UNLEASH THE UNTOLD

Tag: Book Review

'தேவதை' எப்படிச் 'சூனியக்காரி'யாக மாற்றப்பட்டார்?

பெண்கள் ஏன் தேவதைகளாக, சூனியக்காரிகளாக கலகக்காரர்களாக மாறியுள்ளார்கள் என்று விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது. சில கட்டுரைகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. சில கட்டுரைகள் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கலங்க வைத்தாலும் பெருமை கொள்ள வைத்தாலும் இதுவரை பார்த்திராத கண்ணோட்டத்தில் வாசிப்பவரை, ’ ‘பெண் உரிமை’ குறித்து சிந்திக்க வைத்துவிடுகின்றன. சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தால் சிங்கம் தாக்கிவிடும் என்று அச்சம் கொண்ட பெண்ணின் கதை சுவாரசியமாகவும் நிதர்சனத்தைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரிக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய புத்தகம்!

பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதில் இருக்கும் பிரச்னைகளையும் மனச்சிக்கல்களையும் அலசி உள்ளார் ஆசிரியர். சிறுநீரை அடக்குவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்தும் இயற்கைக்கு மாறாக இருப்பினும் அதை இயல்பாக கடந்து வந்தவர்களை என்னவென்று கூறுவது! இந்த மாதிரி நெருக்கடிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பெண்களை இந்தச் சமூகம் நன்றாகப் பயிற்றுவிக்கிறது. இனி வரும் தலைமுறைகள் இத்தகைய சூழ்நிலைகளை விழிப்புணர்வோடு மனச்சிக்கல்களையும் களைந்து சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கோலிட வேண்டும்.          நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது a sound mind in a sound body என்று ஏட்டில் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய பண்பாடு என்கிற போர்வையால் பெண்கள் விளையாடாமல் வீட்டில் அடங்கி இருக்கப் பழக்கி விட்டார்கள்.

பெண் விடுதலைக்கான நூல்

ஒருவர் சுயபரிவுடன் இருந்தால்தான் சக்தியோடு இயங்க முடியும் என்கிற கோணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுயபரிவு இன்மைதான் பெண்களைச் சுய பச்சாதாபத்தில் தள்ளி சக்தி இல்லாதவர்களாக மாற்றுகிறது. கற்பு என்னும் ஒற்றைச் சொல்லைக் கொண்டே பெண்களின் புத்தி மழுக்கடிக்கப்பட்டு, உணர்வுகள் தூண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று சாடுகிறார் ஆசிரியர். பெண்களின் சம்பாத்தியம், தனித்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இவையெல்லாம் பெண்களின் உரிமை என்கிறார்.

அகத்தில் நுழைந்தேன்; அகத்தில் அமிழ்ந்தேன்!

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது.

புத்தம் புதிய வெளிச்சம்!

குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைப் பருவம்தான் நாம் குழந்தைகளுக்கு தரும் உண்மையான சொத்து.
ஏதோ ஒரு தலைமுறையில் யாரோ தொடங்கிய தவறுகளை தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. தீமைகளைத் தடுக்க சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். மலை தடுக்கிறது எனப் பயந்து நிற்க வேண்டாம், துணிந்து ஒவ்வோர் அடியாக எடுத்து நடக்க தொடங்கினால் போதும் மலையையும் எளிதாகக் கடந்துவிடலாம்.

வெற்றி கொள்ள முழு வாழ்க்கையே இருக்கிறது!

‘கற்பதும் மறப்பதும் அவசியம்’ என்ற கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை எப்போது நம் வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்து விடவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு என்றென்றும் வாழ்வை கொண்டாடலாம் என்று சொன்ன விதம் எளிமையாகவும் புதுமையாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது.

பொறுத்தது போதும், பொங்கி எழு...

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.

வாழ வழி காட்டும் புத்தகம்

‘நம் கடமை வாழும் வரை வாழ்ந்து தீர்ப்பதே, சாகும்போது புலம்பாமல் விருப்பத்துடன் சேர்த்து தொலைவதே’ என்று இவர் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் உச்சகட்ட சோகத்தையும் தகர்க்கக் கூடியதாகவே உணர முடிந்தது.

நளினி ஜமீலா

கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வந்த இவர், பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுத்து வந்ததுடன் நிறுத்திவிடாமல் ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

பண்பாட்டுக் கட்டமைப்பு எனும் பாலின ஒடுக்குமுறை

பெண்ணடிமைத் தன்மையிலிருந்து தங்களுக்கு விலக்களிப்பதற்கு உடை குறித்தான சிந்தனைத் தெளிவு வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர். தனக்கான வெளியைத் தானே தேர்வுசெய்ய வேண்டும்; தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக நிமிர்ந்து நடைபோட வேண்டுமென்கிறார். பெண்களின் உடலை, உடையை யாரேனும் விமரிசித்துக் குறைகூறினால், மோசமாகப் பேசினால் அது அவர்களின் அறியாமையையே வெளிக்காட்டுகிறது என்பதைப் பெண்களே புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு நிறுவவும் முற்படுகிறார். பெண்களின் ஆளுமைத்திறன் பேராற்றல் மிக்கது, அதை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் உடல். அந்த உடலைப் பற்றி எந்தக் குற்றவுணர்வும் பெண்களுக்கு இருக்கக்கூடாது.