UNLEASH THE UNTOLD

Tag: Tamil

சாகித்ய அகாடமி கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகி!

அம்மாவின் பனித்துளி நாவல் ரொம்ப பிரபலமாக்கியது. அம்மா பனித்துளி நாவல் எழுதியபோது நிறைய தோழிகள், ‘இந்த நாவலை எழுதியது உங்க அம்மாதானே நாங்க பார்க்கணும்’ என்று சொல்லி அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடைய அம்மாக்களோ அம்மாவை நவராத்திரிக்கு வரச்சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போதுதான் அம்மா ஒரு பெரிய எழுத்தாளர் என்று உணர்ந்தேன். அம்மாவுடைய அருமை பெருமையைக் காலந்தாழ்ந்த பின்னே நாங்கள் புரிந்துகொண்டோம்.

ஞானசவுந்தரி (1948)

ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

கல்வி என்னைக் கர்வியாக்கியது, மடமையால் மதி இழந்தேன். என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என சிந்தாமணி, வருங்கால கணவர் காலில் விழுகிறார். காலில் விழுவது என்பது, பாவேந்தரின் கொள்கைக்கு மாறுபாடானதாகத் தெரிந்தது.

ராஜகுமாரி

தமிழ் நாட்டிற்குள் வரும் மந்திரவாதி, பேய் பிடித்தவர் என வரும் பெண்ணுக்கு, “எருமை சாணியைக் கரைத்து ஊற்றிக் குடுமியில் (முடியில்) ஒரு சாண் வெட்டி இரண்டு நாட்கள் பட்டினி போட வேண்டும்” என மருத்துவம் செய்கிறார்.

பர்மா ராணி

பர்மியத் தளபதியும், பிடிபட்ட இந்திய விமானி ஒருவரும் பேசுவதாக ஓர் உரையாடல் வருகிறது. பர்மிய அதிகாரி, ‘நீயும் ஆசியன், நானும் ஆசியன் இருவரிடமும் ஒற்றுமை வேண்டும்’ எனச் சொல்ல, சீனாக்காரனும்தான் ஆசியன்; இந்த ஒற்றுமை அவர்களிடம் இல்லையே என இவர் கேட்கிறார். இது அப்போதைய புவியியல் அரசியலை நமக்குச் சொல்கிறது.

அசோக் குமார் - அசோகாவதானம்

தியாகராஜ பாகவதரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் ஐயா (அப்பாவின் அப்பா). ஐயா எங்களை வெறுப்பேற்றும் அளவிற்கு தியாகராஜ பாகவதரின் தீவிர ரசிகர். பாகவதர் பாட்டு போடு என சொல்லிவிட்டாலே அன்று நாள் முழுவதும் முடிந்துவிடும். வேறு பாடல்களை மறந்துவிட வேண்டியதுதான். அப்போது மெலோடிஸ் ம்யூசிக் சவுண்ட் சென்டர், டேரா துபாய் என்கிற விளம்பரத்துடன் பாட்டு கேசட்டுகள் வரும். எங்கள் அப்பா பிரபலமான அனைத்து தியாகராஜ பாகவதர் பாடல்களையும் பதிந்து கொண்டு வந்திருந்தார்கள்.

பயணங்களே வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன! - வி. உஷா

வாசிப்பதன் இனிமையைச் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டதுதான் என்னுடைய நல்வாய்ப்பாகத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கின்றன? ஏன், எதற்காக, எப்படி என்கிற கேள்விகள் இயல்பாகவே எழ ஆரம்பித்தன. ஊழ்வினை, பிறவிப்பயன் போன்ற எதுவும் நிஜமில்லை, அனைத்துமே மனிதன் உண்டாக்கியவை என்பதும் புரிய ஆரம்பித்தது. அதுவே எழுதவும் ஆதாரமாக இருந்தது. இருக்கிறது.

விக்கியைத் தெரியுமா?

உலகம் முழுவதும் அடிப்படைத் தகவல்களை நாடுவோர் முதலில் செல்வது விக்கிபீடியாவுக்குத்தான். அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாவுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் விக்கிபீடியா இருக்கிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட மொழிகளில் பல நாடுகளில் இத்தளம் செயல்படுகிறது. பத்துக் கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள். தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பங்களிப்பைச் செலுத்தும் தன்னார்வலராக மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு கோடியை நெருங்குகிறது. ஆங்கிலத்தில் மட்டும் அறுபத்தேழு லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தளவில் ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் இருக்கும் தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.