UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி...

“பொண்ணுங்க ஆண்களைவிட இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருக்குன்னு நீயே சொல்ற இல்லையாப்பா. அதனாலதான் பொண்ணுங்க கட்டாயம் சைக்கிள் கத்துக்கங்கன்னு நான் சொன்னது சரிதானே?”

அத்தனைக்கும் ஆசைப்படு...

மலேசியா ஏர்போர்ட்டில் ட்ரான்சிட். ப்ளைட் மாறுவதற்காக டிக்கெட் ப்ளஸ் விசா செக்கிங் இடத்தில் கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டே வரிசையில் நிற்க, மல்லிகா அக்கா அவரது மகள் ஆனந்தி இரண்டுபேரை மட்டும் தனியாக தள்ளிக்கொண்டு போனார்கள். காரணம் கேட்டு பின்னாடியே ஓடினேன். “உங்கள் இருவருடைய விசாவிலும் சென்றடையும் இடம் ஹோ சி மின் சிட்டி, சீ போர்ட் ( Ho Chi Min City, Seaport) என்று இருக்கிறது. அதாவது நீங்கள் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத்தான் விசா எடுத்திருக்கிறீர்கள். ஆகாய மார்க்கமாக நீங்கள் செல்ல முடியாது, உங்களுக்கு விசா எடுத்துக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.”

அலைபாயும் மனம்...

ஒரு பெண்ணின் பொதுவான மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை. அப்போது ஹார்மோன்கள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்படும். அதிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதவிடாய் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். மூன்றாவது வாரத்தில் உச்சத்திற்குப் போகும், பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பிக்கும். நான்காவது வாரத்தில் படிப்படியாக அதல பாதாளத்துக்குச் சரியும் போதுதான் இந்த ‘மூட் ஸ்விங்’ மெல்ல எட்டிப் பார்க்கும். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுவலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி, மார்பகங்கள் இரண்டும் கல் போல கனப்பது போன்றவையும் தோன்றலாம்.

சாதிகள் இருக்கேடி பாப்பா...

என் சிறுவயதில் எங்கள் ஊர்த் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், ஒடுக்கப்பட்ட மக்கள் கடையின் பின்வாசலில்தான் அமர்ந்து தேநீர் அருந்துவதும் வழக்கமாக இருந்தது. அப்புறம் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டாலும் காகித டம்ளர்கள் அந்த இடத்தைச் சிலகாலம் பிடித்திருந்தன. இப்போதுதான் எல்லாருக்கும் ஒன்றுபோலக் குவளைகள் வழங்கப்படுகின்றன. சிறு குழந்தைகள்கூட, “நீங்க என்ன ஆளுங்கன்னு எங்கம்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க” என்று இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். நாகரீகத்தில் முதிர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்தக் காலத்தில்தான் சாதி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

'தலித் சினிமா' எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?

ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.

கொழுந்தன் கல்யாணம்...

புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.

எதிர்காலம்?

பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மாதவிடாய் தீட்டா?

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

தேவையற்ற குற்றவுணர்வை விட்டுத் தள்ளுங்க...

தவறு செய்திருந்தால்தானே குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும்? ஒரு வேலையை நாம் செய்ய முடியவில்லை என்றாலோ அல்லது தாமதமாகச் செய்தாலோ அதனால் ஏதேனும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது குறித்து தேவையற்ற குற்ற உணர்வை மனதில் பாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஓர் ஆண் தன் மனைவி, குழந்தைகள், பெற்றோருடன் நேரம் செலவிட முடியாததற்கு வருந்துவதில்லை. அது இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பணியிடங்களில்கூட ஆண் சரியாகப் பணியைச் செய்யவில்லை என்றால், அது குறித்துச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். அப்போது பெண் மட்டும் ஏன் கிடந்து உழல வேண்டும்?

இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சிருக்கு...

இந்திய ஆண்களின் விருப்பத்திற்குத் தானே இன்றும் வீடுகளில் சமையல் செய்யப்படுகிறது. எத்தனை வீடுகளில் பெண்கள் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் பெண்கள் முதலில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? அப்படிப் பெண்கள் முதலில் சாப்பிடுவது பெருங்குற்றம் என்றுதானே அவளது மரபணுக்களில் போதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மனைவி அல்லது தாய் பரிமாறினால் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் குலத் திலகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தனக்குப் பின்னால் சாப்பிடுபவளுக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டு, ஏப்பம் விடும் ஆண்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உரிமை இருக்கும் போது சமைக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.