UNLEASH THE UNTOLD

Tag: மோனிஷா

கருக்கலைப்பு

“இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற  நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள். “கட்டு கட்டப் போறேன். கொஞ்சம் வலிக்கும்…

குடிபோதை

ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள்  நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத ஒரு மாதிரி…

அம்மாவின் ஞாபகம்

“இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய விஷயம் இது….

இரு கோடுகள்

தேவிகா, வரிசையில் காத்திருந்த நோயாளிகளை ஓவ்வொருவராக அழைத்து விசாரித்து, பின்னர் அவர்களைச் சோதித்து குறிப்பெழுதி மருத்துவர் அறைக்குள் அனுப்பினாள். முதல் ஆள்களாக ஈஸ்வரியும் நிகாவும் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததுமே அகல்யா, “என்ன தேவி. உன்…

ஆனந்தக் கண்ணீர்

அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம் வியப்படைந்தது. “அட…

மாற்றம்

மருமகளிடம் அவமானப்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லாமல் கணவன் இறந்ததுமே கஜலக்ஷ்மி, அவர்கள் நிலத்தில் அமைந்துள்ள சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். மகனைப் பார்க்க வராவிட்டாலும் பேத்தியைப் பார்க்க அவ்வப்போது வந்து போவார். நிகாவிற்கும் பாட்டியிடம் கொள்ளை பிரியம்….

வைராக்கியம்

‘வாயாடி’, ‘வீம்பு பிடித்தவள்’, ‘ராங்கிக்காரி’ என்று ஈஸ்வரிக்கு இந்த ஊரில் நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. ஆனால் இந்த ஊருக்கு குணசேகரனை திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் எல்லோரையும் போல அவளும் சாதாரண பெண்ணாகத்தான்…

அறிவுரைகள்

“ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு எதுக்கு இந்தக்…

'சரியான சுயநலவாதி'

அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள் சாப்பிடாதது போல…

ஏமாற்றம்

அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது.  அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே…