UNLEASH THE UNTOLD

எங்களுக்கும் பாக்கெட் வேணும் டீச்சர்

பெண்களின் உடைகள்ல பாக்கெட் இல்லாததால பொருள்கள், பணம் போன்றவற்றை கையிலோ, தனிப்பையிலோ கொண்டுபோக வேண்டியிருக்கு. அதனால அது மேலயே கவனம் செலுத்த வேண்டியிருக்கு.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

என்ன வசதி இருந்தாலும் வேலைக்குப் போறதை மட்டும் விட்டுடாத. அதுதான் பெண்பிள்ளைங்களுக்கு அஸ்திவாரம் மாதிரி. எந்த சூழ்நிலையிலும் அது காப்பாற்றும்.

"பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள்" - ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண் இயக்குனர் க்ளோயி ஷாவ்

கேமரா, லாப்டாப் உள்பட அத்தனையும் சூறையாடப்பட்டிருந்தன. “ஒரு விதத்தில் அந்த சம்பவம் பணம், பொருள் மேலான நாட்டத்தை முற்றிலும் ஒதுக்க வழிசெய்தது” என்கிறார் க்ளோயி.

திமிறி எழு

மோதல் தொடர்பான பாலியல் வன்முறை என்பது புராண காலத்தின் அட்டூழியம் என்றும், இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில் யுத்த பேராயுதங்களில் ஒன்றாக பாலியல் இனிப் பயன்படுத்தப்படாது என்றும் கற்பிக்கப்படும் சமகாலப் போக்கும் கவனிக்கத்தக்கது. ரகசியத்தையும் களங்கத்தையும் முழுமையாக மூடி மறைப்பதற்கான ஒரு போர்வையைத் தயார் செய்யும் ஒரு உத்தி மட்டுமே இது. இது கூட்டு மனசாட்சியின் கறையைப் பிரதிபலிக்கின்றது.

கனடா எனும் கனவு தேசம்-2

என்னை நம்பி திசை, வழி கேட்டவர்கள் பட்ட பாடு, அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதிகம் பழக்கமான ஊரிலேயே, உறியடி விளையாட்டில் சுற்றுவது போல இரண்டு முறை சுற்றிவிட்டால் போக வேண்டிய திசை குழம்பிவிடும், கண்ணை கட்டாமலேயே.

பெண் ஓவியம்

“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

யாருங்க இந்த குடும்பப் பெண்?

கல்யாணத்திற்கு முன்பு, தான் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் ஆடைகளை அணியும் பெண்ணையும், குட்டை முடி வைத்திருக்கும் பெண்ணையும், மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்கு வரும் பெண்ணையும், “இதெல்லாம் குடும்பப் பெண்ணுக்கு அழகா? இப்படியெல்லாம் அலைஞ்சா, நாளைக்கு உன்னை எவன் கட்டுவான்?” என்று குடும்பத்தினர் கண்டித்து திருத்தப் பார்ப்பார்கள். முடியாவிட்டால்,”கல்யாணம் வரைக்குமாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ”, என்று கெஞ்சுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ? அதை புகுந்த வீடு பார்த்துக் கொள்ளும்.

திகைப்பு

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.

அம்மாவின் கொடுமைகள்

க்ளாஸ் முடிஞ்சவுடனே, ஸ்கூட்டரில் போய்க்கொண்டு இருக்கும்போது, வழக்கம்போல ‘தண்ணி குடிச்சியா’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் வண்டியை நிறுத்தி,
‘நீ கீழ இறங்கு’ ‘…. …. ….. ’
‘இப்ப இறங்குறியா இல்லையா’ என்றார்.
நான் இறங்கிவிட்டேன்.
‘வீட்டிற்கு நடந்து தானாகவே நீ வா’ என்று சொல்லி வேகமாக ஸ்கூட்டரைக் கிளப்பினார்.

A Thousand Splendid Suns- காலித் ஹொசைனி

இரு வேறு நிலைகளில் வாழ்ந்த இரு வேறு வயது பெண்கள் போர், அரசியல் சூழ்நிலைகளால் ஒற்றைப் புள்ளியில் இணைந்து, வாழ்வை எதிர்கொள்ளும் ஒரு அற்புதமான கதை.