UNLEASH THE UNTOLD

சோகை தவிர்ப்போம்; வாகை சூடுவோம்!

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?

கூகுள் மேப் பொய் சொல்லுமா?

கிண்டியில் இருந்து பாரீஸ் கார்னர் போகும் வழியில் பசிக்கிறது என்றால், ரெஸ்டாரண்ட் என்ற வார்த்தையைத் தொட்டால் போதும். நீங்கள் போகும் சாலையில் அல்லது சாலைக்கு மிக அருகில் இருக்கும் உணவகங்களைக் காட்டும். இவ்வளவு நிறைய உணவகங்களைக் காட்டுகிறதே எனக் குழம்பாமல் உங்களுக்கு ஏற்ற மாதிரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். உங்கள் துணைவரைவிடத் துல்லியமாக உங்களுக்கு என்ன பிடிக்கும் என செயலிக்குத் தெரியும்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழலாம்!

ஒரு காட்சியில் ஜெயபாரதியின் மாமியார், ஜெயபாரதியின் அப்பாவிடம், “நீங்கள் உங்கள் மனைவியை அடித்ததில்லையா?” என்பார், அதற்கு அவர், “ஆமாம், நான் இதுவரை அடித்தது இல்லை” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்?

அவள் அவன் அவர்கள்...

அதிருக்கட்டும், அவர் என்னை என்ன நினைத்திருப்பார் என்று எண்ணியதில் அவமானம் பிடுங்கித் தின்றது. அழுததை வேறு கவனித்திருக்கிறார். நான் சரியாகப் பார்க்காததை நானே வாய் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டேன். ஐயகோ, இனி அவசரக்காரியென்று சவாலான வேலைகள் தராமல் போய்விடுவாரோ?

ஏலியன்களா?

புறணி என்பது ஒருவரைப் பற்றிப் பேசுவது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆணோ பெண்ணோ பேசுவதின் மூலம்தான் செய்திகளைப் பகிர்கிறார்கள். புறணி ஒரு வகை தகவல் தொடர்பு பரிமாற்றம்.

உனக்குத் துரோகம் பண்ணுவேனா?

சமையல் கட்டுக்குச் சென்று லைட்டைப் போட்டாள். வழக்கமாக ஓர் இண்டு இடுக்கு விடாமல் சமையற்கட்டைத் துடைத்து விட்டுத்தான் படுக்கப் போவான் சிபி. இன்று போட்டது போட்டபடி எல்லாம் கிடந்த நிலையில் விபரீதத்தை உணர முடிந்தது. ஏதேதோ சிந்தனையில் வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் அப்படியே சோபாவில் கிடந்து ஆதி உறங்கத் தொடங்கிய போது மணி மூன்றிருக்கும்.

மிகப் பெரிய பொய்

பாலியல் வன்கொடுமையை யார் செய்தாலும் அது மோசமான குற்றம் என்கிற தெளிவு நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் இருக்கவேண்டியது. அன்பு, காதல், உறவு, திருணம் போன்ற ஒப்பீடுகளால் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைக் குறைத்துப் பார்ப்பது, பாலியல் வன்கொடுமை செய்கின்றவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, அவர்களுடன் வீட்டை, வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொடர்ந்தும் உறவில் இருப்பது வேதனைமிக்க அனுபவமாக மட்டுமே இருக்கும்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

மதிய உணவு பரிமாறும் அவசரத்தில் வேறு பாத்திரத்திற்கு மாற்றாமல் பிரஷர் குக்கரிலேயே கோழி குழம்பை வைத்து என் மாமாவுக்குப் பரிமாறினார் அத்தை. என் மாமா அந்த குக்கரை குழம்போடு எடுத்துச் சென்று வெளியில் கொட்டிவிட்டு, குக்கரை உடைத்தே விட்டாராம்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் திரிகோணமலை

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி’,  ‘தட்சிண கைலாசம்’ என்றெல்லாம் புகழப்படும்  அதே திருகோணமலை நகரின் மற்றொரு மூலையில், தேசம் பிடிக்கும் பேராசையின் விளைவுகளைப் பறைசாற்றி மௌனமாக நிற்கின்றன… இரண்டாம் உலக யுத்தத்தில் தேசம்விட்டு தேசம்வந்து போரிட்ட பிரிட்டானியப் படைவீரர்களின் 303 கல்லறைகள்.

பாராட்டும் கண்டிப்பும்

செழியனுக்கு காரில் பயணம் செய்வதென்றால் பிடிக்கும். நான் அவனிடம் இதைப் பற்றிப் பேசும்போது, “நாங்க உனக்கு கார் வாங்கித் தருகிறோம் என்று கூற மாட்டோம். நீ படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும்” என்றுதான் கூறுவோம். அந்த வார்த்தை என்னவோ அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சாமி கும்பிடும்போது, “நான் படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும், எல்லாரையும் கார்ல கூட்டிட்டுப் போய் சாப்பிட அவைக்கணும்” என்று வேண்டுவான்.