UNLEASH THE UNTOLD

Year: 2023

தேவையற்ற குற்றவுணர்வை விட்டுத் தள்ளுங்க...

தவறு செய்திருந்தால்தானே குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும்? ஒரு வேலையை நாம் செய்ய முடியவில்லை என்றாலோ அல்லது தாமதமாகச் செய்தாலோ அதனால் ஏதேனும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது குறித்து தேவையற்ற குற்ற உணர்வை மனதில் பாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஓர் ஆண் தன் மனைவி, குழந்தைகள், பெற்றோருடன் நேரம் செலவிட முடியாததற்கு வருந்துவதில்லை. அது இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பணியிடங்களில்கூட ஆண் சரியாகப் பணியைச் செய்யவில்லை என்றால், அது குறித்துச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். அப்போது பெண் மட்டும் ஏன் கிடந்து உழல வேண்டும்?

சுயம்வரப் பெண்ணரசிகள்!

சஹாராவின் வறண்ட பகுதிக்கு மழை கொண்டு வரும் வளத்தைக் கொண்டாடும் நோக்கத்துடன் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜெர்வோல் திருவிழாவில், வோடாபே ஆண் நாடோடிகள் ஒரு துணையை ஈர்க்கும் முயற்சியில் திணறும் வெயிலில் மணிக்கணக்கில் ஆடுகிறார்கள். இதற்காகத் தங்களை அழகு படுத்திக்கொள்ள பல மணி நேரம் செலவிடுகிறார்கள்.

தொடு வானம் அது தொடும் தூரம்

ஒரு லட்சியத்திற்காக நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அது நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். அந்த நேர்மறை மாற்றங்களே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் பல மடங்கு அதிகப்படுத்துகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது, வாழ்வில் எது போனாலும் லட்சியப் பிடிமானம் இருந்துவிட்டால் வாழ்வு அழகாகிறது.

உடல், உடை, சர்ச்சை

பெண்கள் உடல் வெளியே தெரிந்துவிட்டால் அவள் உயிர் வாழக் கூடாது, கணவனுக்கு மட்டுமே அவள் உடல் உரித்தானது, அதை அந்நிய ஆண்கள் பார்த்துவிட்டாலே அவள் வாழத் தகுதியற்ற பெண் போன்ற பத்தாம்பசலித்தனமான கருத்துகள் இன்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படுவதால் எத்தனை உயிர்கள் பறிபோகின்றன?

வலி இல்லா அறுவை சிகிச்சை!

ஒரு மார்பகம் நீக்கப்பட்டு, கட்டுடன் இருந்த கோலத்தைப் படம்பிடிக்கச் சொன்னேன். எனக்குத் துணையாக வந்தவர்கள் அசதியில் தூங்க, நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து முகலாயர்கள் வரலாறு படிக்க ஆரம்பித்துவிட்டேன். 600 பக்கங்களை இரண்டே நாட்களில் படித்துமுடித்துவிட்டேன்.

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை கூடாது - அர்ச்சனா சேகர்

நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.

பொண்ணு அவ அப்பா மாதிரி கறுப்பா இருக்கா...

தான் குழந்தையா, சிறுமியா, குமரியா என்றெல்லாம் அறிந்துகொள்ள அவள் முற்படும் முன் முந்திக்கொண்டார்கள் ‘அந்த நாலு பேர்’. “பொண்ணு அப்படியே அவங்க அப்பாவ மாதிரி இருக்கால்ல, உங்க நிறம் இல்லை” என்று அவள் இருக்கும்போதே அவள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கறுப்பான அப்பா மீது வராத கோபம், சிவப்பாக இருந்த அம்மா மீது வந்தது. அவளைவிட வளர்ந்திருந்த உடன்பிறப்புகள் மீது வந்தது.

துருவக் கலைமான் மேய்ப்பர்கள்

சாமி பழங்குடியினர் ‘அரை நாடோடிகள்’, அதாவது அவர்கள் ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. சாமி மேய்ப்பர்கள் பருவக் காலங்களில் தங்கள் துருவக் கலைமான்களுடன் இடம்பெயர்ந்து, குளிர்காலத்திற்காக மலைகளுக்குச் சென்று, கோடையில் சமூகத்துடன் திரும்பி வருகிறார்கள். பயணத்தில், சாமி மேய்ப்பர்கள் லாவ்வோ எனப்படும் பாரம்பரியக் கூடாரத்தில் முகாமிடுவார்கள்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு வீட்டுச் சுத்தத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வேதனை தரும் விஷயம். சீரியல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நேரத்தைப் போக்காமல் தினமும் அரை மணி நேரமாவது அமர்ந்து ப்ரஷ்ஷைக் கொண்டு அழுத்தித் தேய்த்திருந்தால் பாத்ரூம் துலங்கி இருக்கும்.

ஏழு மணிக்கு மேல நானும் 'இன்ப' லட்சுமி?

புருசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதைவிட அவங்களுக்கு வேற என்ன வேலை இருக்கப் போகிறது? இருக்காது, இருக்கவும் கூடாது என்பதுதானே சமூகத்தின் எழுதப்படாத விதி. ‘நல்ல மனைவி’ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல புராண இதிகாசங்கள் புரட்டியது போதாது என்று புலவர்கள் முதற்கொண்டு தற்போது கவிஞர்கள் வரை தங்களது பணியைச் செவ்வனே செய்துகொண்டு வருகிறார்கள்.