UNLEASH THE UNTOLD

Tag: abuse

கொடுமைகளுக்கு முடிவு எப்போது வரும்?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

மீ டூ…

பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளியே கூறத் தொடங்கும் போது, நம்மைப் போன்றுதான் பலருக்கும் நடந்திருக்கிறது, இதில் பயப்படவோ குற்ற உணர்வு அடையவோ கவலை கொள்ளவோ தேவையில்லை எனத் தங்களை அமுக்கி வைத்திருக்கும் துயரங்களில் இருந்து எளிதில் வெளிவர இந்த மீ டூ உதவியாக இருக்கும் என்கிற அளவிலும் இது தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

குடும்பமே பெண் குழந்தையிடம் பேசு; அவளைப் பேச விடு!

பெற்றோர், பெண் குழந்தையிடம் தினமும் உரையாட வேண்டும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு உளப்பூர்வமாக, நேர்மையாகப் பதிலளிக்க வேண்டும். அவளைப் பேசவிட வேண்டும்.