கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்...
ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.
1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.
ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?
முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.
ஆறு மாதம் முடிந்த நிலையிலும் உதிரப்போக்கில் பெரிதாக மாற்றம் இல்லாமல் போக, அவரிடம் கேட்டதற்குச் சிலருக்கு இது வருடக்கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும். மருந்துடன் நீங்கள் யோகா, தியானம் மேற்கொண்டால் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். அந்த மருத்துவத்தில் எனக்கு ஒரு பலனும் கிட்டவில்லை. 2016 இல் சித்தாவை நிறுத்திவிட்டேன்.
நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.
மிலெவா மாரிட்ச், ஐன்ஸ்டீனைவிட அறிவாளி, ஐன்ஸ்டைனின் ஆராய்ச்சிகளில் அவருக்குப் பெரிதும் உதவியவர், ஆயினும் பெண் என்பதால் அவரது பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன. ஐன்ஸ்டைன் கல்லூரி வகுப்பு எடுக்க நோட்ஸ் எடுப்பது, அவரது கல்லூரி உரைக்கான குறிப்புகளைக் கைப்பட எழுதியது உள்ளிட்டவற்றைச் செய்தவர் மிலெவா.
இந்தியாவில் ஹோம்ஸ்டே, ஹாஸ்டல்கள் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் கொண்ட தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றின் ரிவ்யூக்களை நிதானமாகப் படித்துப் பார்த்தாலே இதை நடத்துபவர் பற்றிய தகவல்களையும் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும். புதிய அனுபவங்களைத் தேடி ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சில ஆயிரங்கள் அதிகம் செலவானால் பரவாயில்லை என்போர் இத்தகைய தங்குமிடங்களைத் தவிர்த்து வழக்கமான ஹோட்டல்களைத் தேர்வு செய்வதே நல்லது.
நியூட்ரான்களைக் கொண்டு இடித்தால், யுரேனியம் இரண்டு தனிமங்களாகப் பிரிவதாக ஹானின் குழு கண்டுபிடித்தது. வியந்துபோன ஹான், ‘இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான அட்டகாசமான விளக்கம் ஒன்றை நீங்கள் தருவீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று மெய்ட்னருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துத் தரவுகளை ஆராய்ந்து, ‘அணுக்கரு பிளவு’ (Nuclear fission) என்ற கருத்தாக்கத்தை மெய்ட்னர் முன்வைத்தார். அணுக்களின் காலகட்டம் பிறந்தது. வரலாறு அந்த நொடியிலிருந்து மாறியது.
ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.