அரசியல் உரையாடலைப் பதின்ம பருவத்தில் தொடங்குவோம்!
எங்கும் அப்பாவுடன் கூடவே செல்லும் தென்றல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்க, அப்பாவும் தனக்குத் தெரிந்ததை மகிழ்வோடு பதில் சொல்வார். தன் குழந்தை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாளே என்ற பெருமிதம் இருக்கும். பொண்ணு இப்படி எடக்குமடக்காகக் கேள்வி கேட்கிறாயே என்று ஒரு நாளும் சொன்னதில்லை. மாறாக ஊக்கம் அளித்தே வந்தார்.