UNLEASH THE UNTOLD

Tag: women

சிலந்தி வலை சின் பெண்கள்!

பச்சைக் குத்தல் ஊசிகள் பழங்கால நடைமுறையில், மூன்று கூர்மையான மூங்கில் துண்டுகளை ஒன்றாகக் கட்டியோ மூங்கில் முட்களாலோ செய்யப்படுகின்றன. மாட்டுப் பித்தம், புகைக்கரி, இலைகள், புல் தளிர்கள் மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் கலவையை வைத்து பச்சைக் குத்தும் மையைத் தயாரிக்கிறார்கள். இலைகள் நிறத்தைக் கொடுக்கின்றன, புகைக்கரி கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. புல் தளிர்கள் இறுதியில் சேர்க்கப்படுகின்றன. இது இயற்கையாகக் குணப்படுத்தும் முகத்தின் மறைப்பாகச் செயல்படுகிறது.

பூக்கரு

“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.

சோகை தவிர்ப்போம்; வாகை சூடுவோம்!

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?

டிபன் பாக்ஸ்

லஞ்ச் வேண்டாம் என்று காலையில் என்கிட்ட சொன்னால் என்ன? அவள்தானே இன்னிக்கு லெமன் ரைஸ் கேட்டாள். அவளுக்கு மட்டும் தனியாகச் செய்து கொடுத்தால், இப்படிச் செய்கிறாள். என்ன பண்ணுவது? எல்லாம் நம் தலையெழுத்து என்று புலம்பிக்கொண்டே லஞ்ச் பேக்கை உள்ளே வைத்துவிட்டு, தேநீர் கோப்பையை எடுத்தாள். பால் ஏடுகட்டி ஆறிப் போயிருந்தது. என்ன வாழ்க்கை இது? ஒரு டீகூட நிம்மதியா குடிக்க முடியவில்லை.

மொட்டையக்காவின் ஆண் குழந்தை

கறுப்பு,வெள்ளை, உயரம், குட்டை, பருமன், ஒல்லி என்று மனிதனுக்குள் எத்தனை எத்தனை உருவ வேறுபாடுகள்! ஐந்தறிவு இருப்பதால்தான் மிருகம் மனிதனாகவும் ஆறறிவு இருப்பதால் மனிதன் மிருகமாகவும் வாழ்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகளின் மனத்தில் பதியும் இந்த எண்ணங்களே வளரும்போது தாழ்வு மனப்பான்மையாக மாறுகிறது. வளர்ந்த பிறகு, திருமண பந்தத்தில் தனக்கான துணையைத் தேர்வு செய்வதில் தோற்றுவிடுகின்றனர். அழகு என்பது ஒரு மனிதனின் பண்பில் உள்ளது என்பதை எப்பொழுது இந்தச் சமூகம் உணரப் போகிறது?

தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

நீங்களே மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாம்!

மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டிய எல்லை என்பது அக்குளின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி மார்பின் கீழ்பகுதி, நெஞ்செலும்பின் நடுப்பகுதி, காறை எலும்பின் மேல்பகுதி வரை சென்று மீண்டும் அக்குள் பகுதிவரை சென்று முடியும்.

புத்தகங்களும் பெண்களும்

இந்த வருடத்திற்கான நோபல் பரிசு ஆனி எர்னோவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இதுவரை 114 நோபல் பரிசுகள் இலக்கியத்திற்காக அளிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 14 பரிசுகளை மட்டும் பெண்கள் பெற்று இருக்கின்றனர். இந்த எண்களே வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.

எல்லாம் பய மயம்!

மார்கஸ் அரேலியஸ் சொல்வார், ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லையா, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்கிற முதல் நிலை எண்ணத்தில் மட்டும் மனதை நிற்கச் செய்ய வேண்டும்; இப்படியே நலக்குறைவு அதிகமாகி, குழந்தை இறந்துவிடுமோ என எண்ணங்களின் அடுத்த நிலைக்குப் போகக் கூடாது. இது தேவையற்ற பயங்களிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்யும். நிகழ்வதின் உள்ளபடியேயான தன்மையை உணரச் செய்யும். வேண்டாத, விபரீத கற்பனைகளைக் கட்டுப்படுத்தும்.’

கோபத்தை வெல்வது எப்படி?

இயல்பில் மனிதர்கள் எல்லாருமே அன்பிற்கு ஏங்குபவர்கள்; அன்பானவர்கள். ஆனால், அவர்களுக்குத் தமது வாழ்வில் கிடைத்த மற்றும் கிடைக்காததன் ஏக்கம் கோபம் தன்னிரக்கம் ஏமாற்றம் வெறுப்பு எல்லாமே எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தனது வாழ்வை மற்றவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்.