UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

'தலித் சினிமா' எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?

ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.

கொழுந்தன் கல்யாணம்...

புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.

எதிர்காலம்?

பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மாதவிடாய் தீட்டா?

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

தேவையற்ற குற்றவுணர்வை விட்டுத் தள்ளுங்க...

தவறு செய்திருந்தால்தானே குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும்? ஒரு வேலையை நாம் செய்ய முடியவில்லை என்றாலோ அல்லது தாமதமாகச் செய்தாலோ அதனால் ஏதேனும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது குறித்து தேவையற்ற குற்ற உணர்வை மனதில் பாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஓர் ஆண் தன் மனைவி, குழந்தைகள், பெற்றோருடன் நேரம் செலவிட முடியாததற்கு வருந்துவதில்லை. அது இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பணியிடங்களில்கூட ஆண் சரியாகப் பணியைச் செய்யவில்லை என்றால், அது குறித்துச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். அப்போது பெண் மட்டும் ஏன் கிடந்து உழல வேண்டும்?

இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சிருக்கு...

இந்திய ஆண்களின் விருப்பத்திற்குத் தானே இன்றும் வீடுகளில் சமையல் செய்யப்படுகிறது. எத்தனை வீடுகளில் பெண்கள் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் பெண்கள் முதலில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? அப்படிப் பெண்கள் முதலில் சாப்பிடுவது பெருங்குற்றம் என்றுதானே அவளது மரபணுக்களில் போதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மனைவி அல்லது தாய் பரிமாறினால் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் குலத் திலகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தனக்குப் பின்னால் சாப்பிடுபவளுக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டு, ஏப்பம் விடும் ஆண்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உரிமை இருக்கும் போது சமைக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.

சாதி - பெண் - சூழல்

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

கட்டாயம் மிதித்துப் பழக வேண்டும்!

“நல்லா கேளும்மா. இவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள்ல சவாரி செய்யறாங்க. இவளுக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே அதான் வீட்லயே இருக்கா! பயந்தாங்கொள்ளி. இவளோட நாலு வயசு சின்னப் பையன் நானே எவ்ளோ சுலபமா ரெண்டு கைய விட்டுக்கிட்டு ஓட்டுறேன். இவ என்னடான்னா சைக்கிளையே தொடமாட்டிங்கிறா” என்று தன் அக்கா வாணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

அகத்தில் நுழைந்தேன்; அகத்தில் அமிழ்ந்தேன்!

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது.

பால்புதுமையினரும் சூழலும்

“பாலினம், பால்சார் ஒடுக்குமுறை, இனவெறி, பால்புது நபர்கள் மீதான வெறுப்பு ஆகியவை அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள், இவை சக மனிதர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே மாற்றியமைக்கின்றன” என்கிறார் அசமே ஔர்கியா. இந்த ஒடுக்குமுறைகளும் சூழலியலும் இணையும் இடம்தாம் குயர் சூழலியல். இதே குயர் சூழலியலை அடிப்படையாக வைத்து சமகாலத்தின் சூழல்சார்ந்த பிரச்னைகளை அணுகுவது அவசியம். சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் பால்புதுமையினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.