UNLEASH THE UNTOLD

அந்தமான் கைதி

‘வெறிநாய் கடித்ததற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும்?’ என ஒரு ஆணால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணைப் பார்த்து, நாயகன் கேட்பது; அவரையே காதலிப்பது போன்ற செயல்கள், அப்போதைய காலகட்டத்தில் முற்போக்கானதாக இருந்து இருக்க வேண்டும்.



மாட்டிறைச்சி பொது உணவு இல்லையா?

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

திருச்செந்தூர்க் கோயிலில் இன்றும் அடிமை முறை

தேவதாசி முறையின் எச்சம், அடிமை முறையின் எச்சம், அரச பரம்பரையினரின் புகழ் பாடும் பழக்கத்தின் எச்சம் போன்றவற்றை திருச்செந்தூர் முருகன் கோவில் பூசாரிகளும், பண்டாரங்களும் கட்டிக்காத்து வருகின்றனர்.

சிங்காரி

‘மேல படிக்க வைச்சதனால்தான் இப்படி மேலே போய் நிக்குது’ என மகள் ஓடிப்போனதற்குப் படிப்பைக் காரணமாக காட்டும் செல்லத்தின் (சிங்காரியின்) அப்பா, ‘படித்திருந்தும் பகுத்தறிவு இழந்தேன்’ எனச் சொல்லும் சிவப்பிரகாசம், ‘அதிகமா படிச்சவனுடைய லட்சணமா இது?’ என கேள்வி கேட்கும் நடராஜன் எனப் படிப்பைச் சுற்றிப் பல சொல்லாடல்கள் வருகின்றன. 

கோயில் கொடை

அவள் எண்ணவோட்டத்தைத் தடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கியிலிருந்து, ‘பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உடனே கோயிலுக்கு முன்பாக வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேளதாளக் கலைஞர்கள் எங்கிருந்தாலும் உடனே விநாயகர் கோயில் முன்பாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பு தொடர்ந்தது.

எழுத்து வியாபாரம்

Kdp அதாவது kindle selectஇல் பதிவேற்றம் செய்யப்படும் நூல்களுக்கு Kindle Edition Normalaized pages (Kenp read counts) அடிப்படையில்தான் ராயல்டி வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை வாசிக்கப்படும் பக்கங்களைப் பொறுத்தது.  ஆனால், இந்த எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டால் சிக்கல்தான். அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த எண்ணிக்கையை அப்படியே அறுபதாயிரம் வரை சரித்து நமக்கான ராயல்ட்டியை ஆறாயிரத்திற்கும் கீழ் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆடித் திரிதல் கண்டால் ஆவி தழுவுதடி

“ஆத்து மணலிலே சோறாக்கி அவரைக்காய்ப் பிஞ்சிலே கறிசமைச்சு
மின்வெட்டாம் பூச்சியில் விளக்கேத்தி
வேடிக்கை பாக்கலாம் சோடிப்பெண்ணே” என்ற எங்க வாப்புமாவின் சிரிப்பாணி வழியும் குரல்.



கார்த்தீஸ்வரி

“இல்ல டீச்சர்… செத்துப் போயிட்டா…” எல்லோரும் அமைதியாய் இருக்க, ஒரு குட்டி வாண்டு கத்தியது. வசந்திக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. என்ன நடந்தது? ஏதும் விபத்தா? விசாரித்த போது, எதையும்  மறைக்கத் தெரியாத அந்தக் குழந்தைகள் கதை கதையாகச் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

தீர்ப்பு வழங்க நாம் யார்?

நாம் மற்றவரைப் பற்றிய பரிவோடு நடந்து கொள்ளாமல் இருக்கும் போது, அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மனம் புண்படும். மனம் அமைதி இன்றி தவிக்கும். குறைந்தபட்சம் நம் மன அமைதிக்காகவாவது மற்றவரிடம் பரிவுடன் இருப்போமே?

பெண் விஞ்ஞானிகள் எப்படிப்பட்ட உடைகளை அணிவது சரியாக இருக்கும்?

ஒருவர் சிறந்த விஞ்ஞானியா இல்லையா என்பது அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது, உடையைப் பொறுத்தது அல்ல. ஆண் விஞ்ஞானிகள் என்று வரும்போது இந்தத் தெளிவான பார்வை இருக்கும். ஆனால், பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. பெண்களை எல்லா இடத்திலும் பின்தொடரும் உடைப் பிரச்னை ஸ்டெம் துறையிலும் அவரைப் பாதிக்கிறது என்பதே கவலைக்குரிய நிதர்சனம். ஸ்டெம் பெண்களுக்கும் உடைக்குமான தொடர்பில் பல்வேறு இழைகள் உண்டு.