UNLEASH THE UNTOLD

Tag: Novel

கொட்டிய மழை...

“திருச்செந்தூர் முருகங் கோயில்லயும்  தண்ணில, எவனோ வீடியோ எடுத்து போட்டுருந்தான். கடல் அப்படியே கொந்தழிச்சுச்சு பாத்தியா? சுனாமி கினாமி வந்தாலும் வந்துருமோ?”

10. குடும்ப நாவல் போட்டிகள்

இங்கே இணைய வாசிப்பைப் பெண்களிடையே பிரபலமாக்கியது ஒரே ஒரு வார்த்தைதான். அதுதான் இலவசம்! ஏனெனில் இன்றும் பெண்கள் புத்தகங்களுக்காகச் செலவழிப்பதை எல்லாம் குடும்பங்கள் விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை.

ஈவ்லின்

“அப்பா எங்கேம்மா? நீதான் சண்ட போட்டுட்டு வந்துட்டியாமே? எதுக்குச் சண்ட போட்ட? எனக்கு அப்பா வேணும்” என்று தன்னைப் பாதுகாக்கத் தன் தந்தை தங்களுடன் இல்லாததற்கு அம்மாதான் காரணம் என்று எவ்வளவு சண்டையிட்டிருப்பாள்?

இசக்கிமுத்து

“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன்.  நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.

ஆயிஷா

“பெரியவங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க ஹிரா. நம்ம அதெல்லாம் கண்டுக்காம வுட்ரணும்” என்று அவள் கணவன் சொல்லும் வார்த்தைகள் உண்மைதான் என்று அவன் சொல்லும் போது தோன்றும். எப்போதாவது வரும் அவரிடம் போய் ஏன் மல்லுக் கட்டிக்கொண்டு நிற்பானேன் என்று நினைத்து அவள் விலகிச் சென்றாலும் அவர் வேண்டுமென்றே சண்டை இழுப்பார்.

அபிநயா

“எம்மாடி… ரண்டு வருஷம் கண்ணு மூடி துறக்கதுக்குள்ள போயிரும். போனுலயே எங்க இருந்தாலும் நேருல பாத்து பேசிக்கலாமாமே. அதுல அடிக்கடி பாத்துகிட்டா போச்சி. நீ கலங்காம மவராசியா போயிட்டு வாடி என் ராஜாத்தி . உங்க தாத்தனும் இப்படித்தான் சிலோனுக்குப் போய் தொழில் பாத்தாவல்ல. அந்த வாரிசு இறங்காம இருக்குமா?” என்று தேற்றியவர், அவள் சென்றதும் வருத்தப்படுவார் என்று தெரியும். அவள் சென்னைக்கு படிக்கச் சென்ற போதே ஒரு வாரமாகச்  சரியாகச் சாப்பிடாமல் வருந்தினார் என்று அம்மா சொல்லியிருந்தார் .

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

இப்படிக்கு... இலக்கிய நாசினி - 3

நாம் ஆழ்மனதிலிருந்து நேசிக்கின்ற ஒரு விஷயத்தை அல்லது கனவை அடைவதற்கு இந்தப் பிரபஞ்சமே வழிகாட்டும் என்பது ‘அல்கெமிஸ்ட்’ நாவலின் பிரபலமான வரி. இந்த வரியின் ஆழத்தை உணர்ந்த தருணம் அது.

இப்படிக்கு... இலக்கிய நாசினி

ஒரு வகையில் அம்மாவின் ஆர்வம்தான் அவரை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வைத்தது. அங்கிருந்துதான் அம்மாவின் வாசிப்புப் பழக்கமும் ஆரம்பமாயிற்று. ஒரு வகையில் என்னுடையதும்.