UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?

போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.

உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?

முன்பு அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும்தாம் தங்களின் பேறுகால அனுபவத்தைக் கூறி குழப்பி அடித்து, பீதியை உருவாக்கினார்கள் என்றால், இன்று அதனை இணையம் எடுத்துக் கொண்டுள்ளது. தேவை இல்லாததை கூகுள் செய்து கண்டதையும் கற்பனை செய்துகொண்டு, சின்ன விஷயங்களுக்குப் பூதாகரமாக பயந்து, மன நலம் தொலைத்து, யூ டியூபில் அரைகுறை வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளை, டிப்ஸ்களைப் பின்பற்றுகிறேன் என உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு நான் கூற வருவது ஒன்றே தான், உங்கள் உடல்நிலை குறித்து கூகுளிலில் விடை தேட முயற்சிக்காதீர்கள். நல்ல கைனாகாலஜிஸ்டிடம் சரணடைந்து விடுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

குடும்பங்கள் கொண்டாடும் படம்?

டிரைவர் ஜமுனா, ராங்கி, செம்பி போன்ற படங்கள் மாஸ் ஹீரோக்களின் படத்தை ஒப்பிடுகையில் நல்ல கதை அம்சத்தைக் கொண்ட படங்களே. இன்னும் பொதுச்சமூகம் ஏன் கதாநாயக பிம்பத்தையே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிரச்னைனாலும் அங்கு மீட்பராக கதாநாயகனைத்தான் தேடுகிறது. பெண்ணே அவளுக்கான நீதியைக் கேட்கும்போது ஆண் மனம் அதை ஏற்கத் துணிவதில்லை.

<strong>திருமணமும் தாய்மையும்</strong>

ஓர் ஆண்/பெண் திருமணத்துக்குப் பெற்றோர் மட்டும்தான் காரணமா? இல்லை. நாகரிகமான சமூகம் என்று பீற்றிக்கொள்ளும் நம் சமூகத்தின் மறைமுக அழுத்தமும் காரணம். குறிப்பிடதக்க வயதில் வீட்டில் பெண் அல்லது ஆண் இருந்தாலே, ‘என்ன இன்னும் உங்க பிள்ளைக்குத் திருமணம் செய்யவில்லையா?’ எனப் பலர் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் அந்தப் பெற்றோரையும் பிள்ளைகளையும் கேட்டு சங்கடப்படுத்துவார்கள். இது அநாகரிகம் என்ற சுரணை இன்றுவரை நமது பொது சமூகத்துக்கு இல்லை.

எனோலா ஹோம்ஸ்

“உனக்கு உலகம் மாறத் தேவை இல்லை. ஏனென்றால் உனக்கு உலகம் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.” இப்படி அர்த்தமும் ஆழமும் நிறைந்த வசனங்கள் கதையில் அப்படியே பொருந்திப் போகும். எனோலா ஹோம்ஸ் இன்றைய பல பெண்களின் பிரதிபிம்பம். இன்னும் பல பெண்களின் வாழ்வு சிலந்திவலை போன்ற சமூக விதிமுறைகளிலும் குடும்ப கௌரவத்தின் பிடியிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரஷர் போடாதீர்கள் பெற்றோர்களே!

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம். அவரவர் திறமையை அவரவர் அடையாளம் கண்டுகொள்ளவே அதிக கால அவகாசம் தேவைப்படும், அதுவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அப்படி இருக்க, அவர்களின் திறமையைப் பரீட்சை வைத்து, மதிப்பெண் அடிப்படையில் ஒரே அளவுகோலில் அளவிட இயலாது என்பதே உண்மை.

<strong>அறிந்தும் அறியாமலும்</strong>

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது?

வாணியம்மா கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹரியான்வி, அசாமிஸ், துளு மற்றும் பெங்காலி போன்ற பல இந்திய மொழிகளில் (19 மொழிகள்) பாடியுள்ளார். மூன்று முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மாரத்தான் ஓடப் பழகு

“சுயநலமாக இருங்கள். உங்கள் குழந்தைகள், குடும்பத்திற்காகச் சுயநலமாக இருங்கள். எனக்குப் புற்று நோய் பரிசோதனை செய்யும் போது என் மகளுக்கு நான்கு வயது. இப்போது என் மகள் இருபது வயதைத் தாண்டிவிட்டாள். நம் குழந்தைகள், குடும்பம் ஆகியவற்றிற்காகத் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்.”