UNLEASH THE UNTOLD

Tag: Innum vazhkkai michamirukkirathu

புற்றுநோய்களும் சிகிச்சை வகைகளும்

இந்த கீமோதெரபி மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் இதனை பல நாட்கள் இடைவெளி விட்டுக் கொடுப்பார்கள். ஏனெனில் இடையில் சாதாரண செல்கள் நன்றாகச் செயல்பட சில நாட்கள் தேவைப்படும். இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இரு வேறு நபர்களுக்கு ஒரே வகையான புற்றுநோய் , அதாவது நுரையீரல் புற்று நோய் இருக்கலாம். ஆனால், இருவருக்கும் ஒரே வகையான கீமோ தெரபி இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரின் தன்மை பொறுத்துப் புற்றுநோய் சிகிச்சை வேறுபடும். ஒரேவகை புற்றுநோய் எத்தனை பேருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை பொருத்து சிகிச்சை தன்மை வேறுபடும். இரண்டு புற்றுநோய்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட புற்றுநோய்க்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. ஒரே வகைப் புற்றுநோயும்கூட அவற்றின் தன்மைகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம்.

புற்றுநோய் வகைகளும் சிகிச்சை முறைகளும்

பொதுவாக கீமோதெரபி மருந்துகள் 3வாரங்களுக்கு ஒரு முறை (21 நாட்கள்) கொடுக்கப்படும். இதன் காரணம் என்ன வென்றால் கீமோதெரபி மருந்துகளுக்கு எது சாதாரண செல், எது புற்றுநோய் செல் என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியாது. எனவே எல்லா செல்களின் DNAவையும் சிதைத்து விடும். ஆனால், சாதாரண செல்கள் மீண்டும் அவற்றில் இருக்கும் நொதியால், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும், அதற்குத்தான் இந்த மூன்று வார கால அவகாசம் உதவுகிறது.

உதாரண மனுஷியாக...

கோவையில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வருகிறார். லீவு எடுக்க முடியாத சூழலில் லீவு எடுக்க வேண்டாம் என்று வைராக்கியத்துடன், அறுவை சிகிச்சை முடிந்தபின் வேதி சிகிச்சை எடுத்துக் கொண்டே அலுவலகத்துக்கும் சென்று, பணிபுரிந்து வருகிறார். வேதிசிகிச்சை கண்டு பெரிதாக அவர் அலட்டிக் கொள்வதே இல்லை. அவரைப் போன மாதம் சந்தித்தபோது மிரண்டுவிட்டேன் அவர் தைரியத்தைப் பார்த்து. எவ்வளவு துணிச்சல் உள்ளவர். 38 வயதுதான் அவருக்கு.

தாய்ச்சி கற்றுக்கொண்டேன்...

நான் பலவீனமாக இருந்ததால் எனக்குப் பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. பேசுவேன், வேலை செய்வேன். ஆனால், தொடர்ந்து ஓர் இடத்தில் நிற்க முடியாது. டாக்டரும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நிற்பதில் கஷ்டம் இருக்கும், கால் வலிக்கும், எனவே நிற்பதைத் தவிர்த்துவிடுங்கள் என்றார். எனவே முதலில் தாய்சி பயிற்சி செய்யும்போது ரவி மாஸ்டரும் சிவா மாஸ்டரும் என்னைக் கையைப் பிடித்து நடத்திச் சென்றே சொல்லிக் கொடுத்தனர்.

சிகிச்சை முடிந்த பிறகு கண்காணிப்பு அவசியம்

1990களில் இருந்து இரு சக்கர வாகனம் பயன்படுத்துகிறேன். அதில்தான் கல்லூரிக்குப் போவேன். இருசக்கர வாகனத்தை எடுத்து சுமார் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டிப் பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்தபோது என்னால் ஒரு பேனாவைக்கூடப் பிடிக்க முடியவில்லை. இப்போது வாகனத்தையே ஓட்ட முடிந்தது.

புடவையிலிருந்து சுடிதாருக்கு மாற்றிய அறுவை சிகிச்சை

21 நாள் இடைவெளியில் கீமோதெரபி கொடுப்பார்கள். ஒவ்வொரு கீமோதெரபிக்கு முன்னும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ரிப்போர்ட்டை அறுவை சிகிச்ச செய்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த செல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதை அறிந்து, குறைந்திருந்தால் ரத்தம் ஏற்ற வேண்டும். எனக்கு ஒருமுறைகூட கீமோதெரபி கொடுக்கும்போது, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகவில்லை. தினமும் கீரை சாப்பிட்டேன். நல்ல புரதச் சத்துள்ள உணவை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டேன். நிறைய பழங்கள், ஜூஸ் சாப்பிட்டேன். மீன் தவிர வேறு எந்த அசைவ உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மிளகு காரம்கூடச் சாப்பிட முடியாது. இதனால்தான் நான் ரத்த விருத்திக்கான மாத்திரைகளைச் சாப்பிடவே இல்லை.

ப்ளீஸ், பார்வையாளர்களை அனுமதிக்காதீர்கள்...

எந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் வீட்டுக்குப் பார்க்க வருபவர்கள் மூலம் கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இதில் கறாராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

கீமோதெரபி எனும் கடினமான காலம்

கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிக்கவே கொடுக்கப்படும். அவை வெவ்வேறு வழிகளில் செயல்படும். பல்வேறு வகையான கீமோ மருந்துகள் உள்ளன. இருப்பினும், அனைத்து கீமோ மருந்துகளும் புற்றுநோய் போன்று வேகமாக வளரும் செல்களைக் கொல்லும். அப்போது நம் உடலில் புதிதாக உருவாகும் செல்களையும் கொன்றுவிடும். இதில் வெவ்வேறு மருந்துகள் புற்றுநோய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களைக் குறிவைக்கின்றன. வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எல்லாருக்கும் ஒரே வகையான கீமோதெரபி மருந்துகள் கொடுக்கப்படுவது இல்லை. அவரவருக்கு ஏற்படும் புற்றுநோய் வகை, நிலை குறித்தே கொடுக்கப்படுகின்றன. அதனால்தான் புற்றுநோயாளிகளுக்கு வேதிசிகிச்சையின் போது நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

வலி இல்லா அறுவை சிகிச்சை!

ஒரு மார்பகம் நீக்கப்பட்டு, கட்டுடன் இருந்த கோலத்தைப் படம்பிடிக்கச் சொன்னேன். எனக்குத் துணையாக வந்தவர்கள் அசதியில் தூங்க, நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து முகலாயர்கள் வரலாறு படிக்க ஆரம்பித்துவிட்டேன். 600 பக்கங்களை இரண்டே நாட்களில் படித்துமுடித்துவிட்டேன்.

இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது!

தூக்கம் வரவில்லை. ஒருவேளை இந்தக் கட்டி புற்றுநோயாக இருக்குமோ? ஐயோ… என் நண்பர் அருணந்தி புற்றுநோயால் அனுபவித்த வேதனைகளை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என் மனம் கலக்கத்தில் ஆழ்ந்தது.