UNLEASH THE UNTOLD

Tag: self development

மூன்று விதமான குணாதிசயங்கள்

எப்போதும் அடிபணிந்து கொண்டிருப்பவர் தன் வாழ்வின் மீதே பெரும் கசப்பில் இருப்பார்கள். அது மெல்ல மெல்ல தனது வாழ்க்கையை ரசித்து மனம் போல் வாழ்பவரின் மேல் பொறாமையாக மாறும். பொறாமை கொண்ட மனதில் அமைதி ஏது? எப்போதும் உணர்வுகள் கொந்தளிப்பில்தான் இருக்கும். மிகச்சிறந்த உதாரணம் மாமியாரும், மருமகளும். இன்றைய மாமியார்கள் பலர் தங்கள் வாழ்வு முழுதும் தனக்கென ஏதும் யோசிக்காமல் கணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள், ஒரு வேளை பொருளீட்ட பணிக்குப் போனால் அந்தச் சுமை என அத்தனை பொறுப்பையும் சுமந்தவர்கள். குடும்பச் சுமை மொத்தமும் தலையில் இருந்தாலும், தான் சுயமாகச் சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள். தனக்கான சின்ன சின்ன தேவைக்குக்கூட கணவனையோ வீட்டுப் பெரியவர்களையோ கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள்.

தனிமையில் நேரம் செலவிடுகிறீர்களா?

நாம் உணர்வின் பிடியில் இருக்கும் போது, பொதுவாகக் கடந்த காலப் பாதிப்புகளோ, எதிர்காலப் பயங்களோதான் அதிகம் மனதை ஆக்கிரமித்திருக்கும். இதனால் நிகழ்காலம் என்ற ஒன்றிருப்பது நினைவில் இருக்காது. அது போக நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்களால் எதிர்காலப் பயங்களை இல்லாமல் செய்யவோ, எதிர்கொள்ளவோ முடியும் என்றும் யோசிக்க முடியாது. இன்று செய்யும் தவறான செயல்கள் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்கக்கூடும் என்பதும் புரியாது.

முடிவில்லா விளையாட்டு...

துன்பம் வரும் போது இதை நினைவுகூர்ந்தால் வாழ்வு இந்தத் துன்பத்தோடு முடியப் போவதில்லை என்பது மனதிற்குப் புரியும். இந்த நிகழ்வு தந்த அனுபவத்தை மனதில் இருத்தி, அடுத்து வரும் இன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

சவாலே சமாளி

சவாலைப் பிரச்னையாகப் பார்க்கும் ஒருவர், அதை வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்கிற சந்தேகத்துடனும் பயத்துடனும் எதிர்கொள்கிறார். இந்த மனநிலையில் நாம் மிகச் சிறியவராகவும், பிரச்னை பெரிதாகவும் தோன்றும். நம்மைவிடப் பலமான எதிரியிடம் கண்டிப்பாகத் தோற்போம் என்கிற மனநிலையில் தோல்விக்கே வாய்ப்பு அதிகம். அதையும் மீறி ஜெயித்தால் அவர் அதிர்ஷடத்தையோ கடவுளையோதான் காரணம் சொல்லுவாரேயன்றி தன் திறமையை அல்ல. அப்போது ஒவ்வொரு சவாலும் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரும். மன அழுத்தம் நம் சிந்திக்கும், செயல்படும் திறனை மொத்தமாக அழித்துவிடும். வாழ்வு முழுவதும் போராட்டம்தான். சவால்கள் சாபம்தான்.

எதையும் தள்ளிப் போடுபவரா நீங்கள் ?

எதையுமே செய்யப் பிடிக்காதவர்கள்தாம் சோம்பேறிகள். ஆனால், இன்னொரு வகை மக்கள் பிடித்த வேலையை விரைவாகச் செய்வார்கள், பிடிக்காததை, ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஒவ்வாததை அல்லது தனக்குத் தெரியாததைத் தள்ளிப் போடுவார்கள். அந்த நேரத்தின் மன நிலையும் வேலையைத் தள்ளிப்போட காரணமாகும். இதைத் தவிர தன் திறமையின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவார்கள். இது நமது மனநிலை சம்பந்தபட்ட ஒரு சவால்.