UNLEASH THE UNTOLD

கனலி

கல்வியிலும் மாற்றம் தேவை

1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம்…

சாதிக்குள் முடங்கும் பாரம்பரியக் கலை

பாரம்பரியத்தைச் சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பொழுதுபோக்காகவும் ஆடப்பட்டு வந்த இந்த வள்ளிக் கும்மி இப்போது சாதிப் போர்வைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில்தான் இந்த வள்ளிக் கும்மி எழுச்சி பெற்றிருக்கிறது. இது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகவே இருக்கிறது. மட்டுமன்றி சுய சாதிப் பெருமிதத்தை அவர்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் இப்போது முகநூலில் சாதிப் பெயர், குலப் பெயர் தாங்கிய இளையோர்களின் முகநூல் கணக்குகள் பல்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

 'நோ' சொல்லுங்க...

சரியான திட்டமிடல் இல்லாதவர்கள் வெகு எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். செய்ய இயலாத வேலைகளுக்கு நோ சொல்லுபவர்கள் மனச் சிதைவு நோய்களுக்கு ஆளாவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதை நேர்மறை எண்ணங்களால் லகுவாக வைத்துக் கொள்ள வேண்டும்

   பாராட்டக் கற்றுக் கொள்வோம்...

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.

உள்ளாற எப்போதும் உல்லாலா...

ஒரு வெற்றுப் பாட்டிலில் உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் அதனுள் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது காற்று தானாகவே வெளியேறிவிடும். அது போல நாம் எதிர்மறை எண்ணங்களை நமக்குள்ளிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தால், முதலில் நம் மனதை நேர்மறைச் சிந்தனைகளால் நிரப்ப வேண்டும். அப்போது தானாகவே நாம் நினைத்தது நடக்கும். 

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

நம் குழந்தைகளைச் சரியாக வளர்க்கிறோமா?  

பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.

அர்த்தமுள்ளதா இந்த மதங்கள்?

பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான்.

உத்தியோகம் மனுஷ லட்சணம்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்வதை இனிமேல் மாற்றி உத்தியோகம் மனுஷ லட்சணம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் வேலைக்குச் செல்வது என்பது புருஷர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அல்ல. அவர்களைவிட அதிகமாக உழைக்கும் பெண்களுக்கும் இதில் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இருபாலருக்கும் பொதுவாக மனுஷ லட்சணம் என்று மாற்றுவதில் தவறு ஒன்றும் இல்லைதானே? பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. பொது அறிவு விரிகிறது. பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை. அடுத்தவருக்குப் பாரமாக இருந்து சுய பச்சாதாபத்தில் மருகிக் கொண்டிருப்பதைவிடப் பணிபுரியச் செல்வது நல்லது.