ட படங்களே. இன்னும் பொதுச்சமூகம் ஏன் கதாநாயக பிம்பத்தையே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிரச்னைனாலும் அங்கு மீட்பராக கதாநாயகனைத்தான் தேடுகிறது. பெண்ணே அவளுக்கான நீதியைக் கேட்கும்போது ஆண் மனம் அதை ஏற்கத் துணிவதில்லை.

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”