UNLEASH THE UNTOLD

Tag: Kamali Panneerselvam

வாழ்க்கை வசப்பட…

‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி, ஆண்களைக் குறை சொல்லாதீங்க, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் அடக்கினார்கள் என்று பொங்குகிறீர்களே முதலில் மாமியார் மருமக பஞ்சாயத்தை முடிங்க பார்ப்போம்’ என வீரவசனம் பேசுபவர்கள் அதிகம். நிஜத்தில் மாமியார் மருமகள் பிரச்னை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது? மாமனார், மருமகன் பிரச்னை வரவே வராதா? இங்குதான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு பெண்களைத் தங்கள் வசதிக்கு சாதகமாக, பெண்களைக் கொண்டே பெண்ணை ஒடுக்கும் வெளியே தெரியாத மிக தந்திரமான வலை ஒன்றைப் பின்னி, பெண்களையே பொறிகளாக வைத்துள்ளது.

நாற்பதுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது...

குழந்தைகள் படிப்பு அல்லது வேலை, திருமணம் காரணமாகப் பிரிந்து தூரமாகச் சென்றுவிட, அதுவரை குழந்தைகள் உலகம் என்று இருந்த சிலர் Empty nest Syndrome இல் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மெனோபாஸ் சிக்கலுடன் இதுவும் சேர்ந்து எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் எழும் மனப்போராட்டங்களைத் தெளிவாகப் பிரித்து உணர முடியாமல் மனச்சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

நாற்பதுக்குப் பின்...

கணவர், குழந்தைகள்தான் வாழ்க்கை தனக்கென ஒரு வாழ்க்கை இல்லை என்பதான மாய வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தன் இளமைப் பருவம் முழுவதையும் குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும்தான் பெரும்பாலோனர் செலவிடுகின்றனர். குடும்பம் தாண்டி வேறு ஒன்றைச் சிந்திக்க முடியாத நிலை தானாக வாய்க்கப்பெற்றுவிடும். ஏனென்றால் நம் குடும்ப அமைப்பு பெண்களை அப்படியாகத்தான் வார்த்து எடுக்கிறது.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் – 3

சில நேரம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென படபடப்பு ஏற்பட்டு, ஏஸியிலும் வியர்வை பெருகும். இரவு ஆழ்ந்த தூக்கமிருக்காது. அதே போல திடீரென குளிரில் உடல் நடுங்கும். சில நிமிடங்கள் நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது பெரும்பாலும் இதயம் சம்மந்தப்பட்டதில்லை ஹாட் ப்ளஷ் என்றார் மருத்துவர். ஹார்மோன்களின் தாறுமாறான ஏற்ற இறக்கத்தின் விளைவு. சிலருக்கு மார்பில் பாரத்தைச் சுமப்பது போன்ற வலியிருக்கும். அந்த வலி நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போலத் தோன்றும். இது பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் - 2

ஆறு மாதம் முடிந்த நிலையிலும் உதிரப்போக்கில் பெரிதாக மாற்றம் இல்லாமல் போக, அவரிடம் கேட்டதற்குச் சிலருக்கு இது வருடக்கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும். மருந்துடன் நீங்கள் யோகா, தியானம் மேற்கொண்டால் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். அந்த மருத்துவத்தில் எனக்கு ஒரு பலனும் கிட்டவில்லை. 2016 இல் சித்தாவை நிறுத்திவிட்டேன்.

பெண்களைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ்

மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.

வாசெக்டமியை ஏன் ஆண்கள் விரும்புவதில்லை?

சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பும் அளவிற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றாலும் இன்றும் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மிக மிகக் குறைவுதான். ஆயிரம் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதில் ஒருவர்தான் ஆண். இது ஏதோ இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தின் நிலை இல்லை. தமிழகத்தில்தான் என்று ஒரு தரவு சொல்கிறது.

பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

ஆணுறை கருத்தடை சாதனம்தான் என்றாலும் அதில் தோல்விக்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தற்காலிகமான கருவுறுதலைத் தடுக்க ஆணுக்கான மாத்திரைகளோ ஊசிகளோ ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அது குறித்த ஆராய்ச்சி பரவலாக்கப்படவில்லை? கரு உருவாதலில் ஆண், பெண் இருவருக்கும் சமபங்கு இருக்க, அது குறித்த அனைத்து உடல் உபாதைகளும் பெண்ணுக்கானதாகத் தொடர்ந்து வருவது எதனால்? பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

அபார்ஷன்

காப்பான கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை பெண்ணின் முன்னேற்றத்தில் ஒரு பெரிய மைல் கல் என்பதில் துளிக்கூடச் சந்தேகமில்லை என்றாலும், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை, கர்ப்பம் தரிக்காமல் தள்ளிப் போட மேற்கொள்ளும் நடைமுறைகள் ஆணுக்கு மிக எளிதானது. ஆனால், பெரும்பாலும் பெண்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எந்தத் தொந்தரவும் தராத ஒரு தரமான ஆணுறை கரு உருவாவதைத் தடுக்க போதும் என்றாலும், பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும் காப்பர் டி, பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் ஹார்மோன் மாத்திரைகள்தாம் இன்றளவும் பல பெண்களின் கர்ப்பத் தடை சாதனமாக இருந்து வருகிறது.

பிரசவத்துடன் முடிந்துவிடுவதில்லை...

குழந்தை பெற்ற பெண்களுக்குப் போதிய ஓய்வு தேவை என்பதை குடும்பத்தினரும், உறவினர்களும் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையைப் பார்க்கச் செல்கிறேன் என நேரங்காலம் தெரியாமல் சென்று உறங்கும் தாயையும் குழந்தையையும் எழுப்பிவிடுவதைத் துளிக்கூட லஜ்ஜையின்றி செய்வதைத் தவிருங்கள். அதேபோல அவள் உடல் நிலை, மனநிலை பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், குழந்தைக்குப் பேர் வைக்கிறோம், தீட்டு கழிக்க ஹோமம் பண்ணுகிறோம் என டார்ச்சர் செய்யாமல் இருப்பது அந்தப் பெண்ணுக்கு நீங்கள் செய்யும் கூடுதல் உதவி.