UNLEASH THE UNTOLD

Year: 2023

பெண்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.

பாலியல் வர்த்தகத்துக்கு எதிராகப் போராடும் சொமலி மாம்

பாலியல் வர்த்தகத்தையும் பாலியல் சுரண்டலுக்கான ஆள்கடத்தல் வர்த்தகத்தையும் உலகை விட்டு அழித்தே தீருவது என்பதையே தன் லட்சியமாக வரித்துக் கொண்டுள்ள சொமலி, சொமலி மாம் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளான பெண்களை மீட்டெடுக்கப் போராடி வருகிறார்.

கட்டாயம் மிதித்துப் பழக வேண்டும்!

“நல்லா கேளும்மா. இவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள்ல சவாரி செய்யறாங்க. இவளுக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே அதான் வீட்லயே இருக்கா! பயந்தாங்கொள்ளி. இவளோட நாலு வயசு சின்னப் பையன் நானே எவ்ளோ சுலபமா ரெண்டு கைய விட்டுக்கிட்டு ஓட்டுறேன். இவ என்னடான்னா சைக்கிளையே தொடமாட்டிங்கிறா” என்று தன் அக்கா வாணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

வெண்பாவும் வேந்தனும்

”ஏய், மரியாதையா பேசுடா. பல்லைத் தட்டிடுவேன். உன் தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம் போ.” பாதி சாப்பிட்ட முறுகல் தோசைத் தட்டை வீசி எறிந்தாள்.

அகத்தில் நுழைந்தேன்; அகத்தில் அமிழ்ந்தேன்!

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது.

ஆணாதிக்க உலகில் பகடைக்காய்களாகும் நாதிராக்கள்

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ அல்லது மறுமணம் செய்து கொள்ள விரும்புவது அரிதாக இருக்கலாம், ஆனால், இது நடப்பதற்கு சாத்தியமான ஒன்றே. எத்தனையோ மனப்போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு தனக்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத விவாகரத்திலிருந்து நீங்கி, தன் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் நாதிராவின் நம்பிக்கைகளை மதத்தின் விசித்திரமான திருமணச் சட்டம் அப்படியே சுட்டுப் பொசுக்குகிறது.

எல்லைக்கோடு தெரியுமா?

அது எவ்வளவு நெருக்கமான உறவோ நட்போ அந்த எல்லையை மதிக்கும் போது, உறவு இனிமையாகவும் பலமாகவும் உருவாகிறது. இதற்கு முதலில் நம்மை நாம் அறிந்திருக்க வேண்டும், எத்தனை தூரம் மற்றவர் தலையீட்டை அனுமதிக்கலாம், யாரை எங்கே நிறுத்துவது நம் மன நிம்மதிக்கு நல்லது என்கிற தெளிவு தேவை. சில நேரம் இந்த எல்லையின் காரணமாகச் சில உறவை, நட்பை இழக்க நேரலாம். தன் சுய நேசமும் மதிப்பீடும் நன்றாக உள்ள ஒருவர் அதற்கஞ்சுவதில்லை.

நான் எப்படி வந்தேன் அம்மா?

உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.

பிஷ்னாய் சுற்றுச்சூழல் போராளிகள்!

அமிர்தா தேவி மரத்தைக் காப்பாற்ற, அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கட்டுக்கடங்காத மனிதர்கள் மரத்தை வெட்டுவதற்காக அவரது உடலைத் துண்டித்தனர். அவரது மூன்று மகள்கள், தங்கள் தாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, மரங்களைக் கட்டிப்பிடித்து அதே முடிவைச் சந்தித்தனர்.

பால்புதுமையினரும் சூழலும்

“பாலினம், பால்சார் ஒடுக்குமுறை, இனவெறி, பால்புது நபர்கள் மீதான வெறுப்பு ஆகியவை அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள், இவை சக மனிதர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே மாற்றியமைக்கின்றன” என்கிறார் அசமே ஔர்கியா. இந்த ஒடுக்குமுறைகளும் சூழலியலும் இணையும் இடம்தாம் குயர் சூழலியல். இதே குயர் சூழலியலை அடிப்படையாக வைத்து சமகாலத்தின் சூழல்சார்ந்த பிரச்னைகளை அணுகுவது அவசியம். சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் பால்புதுமையினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.