UNLEASH THE UNTOLD

கனலி

அகத்தில் நுழைந்தேன்; அகத்தில் அமிழ்ந்தேன்!

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது.

மலக்குழி மரணங்கள்...

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

சகிக்கப் பழ(க்)குவோம்...

குழந்தைகள் உலகம் தனியானது. கவனமாகக் கையாள வேண்டியது. மாறி வரும் தொழில்நுட்பங்கள், கல்விமுறை, மதிப்பெண் பெற வேண்டிய அழுத்தம், பல கலைகளில் வித்தகராக விளங்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதன் வெளிப்பாடே பெரியவர்களைப் பார்த்துக் குழந்தைகள் எடுக்கும் இத்தகைய முடிவுகள்.

எல்லாரும் கொண்டாடுவோம்!

ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?

ஹார்மோன்களின் கலகம்

மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும். ஆனால், இதைக் குடும்பத்தினரும் குறிப்பாகப் பெண்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலைப் பற்றிய தெளிவு முதலில் நமக்கு இருக்க வேண்டும்.

பாதி கடித்த ருசி மிகுந்த பீச் பழம்

பழங்கால சீனாவின் பேரரசராக இருந்தவரின் காதலன் மிஜி ஸியா, ஒருநாள் அரசருடன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த போது, கனிந்து சாறு கொட்டும் ஒரு பீச் பழத்தைப் பாதி கடித்து சுவைத்து அதன் ருசியில் மயங்கியவன், மீதியை அரசருக்கு அளித்தான். அவர் அதை வாங்கிச் சுவைத்துக் கொண்டே தன் மீது அவன் கொண்டிருக்கும் அலாதியான காதலை ரசித்து உருகினார்.

பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?

போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.

செவிலித்தாய்கள்

செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?           

ராணித் தேனீக்கள்...

நமது சமகால ராணி எலிசபெத் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதனாலேயே அவரால் நெடுங்காலம் ராணியாக நிலைத்திருக்க முடிந்தது. அவரது வாகனம் தனிச்சிறப்பு பெற்றது. பதிவெண் இல்லாதது. அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்மீது யாரும் எந்தவிதமான வழக்குகளும் பதிய இயலாது. இப்படிப் பல்வேறு தனிப்பட்ட சலுகைகள் இருந்தாலும் அத்தனைக்கும் அவர் கொடுத்த ஒரே விலை தனது சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும்தான்.