UNLEASH THE UNTOLD

சிகிச்சை முடிந்த பிறகு கண்காணிப்பு அவசியம்

1990களில் இருந்து இரு சக்கர வாகனம் பயன்படுத்துகிறேன். அதில்தான் கல்லூரிக்குப் போவேன். இருசக்கர வாகனத்தை எடுத்து சுமார் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டிப் பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்தபோது என்னால் ஒரு பேனாவைக்கூடப் பிடிக்க முடியவில்லை. இப்போது வாகனத்தையே ஓட்ட முடிந்தது.

சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி...

“பொண்ணுங்க ஆண்களைவிட இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருக்குன்னு நீயே சொல்ற இல்லையாப்பா. அதனாலதான் பொண்ணுங்க கட்டாயம் சைக்கிள் கத்துக்கங்கன்னு நான் சொன்னது சரிதானே?”

உச்சக்கட்டம் உடலுக்கா உணர்வுகளுக்கா?

‘கிளி போல் மனைவியிருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்திருக்கிறான்’ என்று அந்தக்காலப் பாட்டிகள்
சொல்வார்களில்லையா? (இது இருபாலருக்கும் பொருந்தும்) அப்படி ஒருவர் காலடியில் விழுந்து கிடப்பதற்குக் காரணம் உணர்வளவில் அவர்கள் அந்த நபரிடம் உச்சக்கட்டம் அடைந்திருப்பதால்தான்.

திவான் பகதூர்

திரைப்படம் அரங்கைவிட்டு வெளியே பல இடங்களில் எடுக்கப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்ட ஊரின், நகரின் அமைப்பை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக திரைப்படம் அமைகிறது. அதே போல, அன்றைய மேல்தட்டு மக்களின், உடை, வாழ்க்கை முறை போன்றவற்றை நமக்குச் சொல்லும் திரைப்படமாகவும் இது விளங்குகிறது.

அத்தனைக்கும் ஆசைப்படு...

மலேசியா ஏர்போர்ட்டில் ட்ரான்சிட். ப்ளைட் மாறுவதற்காக டிக்கெட் ப்ளஸ் விசா செக்கிங் இடத்தில் கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டே வரிசையில் நிற்க, மல்லிகா அக்கா அவரது மகள் ஆனந்தி இரண்டுபேரை மட்டும் தனியாக தள்ளிக்கொண்டு போனார்கள். காரணம் கேட்டு பின்னாடியே ஓடினேன். “உங்கள் இருவருடைய விசாவிலும் சென்றடையும் இடம் ஹோ சி மின் சிட்டி, சீ போர்ட் ( Ho Chi Min City, Seaport) என்று இருக்கிறது. அதாவது நீங்கள் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத்தான் விசா எடுத்திருக்கிறீர்கள். ஆகாய மார்க்கமாக நீங்கள் செல்ல முடியாது, உங்களுக்கு விசா எடுத்துக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.”

காத்திருத்தல் நல்லதே!

அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைவிட, அதை நினைத்து அவள் வருத்தப்படாமல் இருப்பதே பலருக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது என்று சிலரிடம் பேசும் போது அவளுக்குத் தோன்றியுள்ளது.

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

தொழிலதிபர் சுமந்துடன் ஒரு பேட்டி

நெறியாளர். ஓ! பரவாயில்லை. உங்கள் பெற்றோர் உங்கள் இருவரையும் பெண்கள் போலத் தைரியமாக வளர்த்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்ட வேண்டும்.

மணிப்பூர் மகள்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

ஓர் இனத்தை அவமானப்படுத்த அந்த இனத்தின் பெண்களை அசிங்கப்படுத்தும் யுத்தியைப் போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியுமா? தோற்றுப் போனவனின் பொன்னையும் மணிகளையும் கொள்ளையடிப்பதைப் போல், பெண்களையும் சூறையாடும் இது என்ன மாதிரியான உளவியல்?

கருப்பையும் உடல் சமநிலையும்

“யூ ஹெவ் மிஸ்டேக்கன். நான் அப்படிச் சொல்ல வரல. சர்ஜரி இல்லாம குணப்படுத்துற பிரச்னைய சர்ஜரி பண்ணாம சரி பண்ணிக்கலாம்னு சொல்றேன். சரி சொல்லு, ரமணி அம்மாக்கு ஹிஸ்டரக்டமி பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இந்த காம்பிளிகேஷன்ஸ் பத்திலாம் தெரிஞ்சிருந்தா ஆபரேஷன் பண்ணிருப்பாரா? இங்க பிரச்னையே பிரச்சனை என்னன்னு தெரியாம இருக்குறதுதான். இந்த ஒடம்புல தேவை இல்லாத உறுப்புன்னு எதுமே இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. வேற வழியே இல்லாம ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் பிரச்னை தீர்ந்தா போதும், அதான் குழந்த பொறந்திருச்சுல இதை ரீமூவ் பண்றதுனால என்ன ஆக போகுதுங்ற அறியாமைனால ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் நெறையா வித்தியாசம் இருக்கு கவி” என்று கீதா தன் உரையை முடித்ததும் கவிதாவிடம் கேட்பதற்குக் கேள்விகள் தீர்ந்திருந்தன.