UNLEASH THE UNTOLD

Tag: R Kokila

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை கூடாது - அர்ச்சனா சேகர்

நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.

வினைச்சொல்லான பெயர்ச்சொல் : கூகுள்

அரை விநாடிக்குள் நாம் தேடும் பதிலைத் தர 200க்கும் மேற்பட்ட கேள்விகள் மூலம் தரம்பார்த்து மதிப்பெண் வழங்கும் வேலை நடக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆண்கள் நலம்’ என்ற வார்த்தைகளைத் தேடினால் ஆண்கள் உடல் நலம் பற்றிய கட்டுரைகள், மன நலம் பற்றிய கட்டுரைகள், இந்த வார்த்தைகள் உள்ள செய்திகள், கதைகள் எல்லாம் தேடுபதிலில் வரும். இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகள் ஹைப்பர் லிங்காக இருக்கிறதா? எத்தனை முறை இருக்கிறது? தலைப்பில் இருக்கிறதா? யூஆர்எல்-ல் இருக்கிறதா? உள்ளே இருக்கும் பத்தியில் இருக்கிறதா? பேஜ் ரேங்க் என்ன? உள்ளே நுழைபவர்கள் ஸ்க்ரால் செய்து படித்துப் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ள தரமான பக்கமா, பயனர் உள்ளே நுழைந்ததும் மூடிவிடும் டுபாக்கூர் பக்கமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளை வைத்து ஹர்ஸ்டோரிஸ் தளத்துக்கு அதிக மதிப்பெண் கொடுத்து முதலில் காண்பிப்பது என்பதை முடிவு செய்கிறது.

நான் பெண் என்பதால் இரக்கமற்றவள்...

“பெண்கள் எல்லாரும் படித்துப் பொருளாதார நிலையில் முன்னேறிவிட்டதால் ஆண்களை மதிப்பதில்லை. எல்லாரும் குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள்” என்பது பெண்களின் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. புள்ளி விவரங்களின்படி ஒரு சதவீதம் திருமணங்கள் மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைப் பெண்கள் மீது வெட்கமின்றி சுமத்துகிறீர்கள் எனக் கேட்டால், “தேவாவே சொன்னான்” என்பது மாதிரி நானே பாதிக்கப்பட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் என் கண்ணாலேயே பார்த்தேன். நீங்களும் வேண்டுமானால் வந்து பாருங்கள் என்று கோயில் வாசலில் பிச்சை எடுக்க செட்டு சேர்ப்பவர்கள் மாதிரி பதில் சொல்கிறார்கள்.

கோடை விடுமுறைக்குத் தயாரா?

இந்தியாவில் ஹோம்ஸ்டே, ஹாஸ்டல்கள் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் கொண்ட தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றின் ரிவ்யூக்களை நிதானமாகப் படித்துப் பார்த்தாலே இதை நடத்துபவர் பற்றிய தகவல்களையும் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும். புதிய அனுபவங்களைத் தேடி ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சில ஆயிரங்கள் அதிகம் செலவானால் பரவாயில்லை என்போர் இத்தகைய தங்குமிடங்களைத் தவிர்த்து வழக்கமான ஹோட்டல்களைத் தேர்வு செய்வதே நல்லது.

இணையத்தின் கதை

அமெரிக்க ராணுவத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கண்டுபிடிப்பு மக்கள் கைகளுக்கு வந்தது 90களில். இதுவரை நடந்தது எல்லாமே பாதை அமைக்கும் வேலைகள்தாம். இந்தப் பாதையில் செல்வதற்கான கார்கள்தான் வலைத்தளங்கள். 89இல் இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ தகவல்களின் வலை (web of information) எனும் யோசனையை முன்வைத்தார். ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் லேங்குவேஜில் (HTML) எழுதப்பட்ட இவருடைய ஆவணங்கள் ஹைப்பர்லிங்க் மூலம் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்துடன் இணைந்திருந்தது. இந்தப் பக்கங்களை அறிய யுஆர்எல் (URL – Uniform Resource Locator) பயன்படுத்தப்பட்டது. இதை எளிமையாகப் படிக்க ஒரு ப்ரவுஸரையும் உருவாக்கினார். இந்த ப்ரஸருக்கு அவர் வைத்த பெயர்தான் வேர்ல்ட்வைட்வெப்.

கற்றுக் கொடுக்கும் செயலிகள்

மனித மூளை அபார ஆற்றல் உடையது. மூளையின் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றொரு கருத்தும் உண்டு. நினைவுத்திறன், கணிதம், மொழி என தினமும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் இன்னும் கூர்மையாக வேலை செய்யும் என்கிறார்கள் சிலர். உடற்பயிற்சி போல மூளைக்கும் பயிற்சி கொடுக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு : மகிழ்ச்சியா, அச்சமா?

ஒரு நபர் வீட்டின் உள்ளே நுழைந்ததும் விளக்குகளும் மின்விசிறிகளும் தானே உயிர்கொள்வதும், உள்ளே வந்த நபர் களைப்பாகவும் வியர்வையுடனும் இருக்கிறார் என்பதை உணர்ந்து, கூடவே ஏசியும் அவருக்குப் பிடித்த அவர் வழக்கமாகக் கேட்கும் பாடல் ஒன்றையும் போட்டு, அவர் பாடல் வேண்டாம் என்றதும் அதை நிறுத்தி மன்னிப்பு கேட்டால் எப்படி இருக்கும்? இதுதான் செயற்கை நுண்ணறிவு என்பது.

திடீர் எழுத்தாளர்கள் கவனத்திற்கு …

தமிழில் எழுத தட்டச்சு பயில வேண்டும் எனும் அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் தமிழ் ஒலிக்கு ஏற்ப தட்டச்சு செய்தாலே போதும். amma எனத் தட்டச்சு செய்தால் அம்மா என வந்துவிடும். இதைத் தமிழ் ஃபொனடிக் தட்டச்சு என்பார்கள். இது தவிர தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்99, இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ் இன்ஸ்க்ரிப்ட் எனப் பல உள்ளன. அனைத்துமே ஒருக்குறி எழுத்துருகள்தாம்.

உங்கள் டிஜிட்டல் ஆரோக்கியத்தைக் கவனிக்கிறீர்களா?

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தம் திறன்களை வளர்ப்பதும் முன்னேறுவதும் மிகச் சிலர் மட்டுமே. பலர் வேலை நேரத்திலும் சமூக வலைத்தளங்கள், மெசேஜிங் செயலிகள் எனப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில் படைப்புத்திறன் குறைகிறது. வீட்டில் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகிறது. டிஜிட்டல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயலிகள், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் இன்பில்ட் வாய்ப்புகள் எனப் பல உள்ளன. தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய மற்றொரு தொழில்நுட்பம்தான் கைகொடுக்கிறது. இது ஒரு நகைமுரண்.

புத்தகங்களின் எதிர்காலம்

அமேசானில் வாங்காத புத்தகங்களையும் கிண்டிலில் படிக்க முடியும். வை.மு.கோதைநாயகி, ராஜம் கிருஷ்ணன், தொ.பரமசிவம் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பினருக்கும் இவர்களின் எழுத்து போய்ச் சேரவேண்டும் என்ற நல்ல நோக்கில் அரசு பணம் கொடுத்து நூல்களின் உரிமையை வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் இணையத்தில் பி.டி.எஃப், வேர்ட், இபப் எனப் பல வகையில் கிடைக்கின்றன. அச்சில் இல்லாத பழந்தமிழ் நூல்களும் ஸ்கேன் செய்யப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ புத்தகவடிவில் இணையத்தில் உலாவுகின்றன. உலக நாடுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிற மொழிப் புத்தகங்களும் இலவசமாகக் கிடைக்கின்றன.