UNLEASH THE UNTOLD

Tag: family

மாற்றம் வரும் நாள் என்றோ?

புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந்தால், இந்த உலகம் இன்று புத்தருக்கு கொடுத்த அதே அங்கீகாரத்தை யசோதரைக்கும் வழங்கியிருக்கும்மா? ஏனென்றால் யசோதரை பெண்ணாகப் பிறந்திருப்பதால், அவர் மீது தேவையற்ற கலங்கத்தையெல்லாம் இவ்வுலகம் பழி சுமத்தியிருக்கும். இதுதான் இன்றும் பெண்களின் நிலைமை.

வெண்பாவுக்கு ஒரு நியாயம், வேந்தனுக்கு ஒரு நியாயமா?

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

தி கிரேட் இண்டியன் ஃபேமிலிகள்

இந்தக் குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே மட்டுமல்ல வயதானவர்கள், குழந்தைகள் இடையே, வீட்டில் உள்ள மற்ற பெண்கள் புதிதாக வந்த பெண் மீது காட்டுவது என்று நிறைய உறவுகளிடம் ஏற்படலாம். பிரிந்து வாழும் தம்பதியர் இடையே, விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் இடையேகூட ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அது குடும்ப வன்முறையில் சேர்ந்தது.

'அரேன்ஜ்டு மேரேஜ்' பரிதாபங்கள்... 2 

ஆறுமுகம் மாமாதான் ஆரம்பித்தார். “நான் பையனோட தாய் மாமா. இவரு பையனோட அப்பா, மேலாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவங்க பையனோட அம்மா. இல்லத்தரசி. பொண்ணு பொறியியல் முதல் வருசம் படிக்குது. பையன் மூத்தவன், பொண்ணு இரண்டாவது. இவங்க என் இரண்டாவது தங்கை. இவன் அவங்க மகன். பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்…” இப்படி எல்லா உறவுகளையும் கணீரென்ற உரத்த குரலில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆறுமுகம் மாமா.

ஓர் ஆணுக்கு இவ்வளவு ரோஷம் இருக்கலாமா?

என் புருசனைத் தானே நான் உரிமையுடன் அடிக்க முடியும். ’லேசாகத்தான் தட்டினேன். கோபித்துக் கொண்டு வந்து விட்டான்’ என்று வருத்தப்பட்டார்.

நீயே சொல் அருண். ஓர் ஆணுக்கு இவ்ளோ ரோஷம் இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்? நீயும்தான் ஒரு குடும்பத்தில் வாழப் போயிருக்கிறாய். எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழவில்லையா? உனக்கு நேரமிருக்கும் போது தம்பியை அழைத்துப் புத்திமதி சொல்.

பிறந்த வீட்டுக்குப் போன தாராவின் புருசன்

“ஆமாம். அநியாயம்ல? ஆனா புருசன் விட்டுட்டுப் போயிட்டாலும் தாரா கேரக்டர் படு சுத்தம். ரோட்ல போற ஒரு ஆம்பளையத் தப்பா பார்க்க மாட்டாங்க. அன்னிக்குப் பலகாரம் கொடுக்கப் போனேன், வாசல்ல தம்மடிச்சிட்டு இருந்தவங்க என்னைப் பார்த்ததும் உள்ள போயி அப்பாவை வரச் சொல்லிட்டாங்க. ஆண்களைச் சமமா மரியாதையா நடத்துறவங்க. அவங்க வாழ்க்கை போய் இப்படி ஆயிடுச்சே. ரொம்பத்தான் திமிரு அவங்க புருசனுக்கு.” – வருண்

திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்ததா?

எது எப்படி இருந்தாலும் சரி, திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்தது என்று சோர்ந்து அமைதியாகி விடாதீர்கள்! நமக்காவும் நாம் வாழ வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் இந்தவோர் அழகான வாழ்க்கையில் நமக்கென்ற ஒரு தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து, அடுத்த தலைமுறைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம். நம் இலக்கை அடைய பல தடைகள் வருவது இயல்பே.

ஷாப்பிங் போகலாமா நிலா?

சென்ற வார இறுதியில் ஷாப்பிங் போகலாம், அப்போது சேர்ந்து போய் வாங்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அயல்நாட்டிலிருந்து வந்த தோழி திடீரென்று ட்ரிப் ஏற்பாடு செய்துவிட்டதால் வெள்ளியன்று மாலை கிளம்பிப் போன நிலா திங்கள் காலைதான் வந்தாள். இடையில் போனையும் எடுக்கவில்லை.

ஏற்பாட்டுத் திருமணப் பரிதாபங்கள் - பெண் பார்க்கும் படலம்!

ஒரே சாதிக்குள் வரன் என்று தேட ஆரம்பித்த போதே திருமண வயதில் உள்ள 98 சதவீத பெண்களை நிராகரித்து விட்டாகியது. மீதி உள்ள பெண்களில் ஜாதகம் பொருந்தி, வர்க்கம் பொருந்தி , இரு குடும்பத்திற்கும் பரஸ்பரம் பிடித்து, சம்பந்தபட்ட இருவருக்கும் பிடித்து… நிற்க… நடுவில் உறவினர்களை மறந்துவிட்டோம். இப்படியான ஒரு கடின பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்பயணதில் அவன் முன்தலை முடிகள் பல கோபித்துக் கொண்டு வர மறுத்து விடை பெற்று இருந்தன.

நிலாவின் உடல்நிலையும் வருணின் சமையலும்

நிலா எதுவும் பேசவில்லை. வருணும் வேலைக்குப் போவதால்தான் பொருளாதாரம் சீராக இருக்கிறது. அவன் வீட்டில் இருப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனாலும் அப்பா சொல்வது நியாயம்தானோ? வருண் தனக்கெனச் சிரமம் எடுத்துத் தனியாக எதுவும் செய்வதில்லை. தோழிகள் ரூபி, ஜான்சி, இவர்களுக்கெல்லாம் வீட்டுக் கணவர்கள் இருந்ததால் மனைவியரை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதாக எண்ணிப் பொறுமுவாள் நிலா.